பிகேஆர் தலைமைச் செயலாளருக்கு எதிராக இசி துணைத் தலைவர் போலீசில்…

தேர்தல் ஆணைய(இசி)த் துணைத் தலைவர் வான் அஹ்மட் வான் ஒமார், தம்மை முன்னாள் அம்னோ உறுப்பினர் என்று கூறிய பிகேஆர் தலைமைச் செயலாளர் சைபுடின் நசுத்தியோனுக்கு எதிராக போலீசில் புகார் செய்துள்ளார். ஒரு மாதத்துக்குமுன் சைபுடின் அவ்வாறு கூறியது பொய்யென்று நிரூபிக்கப்பட்டிருப்பதால் அதற்காக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும்…

பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என…

அடுத்த பொதுத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர் பட்டியல் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் என கருத்துக்கணிப்பு ஒன்றுக்கு உட்படுத்தப்பட்டவர்களில் பெரும்பாலோர் விரும்புவது தெரிய வந்துள்ளது. பெர்சே பேரணிக்கு ஒரு நாள் முன்னதாக அந்தக் கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. அதனை சுயேச்சை அமைப்பான மெர்தேக்கா மய்யம் மேற்கொண்டது. கடந்த மாதம் மேற்கொள்ளப்பட்ட அந்த ஆய்வின்…

பாஸ் இளைஞர்கள் என்எஸ்டி அலுவலகத்துக்கு வெளியில் ஆர்ப்பாட்டம்

பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் நிக் அப்துல் அஜிஸ் நிக் மாட்-டை 'father of kafir' எனக் கூறி வெளியிட்ட செய்திக்கு ஆட்சேபம் தெரிவிக்கும் பொருட்டு அந்தக் கட்சியின் இளைஞர் பிரிவு உறுப்பினர்கள் இன்று கோலாலம்பூர் பங்சாரில் அமைந்துள்ள என் எஸ்டி என்ற நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் பத்திரிக்கைத்…

பெர்க்காசா மே 10 ஆர்ப்பாட்டத்தில் பினாங்கு கிம்மா “சம்பந்தப்படவில்லை”

பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங் வீட்டுக்கு முன்னால் மே 10ம் தேதி பெர்க்காசா நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கிம்மா சம்பந்தப்பட்டுள்ளதாக பினாங்கு மலேசிய இந்தியர் குரல் சங்கம் தெரிவித்துள்ள குற்றச்சாட்டை கிம்மா எனப்படும் மலேசிய இந்தியர் முஸ்லிம் காங்கிரஸின் பினாங்குக் கிளை மறுத்துள்ளது. அந்தத் தகவலை வெளியிட்ட பினாங்கு…

பாக் சமாட்: போலீசாருக்கு நல்ல எண்ணம் இருந்ததாகத் தெரியவில்லை

ஏப்ரல் 28ம் தேதி கடமையில் ஈடுபட்டிருந்த பல போலீஸ்காரர்கள் வழக்கமாக மரியாதையுடன் நடந்து கொள்ளும் போலீஸ்காரர்களிலிருந்து மாறுபட்டிருந்ததை பெர்சே 3.0 பேரணியில் பங்கு கொண்டவர்கள் கண்டனர். அந்தப் போலீஸ்காரர்களுடைய சீருடைகளில் வழக்கமாகத் தென்படும் அடையாள எண்களும் பெயர்ப்பட்டையும் காணப்படவில்லை. தங்களை அடித்த போலீஸ்காரர்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்டவர்கள் என்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள்…

கூட்டத்தில் கலாட்டா,வன்செயல் சகாப்தத்தின் அறிகுறியோ: நூருல் கவலை

நேற்றிரவு தமது தொகுதியில் ஒரு நிகழ்வில் முட்டைகளும் கற்களும் வீசப்பட்ட சம்பவம், மலேசிய அரசியலில் ஒரு “அபாயமிக்க காலகட்டம்” தொடங்குவதன் அறிகுறியோ என்று லெம்பா பந்தாய் எம்பி நூருல் இஸ்ஸா அன்வாரை அச்சம் கொள்ள வைத்துள்ளது. இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், நேற்றிரவு நிகழ்ந்ததுபோன்ற ஒரு “மோசமான” வன்செயலை…