இலங்கையின் கிரிக்கெட் வீழ்ச்சிக்கு வழிவகுத்த இந்தியாவுடன் சதியில் ஈடுபட்டதாக கூறப்படுவோர் பற்றிய விபரங்களை வெளியிடப்போவதாக இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்க எச்சரிகை விடுத்துள்ளார். கொழும்பில் உள்ள பி.சரவணமுத்து சர்வதேச கிரிக்கட் மைதானத்தில் நடைபெறும் சட்டத்தரணிகளுக்கான உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் ஆரம்ப நிகழ்வின் போதே ரணதுங்க…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்பிற்கு ஆதரவு இல்லை…
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் தமிழ் தரப்பிற்கு ஆதரவு இல்லை என தமிழர் மனித உரிமை மையத்தின் பொதுச்செயலாளர் எஸ்.வீ கிருபாகரன் தெரித்தார். ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40வது கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான விவாதம் இடம்பெற்று வருகின்றது. இந்தநிலையில் இதுதொடர்பாக ஜெனீவாவிலுள்ள ஆதவனின் சிறப்பு செய்தியாளர்களுக்கு வழங்கியுள்ள…
விடுதைப்புலிகளின் முக்கிய தலைவர் பொட்டு அம்மான் உயிருடன்தான் இருக்கிறார்; ஆனால்…
விடுதலை புலிகளின் முக்கியஸ்தர்களில் மிகவும் முக்கியமானவராக இன்று வரை கண்காணிக்கப்படும் பொட்டு அம்மான் என்று விடுதலை புலிகளின் தளபதியின் உண்மையான பெயர் சண்முகலிங்கம் சிவசங்கர் என்பதாகும். அவரின் பேச்சுத்திறமைகளை நாள் முழுவதும் கேட்டுக்கொண்டிருக்கலாம். இவர் தேசிய தலைவரின் பாதுகாப்பிற்கு முழுப்பொறுப்பாக இருந்தவர். தலைவரின் பொறியல் சிந்தனைகளுக்கு வடிவம் கொடுத்த…
ஒவ்வொரு முறையும்,இலங்கைக்கு இரண்டு வருடம் ஏன் ? சிறிதரன் எம்பி…
இலங்கை விவகாரத்தில் மிகவும் இறுக்கமான பிரேரணை கொண்டுவரவேண்டுமென நாங்கள் ஐ.நா. மனித உரிமை பேரவையிடமும், ஐக்கிய நாடுகள் சபையின் உறுப்பு நாடுகளிடமும் கோரிக்கை விடுக்கின்றோம். இதனூடாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன் இன்று ஜெனிவாவில் தெரிவித்தார். ஜெனிவா வளாகத்தில்…
விடுதலைப்புலிகளை கூண்டில் நிறுத்த திட்டம், துணைபோகுமா ஜனநாயக போராளிகள் கட்சி?
இலங்கைத் தமிழ் மக்களின் பேரழிவாக கருதப்படும் முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்கு நீதிகோரி உலகெங்கும் உள்ள நடுநிலையாளர்கள் ஐக்கிய நாடுகள் சபை வரை சென்று போராடிவருகின்றனர். இவ் அழிவு தொடர்பில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமர்வில் பல பிரேரனைகள் முன்வைக்கப்பட்டு இலங்கை அரச படைகள் செய்த தவறுகள் வெளி உலகத்திற்கு…
விருப்பத்திற்கு மாறாக தமிழ் மக்கள் ஆளப்படுகின்றனர்! – சம்பந்தன்
விருப்பத்திற்கு மாறாக தமிழ் மக்கள் ஆளப்படுவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அத்தோடு இலங்கை தொடர்பான பிரச்சினையை தொடர்ந்தும் சர்வதேச மட்டத்தில் எடுத்துச்செல்ல வேண்டும் என ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல் பிரிவின் செயலாளர் நாயகத்திடம் அவர் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐ.நா.வுக்கான முன்னாள் அரசியல்…
தமிழின அழிப்புக்கு நீதி கோரி ஜெனிவாவில் சிறீதரன் எம்.பி உரை!
ஜெனிவா வளாகத்தில் இடம்பெறும் இலங்கை தொடர்பான முக்கிய உப குழுக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிதரன் உரையாற்றவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைப் பேரவையின் கூட்டத்தொடரானது ஆரம்பமாகியுள்ள நிலையில் நாளை குறித்த உப குழுக்கூட்டம் இடம்பெறவுள்ளது. பசுமைத் தாயக அமைப்பானது ஏற்பாடு செய்துள்ள குறித்த…
கண்ணீரில் மூழ்கியது யாழ்…
போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ‘நீதிக்காய் எழுவோம்’ மாபெரும் மக்கள் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணி முற்றவெளி வரை இடம்பெறுகின்றது. இந்தப் பேரணிக்கு தமிழ் மக்கள் பேரவை, தமிழர் விடுதலைக் கூட்டணி,…
இலங்கையில் பெருங்கற்காலத்தில் தமிழர்கள் வாழ்ந்த இடம்; அழிந்து வருவதாக மக்கள்…
இலங்கையின் கிழக்கு மாகாணம் - அம்பாறை மாவட்டத்தின் சங்கமன் கண்டி பிரதேசத்துக்கு அருகேயுள்ள காட்டுப் பகுதியில் காணப்படும், தமிழ் மொழியைப் பேசிய பெருங்கற் பண்பாட்டு மக்கள் வாழ்ந்தமைக்கான தொல்லியல் ஆதாரங்கள் சூரையாடப்பட்டும், அழிவடைந்தும் வருகின்றமையினால், அவற்றினைப் பாதுகாப்பதற்கான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென, அப்பிரதேச மக்கள் வலியுறுத்துகின்றனர். சங்கமன்…
ஈழ இனப்படுகொலையை மறக்கவும் மாட்டோம்! மன்னிக்கவும் மாட்டோம்!!
கடந்த மாதம் கிளிநொச்சிக்கு வந்த ஸ்ரீலங்காப் பிரதமர், ரணில் விக்கிரமசிங்க, மறப்போம் மன்னிப்போம் என்றொரு வாசகத்தை கூறிச்சென்றிருந்தார். ஈழத் தமிழ் மக்களை கடும் கோபத்திற்கு உள்ளாக்கிய வாசகம் அது. உலகம் முழுவதும் உள்ள தமிழ் மக்கள் ரணில் விக்கிரமசிங்கவின் இந்தப் பேச்சை கண்டித்து கருத்துக்களை வெளியிட்டு இருந்தார்கள். சிங்கள…
வடக்கில் தமிழ் பெண்களை பாலியல் வல்லுறவுக்குட்படுத்தி வீடியோ எடுத்து விற்பனை…
வடக்கில் பெண்களை பாலியல் வன் கொடுமைக்குட்படுத்தி வீடியோக்களை எடுத்து பெருமளவு பணத்திற்கு விற்பனை செய்யும் சம்பவங்கள் அதிகாித்துள்ளதாக மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) அதிா்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது. ஜே.வி.பியின் சிரேஸ்ட நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரான பிமல் ரத்நாயக்க இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். புலம்பெயர் தமிழர்களின் நிதியீட்டத்தைக் கொண்டு…
’காணாமற்போன உறவுகளை தேடும் பெண்கள் மீது துன்புறுத்தல்’
இலங்கையிலிருந்து காணாமலாக்கப்பட்ட உறவுகளைத் தேடும் பெண்கள், பாதுகாப்புத் தரப்பு அதிகாரிகளாலும், அரசாங்க அதிகாரிகளாலும், பாலியல் ரீதியிலான துன்புறுத்தல்களுக்கு ஆளாக்கப்படுவதாக, ஐக்கிய அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. அத்தோடு, இலங்கைப் பொலிஸார், தொடர்ச்சியாக சித்திரவதைகளில் ஈடுபட்டு வருகின்றனர் என்றும், அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ள, 2018ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள்…
தமிழின அழிப்புக்கு சர்வதேசத்திடம் நீதி கோரி யாழில் மாபெரும் பேரணி!
போர்க்குற்றங்களுக்கு நீதி வழங்குவதற்குச் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ‘நீதிக்காய் எழுவோம்’ மாபெரும் மக்கள் எழுச்சிப் பேரணி யாழ். பல்கலைக்கழக மாணவர்களின் ஏற்பாட்டில் இன்று முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. யாழ். பல்கலைக்கழக வளாகத்தில் ஆரம்பித்த இந்தப் பேரணி முற்றவெளி வரை இடம்பெறுகின்றது. இந்தப் பேரணிக்கு தமிழ் மக்கள் பேரவை, தமிழர் விடுதலைக்…
வன்பலம் குன்றியபோது மென் பலத்தினால் எமது அபிலாஷைகளை நாம் அடைவோம்!
வன் பலம், மென் பலம் ஆகிய இருவேறு தடத்தில் எமது இனம் பயணித்தது. வன்பலம் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர், மென்பலத்தினூடாகப் பயணித்த எமது கட்சி, தமது அணுகுமுறைகளில் சிற்சில மாற்றங்களை ஏற்படுத்தி, சர்வதேசத்தின் ஆதரவுப் பலத்தைத் திரட்டி எமது மக்களின் நியாயமான அபிலாஷைகளை நாம் அடையவேண்’டும். அதற்கான முனைப்புகளுடன் தற்போது செயற்படுகின்றோம்.…
அம்பாறை மாவட்டத்தின் வரலாற்றில் இருந்து மறைந்து போகும் ஒரு சைவத்…
அண்மையில் மட்டக்களப்பின் சமூக ஆர்வலரும், வரலாற்றுப் பட்டதாரியுமான திரு.வை.சத்தியமாறன் இணையதளம் ஒன்றில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள புராதன சிவன் ஆலயம் ஒன்றின் புகைப்படங்களைப் பிரசுரித்து அவ்வாலயம் தமிழர்களால் பாதுகாக்கப்படவேண்டும் என்ற தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார். அப்புகைப்படங்களில் இருந்து அது ஒரு புராதன ஆலயமாக இருக்கலாம் என்பதை கிழக்குப்…
இதற்கெல்லாம் அரசுதான் பதில் சொல்லியாக வேண்டும்! சிறீதரன் எம்.பி ஆதங்கம்
ஜனநாயக ரீதியில் தெரிவுசெய்யப்பட்ட அரசிடம் தமது பிள்ளைகளை ஒப்படைத்தவர்கள், பிள்ளைகள் விசாரிக்கப்பட்டு ஏதோவொரு தண்டனையுடன் திரும்பி வருவார்கள் என்றே இன்னமும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.அவர்களிடம் போய் காணாமல்போனவர்கள் இன்னமும் உயிருடன் இருப்பார்களா என்று கேட்பதில் எந்தவித நியாயமும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். அத்துடன், அரசிடம்…
விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி வாழ்வாதாரத்துக்கு போராடும் அவலம்
புதிய ஊன்றுகோல் ஒன்றினை வாங்குவதற்கு வசதியற்றிருக்கும் ஜெகன், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் போராளி. நந்திக் கடல் பகுதியில் நடந்த இறுதி யுத்தத்தில், இலங்கைப் படையினருக்கு எதிராக ஆயுதமேந்திப் போரிட்ட போது, தமது இடது காலினை அவர் இழந்தார். தன் 15ஆவது வயதில் விடுதலைப் புலிகள் அமைப்பில்…
கால அவகாசம் கோருதல் எப்போது முடிவடையும்?
ஐ. நா மனித உரிமைகள் பேரவை விடயத்தில், அரசாங்கத்தின் நடவடிக்கைகள் விசித்திரமானவையாகவே இருக்கின்றன. ஜனாதிபதியும் பிரதமரும் அந்த விடயத்தில் கடைப்பிடிக்கும் அணுகுமுறைகளைப் பார்க்கும் போது, நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்கின்றனவா என்று, மனித உரிமைகள் பேரவையின் அதிகாரிகள் நினைக்கலாம். ஏனெனில், அவ்விருவரும் வெவ்வேறாக, அப்பேரவை தொடர்பான விடயங்களைக் கையாளப்…
மன்னார் மனிதப் புதைகுழியும் கார்பன் அறிக்கையும்
மன்னார், சதொச கட்டட வளாகத்தில், கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியிலிருந்து மீட்கப்பட்ட மனித எச்சங்கள், கி.பி 1477 - 1642 காலப்பகுதிக்குரியவை என்று, கார்பன் பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அறிக்கையை முன்வைத்து, வாதப்பிரதி வாதங்கள் கடந்த சில நாள்களாக, அனைத்து மட்டங்களிலும் முன்னெடுக்கப்படுகின்றன. அதுவும், திருக்கேதீஸ்வர கோவில் நுழைவு…
எங்களுக்காக போராடியவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டிய நேரம் இதுதான்; ஒன்றிணையுங்கள்…
தமிழர் தாயகம் கோரி கடந்த காலங்களில் ஈழத்தில் இடம்பெற்ற போராட்டத்தில் பல தமிழர்கள் பங்குபற்றி தனியீழத்துக்காக போராடிய நிலையில், பல போர் குற்றங்களை நிகழ்த்தி தமிழர்களை கொன்று குவித்தும், பல தமிழர்களை மாற்றுத்திறனாளியா மாற்றியது ஸ்ரீலங்கா இராணுவம். அந்த வகையில் கடந்த காலங்களில் போரில் சிக்கி மாற்றுத்திறனாளிகளாக தன்னம்பிக்கையுடன்…
சர்வதேச மேற்பார்வை நீக்கப்படுமாயின் அரசாங்கம் தப்பித்துவிடும்: கூட்டமைப்பு
சர்வதேச மேற்பார்வை நீக்கப்படுமானால் இலங்கை அரசாங்கம் போர்க்குற்றங்களில் இருந்து தப்பித்துவிடும், என தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சீனித்தம்பி யோகேஸ்வரன் தெரிவித்துள்ளார். ஜெனிவாவில் இடம்பெற்றுவரும் மனித உரிமை கூட்டத்தொடர் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு தொடர்ந்து…
அரசியல் தீர்வின்றி எதனையும் பெற்றுக்கொள்ள மாட்டீர்கள்: சம்பந்தன்
பாதிக்கப்பட்ட மக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கும் அரசியல் தீர்வை வழங்காமல் அரசாங்கம் எதனையும் பெற்றுக்கொள்ளாதென தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார். வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இறுதிநாள் விவாதம் நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்று வருகின்றது. அதில் பங்கேற்று உரையாற்றியபோதே சம்பந்தன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். சம்பந்தன்…
‘தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள், அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள்’
“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்கள் அதிகாரத்தால், அதன் வழிவந்த செல்வச் செழிப்பால்;, அரச அனுசரணைகளால் மயங்கி நிற்பவர்கள். கால அவகாசம் கொடுத்தால் தமக்கு அது வரை நல்ல காலம் என்ற நோக்கில் கால அவகாசத்தை சிபார்சு செய்யலாம். தேர்தலில் நிற்காமலேயே அவர்கள் சிலருக்கு போனஸ் ஆசனங்கள் காத்திருப்பன. எம்மால்…
ஐக்கிய இலங்கைக்குள் தீர்வுகாண தமிழ் மிதவாதிகள் ஒத்துழைப்பு வழங்குவார்கள்: இரா.சம்பந்தன்
“பிரிக்க முடியாத ஐக்கிய இலங்கைக்குள் அரசியல் தீர்வு காண தமிழ் மிதவாதிகள் எப்போதும் ஒத்துழைப்பை வழங்குவார்கள்.” என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இடம்பெற்றுவரும் வரவு- செலவுத் திட்டத்தின் மீதான விவாதத்தில் இன்று செவ்வாய்க்கிழமை கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.…






















