தனிமையை விரும்பும் நயன்தாரா!!!

cinema12713“பாஸ் என்ற பாஸ்கரன் படத்தில் ஆர்யா- நயன்தாரா இருவரும், இணைந்து நடித்ததில் இருந்தே, அவர்களைப் பற்றிய காதல் கிசு கிசுக்களும் புகைந்து வருகின்றன.

அது, “ராஜா ராணியில் நடித்த போது, இன்னும் உறுதியாகி விட்டது போல் இருந்தது. அப்படத்தின் பப்ளிசிட்டிக்காக ஆர்யா – நயன்தாரா திருமண அழைப்பிதழும் வெளியிட்டு, பரபரப்பு கூட்டினார்கள்.

ஆனால், ஆர்யா  பெரிதாக எடுத்துக் கொள்ளாத நிலையில், நயன்தாரா தான், டென்ஷனாகி விட்டார். இதனால், தன் சினிமா வாழ்க்கை ஆட்டம் கண்டு விடுமோ என்று அச்சமடைந்தவர், இப்போது, மீடியாக்களிடம் வாய் திறக்கத் தொடங்கியுள்ளார்.”எனக்கும், ஆர்யாவுக்குமிடையே காதல் இல்லை. நட்பு மட்டும் உள்ளது.

காதல் என்ற பெயரில், என் வாழ்க்கையில், பல சூறாவளிகள் வீசி ஓய்ந்துவிட்டன. அதனால், இப்போது நான் தனியாக வாழவே ஆசைப்படுகிறேன் என்று கூறியுள்ள நயன்தாரா, “என் வாழ்க்கையில் காதல் கசந்து விட்டதால், மீண்டும், நான் காதலிக்க வாய்ப்பே இல்லை என்றும் கூறுகிறார்.