இலங்கையை கண்ணி வெடிகள் அற்ற நாடாக மாற்றுவோம்

இலங்கையின் வடக்கு, கிழக்கிலிருந்து இடம்பெயர்ந்த அனைவரையும் அடுத்த 3 வருடங்களுக்குள் மீள்குடியமர்த்த அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார். நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில் “2027 ஆம் ஆண்டுக்குள் கண்ணிவெடிகள் அற்ற நாடாக இலங்கையை மாற்ற விசேட…

இலங்கையில் 7 நாடுகளுக்கு இலவச விசா

2024.03.01 ஆம் தேதி வரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் சீனா, இந்தியா, ரஷ்யா, இந்தோனேஷியா, தாய்லாந்து, மலேஷியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுக்கு இலவச வீசா வழங்கும் திட்டம் ஒன்று நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனை குறிப்பிட்டுள்ளது. கடந்த 24…

போரில் உயிரிழந்தவர்களை விட வீதி விபத்துக்களில் உயிரிழந்தவர்கள் அதிகம்

ஒரு சில நபர்கள் தங்களது தனிப்பட்ட பாதுகாப்பிற்காக தனியார் பாதுகாப்புக் காவலர்களின் சேவைகளைப் பெறுவது குறித்துத் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. இந்தக் குழு அதன் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்  (கலாநிதி) சரத் வீரசேகர தலைமையில் 2023.11.22 ஆம் தேதி நாடாளுமன்றத்தில் கூடிய…

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கே நீக்கம்

இலங்கை விளையாட்டுத் துறை அமைச்சர் ரோஷன் ரணசிங்கேவை பதவியில் இருந்து இன்று அதிரடியாக நீக்கி அந்நாட்டு அதிபர் ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டுள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி சரிவர விளையாடாததை அடுத்து, அந்த அணிக்கு எதிராக உள்நாட்டில் பெரும் சர்ச்சை வெடித்தது.…

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழர்களுக்கில்லையா ?

இறந்தவரை நினைவுகூரும் உரிமை தமிழருக்கில்லையா? இந்த அநீதி வேறு எந்த நாட்டில் நிகழ்கின்றது என நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் ஈஸ்வரபாதம் சரவணபவன் கேள்வியெழுப்பியுள்ளார். மாவீரர் தின இறுதி நாள் நினைவேந்தல் இன்றைய தினம் (27.11.2023) இடம்பெறவுள்ள நிலையில் காரைநகர் பகுதியில் நினைவேந்தலை முன்னெடுக்கும் செயற்பாட்டாளர்களுக்கு பொலிஸாரால் வழங்கப்பட்ட அழைப்பு…

மீண்டும் போராட்டத்தில் இறங்கும் தொழிற்சங்கங்கள்

அரச மற்றும் மாகாண பொதுச் சேவை தொழிற்சங்கங்கள் ஒன்றிணைந்து போராட்டம் ஒன்றை நடத்த தீர்மானித்துள்ளதாக அதன் அழைப்பாளர் சந்தன சூரியராச்சி தெரிவித்துள்ளார். ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். கோரிக்கைகள் மேலும் கூறுகையில், பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, இன்று (27) நண்பகல் 12.00…

விளையாட்டுத்துறை அமைச்சர் இன்று நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பை வெளியிடவுள்ளார்

நாட்டின் கிரிக்கெட் நெருக்கடி தொடர்பில் இடம்பெற்றுவரும் சர்ச்சைகள் தொடர்பில் விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க திங்கட்கிழமை நவம்பர் அன்று நாடாளுமன்றத்தில் முக்கிய அறிக்கையொன்றை வெளியிடவுள்ளார். இது தொடர்பில் நவம்பர் 25 ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர், நாளை நாடாளுமன்றத்தில் இது தொடர்பான உண்மையை வெளிப்படுத்த உள்ளதாக உறுதியளித்தார். "நான்…

இஸ்ரேலுக்கு அனுப்பப்படும் இலங்கையர்கள்

தற்போது இஸ்ரேலுக்கு அனுப்பவுள்ள தொழிலாளர்களுக்கு இராணுவப் பயிற்சி அளிக்கப்படுவதாக கூறப்படுவதில் எந்த உண்மையும் கிடையாது. இஸ்ரேலினால் காஸாவில் பிடிக்கப்படட இடங்களுக்கு இவர்கள் தொழிலுக்கு அனுப்பப்பட மாட்டார்கள்  என வெளிநாட்டு வேலைவாய்ப்புத் துறை அமைச்சர் மனுஷ நாணயக்கார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற அமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே…

எந்தவித தடைகள் வந்தாலும் நினைவேந்தல்கள் முன்னெடுக்கப்படும்

எந்தவித தடைகள் வந்தாலும் எதிர்வரும் மாவீரர் தினத்தன்று (27) உறவுகள் இறந்த நாளினை நினைவு கூருவோம் என முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். அளம்பில் மாவீரர் துயிலும் இல்லத்தில் முல்லைத்தீவு பொலிஸாரால் தடையுத்தரவை வழங்கிய பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலே இவ்வாறு தெரிவித்தார்,தொடர்ந்து கருத்து…

எதிர்கால சந்ததியினருக்காக நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் – ஜனாதிபதி ரணில்

நமக்காக அன்றி எதிர்கால சந்ததியினருக்காகவே நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். ஆனால் எதிர்க்கட்சிகள் தம்மைப் பற்றி மாத்திரமே சிந்திப்பதாகவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படுவதே சிறந்த வழி எனவும், அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டு பெறும் அனுபவத்தின் அடிப்படையில் அடுத்த தேர்தலில் அரசாங்க அதிகாரத்தைப் பெற…

சஜித் பிரேமதாசவுக்கு எதிராக டயானா கமகே தாக்கல் செய்த மனு…

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு எதிராக தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் முறையே ஐக்கிய மக்கள் சக்தியின்; தலைவர் மற்றும் பொதுச்செயலாளர் பதவிகளில் கடமையாற்றுவதை தடுக்கும்…

இலங்கையில் இருந்து 13 சிறுவர்கள் ஐரோப்பாவுக்கு கடத்தல்

இலங்கை சிறுவர்கள் மலேசியா ஊடாக ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்பட்டமை தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகத்தினால் சமர்ப்பிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. வடக்கு, கிழக்கில் வசிக்கும் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் முதலில் சட்டப்பூர்வ கடவுச்சீட்டு மூலம் மலேசியாவிற்கு…

வெளிநாடுகளில் இருந்து இலங்கைக்கு பொருட்களை அனுப்பும் வீட்டுக்கு வீடு விநியோக…

இலங்கைக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்களை அனுப்பும் வீட்டுக்கு வீடு (DOOR TO DOOR) முறையை உடனடியாக நடைமுறைக்குவரும் வகையில் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு இலங்கை சுங்க திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாட்டினர் இம்முறையின் மூலம் இலங்கைக்கு பல்வேறு பொருட்களை அனுப்புவதுடன், குறித்த பொருட்கள் தனியார் போக்குவரத்து முகவர் நிலையங்கள் மூலம்…

இலங்கையில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட ஐவர் கைது

இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்திற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அமெரிக்க அதிபரின் புகைப்படத்தை எரிக்க முற்பட்ட 05 பேர் செய்யப்பட்டுள்ளனர். இஸ்ரேல் - பலஸ்தீன போர் மோதல்களில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா ஆதரவளித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தை "மக்கள் போராட்ட இயக்கம்" ஏற்பாடு செய்துள்ளதாக உள்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. அதன்போது, தூதரகத்திற்கு…

இந்திய இழுவை படகுகளை தடை செய்யக்கோரி முல்லைத்தீவில் போராட்டம்

முல்லைத்தீவு மாவட்ட கடற்தொழில் அமைப்புக்களும் யாழ்பாண கிராமிய கடற்தொழில் அமைப்புக்களும் ஒன்றிணைந்து இந்திய இழுவைப்படகுகளை தடை செய்யகோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டமானது இன்று முல்லைத்தீவு மாவட்ட செயலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன் போது அவர்கள் இந்தியன் இழுவைமடிப்படகின் எல்லை தாண்டிய சட்டவிரோத கடற்தொழிலைத் தடுப்பதற்கான மனுவொன்றை…

இலங்கையில் குழந்தைகள் விற்பனை நார்வே பெண் குற்றச்சாட்டு

சிசுக்கள் மற்றும் சிறு குழந்தைகளை வெளிநாட்டவர்களுக்கு தத்தெடுப்பதற்காக விற்பனை செய்யும் ஒழுங்கமைக்கப்பட்ட மோசடி தொடர்பில் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நேற்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தது. இந்நிலையில், கொழும்பு பிரதான நீதவான் பிரசன்ன அல்விஸிடம் அறிக்கை சமர்ப்பித்ததுடன், கண்டி பிரதேசத்தில் நீண்டகாலமாக செயற்படும்…

கிரிக்கெட் வழக்கு மீண்டும் ஒத்திவைப்பு

ஶ்ரீலங்கா கிரிக்கெட்  நிறுவனத்திற்கு இடைக்கால கட்டுப்பாட்டு குழுவொன்றை நியமிக்க விளையாட்டுத்துறை அமைச்சர் எடுத்த தீர்மானத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனுவின் மேலதிக விசாரணை நாளைய தினம் வரை மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. இந்த மனு இன்று மேன்முறையீட்டு நீதிமன்றில் மீள் பரிசீலனைக்கு அழைக்கப்பட்ட நிலையில், விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர்…

விடுதலைப் புலிகளின் உபகரணங்களை தேட நடவடிக்கை

போரின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்கால் மேற்கு பகுதியில் உள்ள கடற்கரை பகுதி ஒன்றில் விடுதலைப் புலிகளால் புதைத்து வைத்ததாக நம்பப்படும் இடம் ஒன்றினை நீதிமன்ற உத்தரவுக்கு அமைய தோண்டும் நடவடிக்கை இன்று (23) முன்னெடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான வழக்கு கடந்த 19 ஆம் திகதி முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றில்…

உளவு கப்பல்களாக இருந்தால் இலங்கைக்குள் அனுமதிக்கமாட்டோம்

சீனா உட்பட எந்தவொரு நாட்டிலிருந்து வரும் ஆராய்ச்சி மற்றும் ஆய்வுக் கப்பலை இலங்கை வரவேற்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அண்மையில் வழங்கிய நேர்காணலொன்றில் வைத்து அவர் இதை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில், சீனாவின் யுவான் வாங் 5 மற்றும் ஷி யான் 6 ஆகிய கப்பல்கள்…

உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பை உறுதி செய்ய நடவடிக்கை

இந்து சமுத்திரம் எந்தவொரு உலக பலவான்களின் தனிப்பட்ட ஆதிக்கத்துக்கு உள்ளாகாமல் இருப்பதை உறுதிப்படுத்துவதற்கான பொருளாதார, அரசியல் மற்றும் வெளிநாட்டு தொடர்புகள் உள்ளிட்ட சாத்தியமான கொள்கை அடிப்படையில் விரிவான மூலோபாயத் திட்டமொன்று அவசியனெ அதிபர் ரணில் விக்ரமசிங்க வலியுறுத்தினார். அதனால், உலகளாவிய குழப்பங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும் எனவும்…

தமிழர்களுக்கு எதிரான இனவழிப்பை மறைக்க இலங்கை முயற்சி முயற்சிக்கின்றது

இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்ததின் போது தமிழ் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இனவழிப்பை சர்வதேச சமூகத்தினரிடமிருந்து மறைக்க இலங்கை அரசாங்கம் முயற்சிக்கின்றது என கனடாவின் பிராம்டன் நகர முதல்வர் பற்றிரிக் பிரவுன் தெரிவித்துள்ளார். கனடாவின் பிரம்டன் நகரசபை வளாகத்தில் நேற்று(21) இடம்பெற்ற தமிழீழ தேசியக்கொடி ஏற்றப்பட்ட வரலாற்று நிகழ்வில் உரையாற்றிய…

தமிழர்களின் பிரச்சினைக்கு தீர்வளிக்கத் தவறிய ரணில் அரசாங்கம் : சுமந்திரன்

தமிழ் மக்களுக்கான உரிமைப் போரில் தமது உயிர்களை ஈகம் செய்த மாவீரர்களை இந்த மாவீரர் வாரத்தில் நினைவு கூருவதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அதேநேரம், சிறிலங்கா நாடாளுமன்றமும் அதிபர் ரணில் விக்ரமசிங்கவும் தமிழ் மக்களின் நீண்ட கால பிரச்சனைக்கு தீர்வளிக்க தவறியுள்ளதாக…

இலங்கை – தாய்லாந்து சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

இலங்கை - தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் 2024.02.03 ஆம் திகதி கையொப்பமிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. அத்துடன், இலங்கை - தாய்லாந்து உத்தேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான கலந்துரையாடலை டிசம்பருக்குள் நிறைவு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது. வரித் தளர்த்தல் வேலைத்திட்டம் குறித்த கலந்துரையாடலின் 06 ஆம் மற்றும் 07 ஆம் சுற்றுக்களில்…