சாய்பாபா வேடத்தில் நடிக்க விரதமிருக்கிறார் மலையாள நடிகர் திலீப்!

cinema13713சாய்பாபாவை மையப்படுத்தி ஏற்கனவே நாகார்ஜூனா நடிப்பில் ஷிர்டி சாய் என்ற பெயரில் ஒரு தெலுங்கு படம் வெளியானது. அதையடுத்து இப்போது சமாதியாகி விட்ட புட்டபர்த்தி சாய்பாபாவின் வாழ்க்கை வரலாறை மையப்படுத்தி சாய்பாபா என்றொரு படம் தயாராகிறது. இப்படத்தை பிரபல இயக்குனர் கோடி ராமகிருஷ்ணா இயக்குகிறார்.

இப்படத்தில் நடிக்க பல முன்னணி தெலுங்கு ஹீரோக்களே தயாராக இருந்தார்களாம். ஆனால், சாய்பாபாவின் உருவத்துக்கு ஓரளவாவது பொருந்தியிருக்கும் நடிகர் நடித்தால்தான் படம் சிறப்பாக இருக்கும் என்று இந்தியா முழுக்க உள்ள நடிகர்களை பரிசீலித்து வந்த கோடிராமகிருஷ்ணா, இப்போது மலையாள நடிகர் திலீப்பை சாய்பாபாவாக நடிக்க தேர்வு செய்திருக்கிறார்.

சாய்பாபாவின் இளமைக்காலம் முதல் அவர் சமாதி ஆனது வரை அவர் நிகழ்த்திய பல அற்புதங்களையும் இப்படத்தில் பதிவு செய்கிறார்களாம். புட்டபர்த்தி மற்றும் இமாச்சல பிரதேசத்தில் இதன் படப்பிடிப்பு விரைவில் நடைபெற உள்ளதாம். அதனால், படத்தில் நடித்து முடிக்கும் வரை சுத்தமாக இருக்க முடிவெடுத்துள்ள திலீப்,. இப்போதே தனது விரதத்தை தொடங்கி விட்டாராம்.