இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன்!- நடிகர் கருணாஸ் உத்தரவாதம்

karunasதமிழகத்தில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன். என நகைச்சுவை நடிகர் கருணாஸ் தெரிவித்தார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை சேலத்தில் அகில இந்திய தேவர் பேரவை சார்பாக பெரியார் பல்கலைக்கழக துணை வேந்தர் டாக்டர் கி.முத்துச்செழியனுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவில் சிறப்பு விருந்தினராக  கலந்துகொண்டார்.

அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது,

இது எங்கள் தேவர் சமுதாயத்தின் குடும்ப விழா. எங்கள் தேவர்கள் குடும்ப விழா. எங்கள் முக்குலத்தோர் புலிப்படை அமைப்பு மூலம் தமிழகம் முழுக்க உள்ள தேவர் குடும்பங்களை ஒரே குடும்பமாக இணைத்து வருகிறோம்.

தமிழகத்தில் ஆயிரம் மதிப்பெண்களுக்கு மேல் வாங்கும் இலங்கை அகதிகள் குழந்தைகளின் உயர்கல்விக்கு நான் உதவுகிறேன்.

அவர்கள் பி.இ, எம்.பி.ஏ போன்ற உயர்படிப்பு படிக்க அனைத்துவித உதவியும் செய்து வருகிறேன்.

இதில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பயன்பெற்றுள்ளனர்.

இனியும் தொடர்ந்து செய்வேன்.

எனவே படிக்க ஆர்வம் இருந்து,பொருளாதார சூழல் இடம் கொடுக்கவில்லை என்றால் தயங்காமல் கருணாஸை வந்து பார்க்கலாம்.

அவர்களுக்காக என் வீட்டு கதவு திறந்தே இருக்கும். என்றார் நகைச்சுவை நடிகர் கருணாஸ்.