தமிழ் நடிகர்கள், நடிகைகளை காட்டிலும் மலையாள நடிகைகள் பர்பக்ஷன், பஞ்சுவாலிட்டி மிக்கவர்கள்!!!

raja raniஇயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தயாரிப்பில், புதியவர் அட்லி இயக்கத்தில், ஜீ.வி.பிரகாஷ் இசையமைப்பில், ஆர்யா-நயன்தாரா, ஜெய்-நஸ்ரியா ஜோடிகள் நடித்திருக்கும் ‘ராஜா ராணி’ திரைப்பட ஆடியோ வெளியீட்டு விழா, சென்னை சத்யம் திரையரங்கில் நடைபெற்றது!

இவ்விழாவில் பேசிய இப்படத்தின் தயாரிப்பாளர் ஏ.ஆர்.முருகதாஸ், நடிகை நயன்தாராவை தூக்கி பேச வேண்டும், கால்ஷீட் சொதப்பி இவ்விழாவிலும் கலந்து கொள்ளாத நஸ்ரியாவை தாக்கி பேச வேண்டும் என்பதற்காக, பொதுவாக தமிழ் நடிகர்கள், நடிகைகளை காட்டிலும் மலையாள நடிகைகள் பர்பக்ஷன், பஞ்சுவாலிட்டி மிக்கவர்கள், தான் உண்டு தன் வேலையுண்டு என்று அலட்டி கொள்ளாமல் ஷூட்டிங்கிற்கு வந்து போவார்கள்.

நயன்தாராவும் இதற்கு விதிவிலக்கல்ல! இதை இப்போது புதிதாக வரும் மலையாள நடிகைகளும் கவனத்தில் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கேரளாவில் இருந்து சமீபமாக இறக்குமதியாகி இப்படத்திலும் நடித்து கால்ஷீட், சொதப்பிய நஸ்ரியாவை தாக்கினார். கூடவே மற்ற தமிழ் நட்சத்திரங்களையும் தாக்கி பேசியது கோடம்பாக்கத்தில் பரபரப்பை கிளப்பிவிட்டுள்ளது!

அதேமாதிரி ஆர்யா தன் ஜோடி நயன்தாரா பற்றி ஒருவார்த்தை கூட குறிப்பிடாமல் பேசியதும், ஜெய்-நஸ்ரியா ஆப்செண்ட் ஆனதும் ராஜா ராணி ஆடியோ விழாவை அப்செட் ஆக்கிவிட்டது! பாவம்!!