தமிழக முதல்வரை சந்திக்க சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய விஜய்

vijay_jaya_001கொடைநாட்டில் தங்கியுள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க நடிகர் விஜய், அவரது தந்தை எஸ்.ஏ. சந்திரசேகர் ஆகியோர் முயற்சி செய்துள்ளனர்.

ஆனால் அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால்  இருவரும் ஏமாற்றத்துடன் திரும்பியுள்ளனர்.

கொடநாட்டுக்கு முன்னர் உள்ள கெரடாமட்டம் என்ற இடத்தில் உள்ள சோதனைச் சாவடி பகுதியிலேயே இருவரும் தடுத்து நிறுத்தப்பட்டு திருப்பி அனுப்பப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நாளை தலைவா படம் வெளியிடவுள்ள நிலையில், இந்தப் படம் அரசியல் படம் என்றும், அதனை திரையிட்டால் திரையரங்குகளில் குண்டு வைப்போம் என்றும் மிரட்டல் வந்தததால், இப்படத்தை திரையிடுவதில் சிக்கல் எழுந்துள்ளது.

மேலும், பொலிஸார் தங்கள் தரப்பில் இத்தனை திரையரங்குகளுக்கு பாதுகாப்பு அளிக்க இயலாது என்று கூறியிருந்தனர்.

இந்நிலையில், முதல்வரைச் சந்தித்து விளக்கமளிக்கவும் அவரது ஆதரவைக் கேட்கவும் நடிகர் விஜய், அவரது தந்தை சந்திரசேகருடன் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது.