நேற்று லாங் லேலாங் (Long Lellang) அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்த ஊழியர்களின் குடும்பங்களுக்கு தலா ரிம 100,000 வழங்கப்படும் என்று சரவாக் அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்தவர்களின் பள்ளிச் செல்லும் குழந்தைகளின் கல்விச் செலவை 'யாயாசான் சரவாக்' (Yayasan Sarawak) மூலம் மாநில அரசே முழுமையாக…
போலிச் செய்தித் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டம் நாடாளுமன்றத்தில்…
பிரதமர்துறை அமைச்சர் லியு வுய் கியோங், போலிச் செய்தித் தடுப்புச் சட்டத்தை இரத்துச் செய்யும் சட்டவரைவை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். பக்கத்தான் ஹரப்பான் அதன் தேர்தல் அறிக்கையில் இரத்துச் செய்யப்படும் என்று உறுதி கூறிய சட்டங்களில் இதுவும் ஒன்று. போலிச் செய்தித் தடுப்புச் சட்டம் ஏப்ரல் 11 …
குடும்பத் தலைவிகளுக்கு இபிஎப் திட்டம்: ஆகஸ்ட் 15-இல் தொடக்கம்
புத்ரா ஜெயா அதன் கட்டாய பணி ஓய்வுச் சேமிப்புத் திட்டத்தை வீட்டைக் கவனித்துக்கொள்ளும் குடும்பத் தலைவிகளுக்கும் விரிவுபடுத்தியுள்ளது. அவர்களுக்காக Caruman Sukarela Insentif Suri (ஐ-சூரி) என்ற திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. அத்திட்டம் ஆகஸ்ட் 15 தொடங்கி மூன்று கட்டங்களில் அமல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமரும் மகளிர், விவகார மற்றும் …
நஜிப் ஒரு மணி நேரத்திற்குப் பின்னர் எம்எசிசி அலுவலகத்திலிருந்து வெளியேறினார்
முன்னாள் பிரதமர் நஜிப் இன்று மாலை மணி 5.00 அளவில் கோலாலம்பூர் எம்எசிசி தலைமையகத்திற்கு அழைக்கப்பட்டிருந்தார். நாளை அவர் மீது புதிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுவதற்கான அறிவிப்புகளை அவர் பெறுவார் என்று தெரிகிறது. அவரது வீட்டிற்கு அருகாமையில் இருக்கும் எம்எசிசி அலுவலகத்திற்கு நஜிப் மாலை மணி 5.00 வந்தார்.…
ஐஆர்ஐ விவகாரம்: அரசாங்க விசாரணை தேவை என்கிறது பாஸ், என்ஜிஓ…
2002-இலிருந்து மலேசியாவில் எதிரக்கட்சிகளுடன் ஒத்துழைத்து வந்திருப்பதாக அமெரிக்காவில் உள்ள அனைத்துலக ரிபப்ளிகன் கழகம் (ஐஆர்ஐ), கூறியிருப்பது உடனடியாக விசாரிக்கப்பட வேண்டிய விசயம் என பாஸ் வலியுறுத்துகிறது. ஐஆர்ஐ கூறுவது உண்மையாக இருக்குமானால் அது நாட்டின் அரசியல் முறையில் அத்துமீறித் தலையிடுவதற்கு ஒப்பாகும் என அக்கட்சி துணைத் தலைவர் துவான் …
பினாங்கு மாநில ஆட்சிக்குழு நியமனங்கள்மீது செள, நோர்லெலா சர்ச்சை
இன்று பினாங்கு சட்டமன்றத்தில், துணிச்சலான பேச்சுக்குப் பேர்பெற்ற நோர்லெலா அரிப்பின்(பிகேஆர் -பெனாந்தி) மாநில ஆட்சிக்குழு நியமனங்கள் குறித்துக் கேள்வி எழுப்பி சர்ச்சை உண்டாக்கினார். ஆட்சிக்குழு நியமனங்கள் பிகேஆருக்கும் அமனா, பெர்சத்து ஆகியவற்றுக்கும் நியாயமாக இல்லை என நோர்லெலா கூறினார். அதில் பிகேஆர், அமனா, பெர்சத்து ஆகியவற்றுடன் ஒப்பிடும்போது டிஏபிக்கு …
அஸ்மின் சிங்கப்பூர் அதிகாரிகளைச் சந்தித்தாரா? மறுக்கிறது சிங்கப்பூர்
பொருளாதார அமைச்சர் அஸ்மின் அலி அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் தொடர்பில் சிங்கப்பூர் “ உயர் அதிகாரிகள்” சிலரைச் சந்தித்துப் பேச்சு நடத்தியதாகக் கூறப்படுவதை அக்குடியரசின் போக்குவரத்து அமைச்சு மறுத்தது. அஸ்மினுக்கும் சிங்கை அதிகாரிகளுக்குமிடையில் எந்தக் கூட்டத்துக்கும் திட்டமிடப்படவில்லை, இதுவரை இரு தரப்பும் சந்தித்துப் பேசியதும் இல்லை என்று …
போர்ட் கிள்ளானில் உல்லாசப் படகு இகுவானிமிட்டி
உல்லாசப் படகு இகுவானிமிட்டி இன்று போர்ட் கிள்ளான், பவுஸ்டெட் குருஸ் சென்டரில் நங்கூரமிட்டுள்ளது. இன்று மதியம் 12.25 அளவில் அப்படகு அங்கு காணப்பட்டது. அதற்குப் பாதுகாப்பாக கடற்போலீஸ் கப்பல் இருந்தது. அப்படகை அங்கு கண்ட செய்தியாளர் ஒருவர், "நீரின் மீது அது ரிம1 பில்லியன்", மகிழ்ச்சி பொங்கக் கூறினார்.…
ஜாஹிட்: நாங்கள் எதற்காக எஸ்எஸ்டி சட்டவரைவுகளை ஆதரிக்க வேண்டும்
பிஎன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மக்களவையில் எதற்காக எஸ்எஸ்டி சட்டவரைவுகளை ஆதரிக்க வேண்டும் என்று கேட்கிறா எதிரணித் தலைவர் அகமட் ஜாஹிட் ஹமிடி. ஜாஹிட் ஹமிடியிடம் பிஎன் எம்பிகள் 2018 விற்பனை வரி சட்டவரைவையும் 2018 சேவை வரி சட்டவரைவையும் ஆதரிப்பார்களா என்று கேட்டதற்கு, “எதற்கு ஆதரிக்க வேண்டும்?” என்று …
இன, சமய வாதங்களை எதிர்த்து வாக்களித்த சுங்கை காண்டிஸ் வாக்காளர்களுக்கு…
சிலாங்கூர் சுங்கை காண்டிஸ் இடைத்தேர்தலில் பி.கே.ஆரின் ஸவாவி அஹ்மட் புஹ்னியின் வெற்றி பக்காத்தான் ஹராப்பானின் பல இன மலேசியா கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும். சிறந்த முடிவு எடுத்த தொகுதி வாக்காளர்களுக்கும், இவ்வெற்றிக்கு உழைத்த அனைத்துக் கட்சி தொண்டர்களுக்கும் தன் நன்றியைத் தெரிவித்துக் கொண்டார் கெஅடிலான் (கோத்தா ராஜா) நாடாளுமன்றத்…
உல்லாசப் படகு இகுவானிமிட்டி கடற்போலீஸ் பாதுகாப்புடன் மலேசிய கடற்பகுதியில் நுழைந்தது
உல்லாசப் படகு இகுவானிமிட்டி மலேசிய கடற்பகுதிக்கு திரும்பி வந்துள்ளது. இது பக்கத்தான் அரசு அதிகாரத்திற்கு வந்த பின் முதன்முறையாக நடந்துள்ளது. கப்பல்களைக் கண்காணிக்கும் வலைத்தளம் பைன்டர் தகவல்படி, இகுவானிமிட்டி இன்று மாலை மணி 5.21க்கும் 5.29க்கும் இடையில் மலேசியாவுக்கும் இந்தோனேசியாவுக்கும் இடையிலான கடல் எல்லையை பாத்தாமிலிருந்து கடந்து…
அபிவிருத்தி செலவினங்களில் 60 விழுக்காட்டைப் பிரதமர் துறை இலாக்கா சேமிக்கவுள்ளது
நாடாளுமன்றம் | சம்பந்தப்பட்ட துறைகளின் மறுசீரமைப்பிற்கு, இந்த ஆண்டு ஒதுக்கப்பட்ட RM12.3 பில்லியன் அபிவிருத்தி செலவினத்திலிருந்து RM4.9 பில்லியன் மட்டுமே தேவைப்படும் என்று பிரதமர் துறை இலாகா (ஜேபிஎம்) அறிவித்தது. அதுமட்டுமின்றி, இயக்க செலவுகள் இரண்டு விழுக்காடு குறைக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. தேசியப் பேராசிரியர்கள் மன்றம், அரசாங்க ஆலோசகர்கள்…
அன்வாருக்காக செலயாங் இருக்கையை விட்டுக் கொடுக்க வில்லியம் லியோங் தயார்
செலயாங் நாடாளுமன்ற உறுப்பினர் வில்லியம் லியோங் அவரது நாடாளுமன்ற இருக்கையை பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிமுக்கு விட்டுக் கொடுக்கத் தயார் என்கிறார். அன்வாரின் துணைவியார் வான் அசிஸா வான் இஸ்மாயில் மற்றும் அவரது மகள் நூருல் இஸ்ஸா தங்களுடைய முறையே பாண்டான் மற்றும் பெர்மாத்தாங் பாவ் நாடாளுமன்ற இருக்கைகளை…
ஊடகங்கள் யுன்னா டான்மீது மட்டுமே தனிக் கவனம் செலுத்துவது நியாயமல்ல-…
ஊடகங்கள் எதிர்வரும் பலாக்கோங் இடைத் தேர்தலில் டிஏபி வேட்பாளராகும் வாய்ப்பிருப்பதாகக் கூறப்படும் முன்னாள் அஸ்ட்ரோ ஏஇசி ஒலிபரப்பாளர் யுன்னா டான்மீது மட்டுமே முழுக் கவனத்தையும் செலுத்துவது நியாயமற்ற செயல் என சிலாங்கூர் டிஏபி தலைவர் இயன் யோங் கூறினார். அங்கு வேட்பாளராக நிறுத்தப்படுவதற்கு வேறு சிலரது பெயர்களும் பரிசீலிக்கப்பட்டு …
ஜாஹிட் ரிம230 மில்லியன் சொத்து வைத்திருப்பதற்கு ஆதாரமில்லை
அம்னோ தலைவர் அஹமட் ஜாஹிட் ஹமிடி ரிம230 மில்லியன் சொத்து வைத்திருப்பதற்கு ஆதாரம் ஏதுமில்லை எனச் சட்ட அமைச்சர் லியு வுய் கியோங் கூறினார். ஆதாரம் எதுவும் இருக்குமானால் எம்ஏசிசி அவ்விவகாரத்தை ஆராயும் என லியு நாடாளுமன்றத்தில் எழுத்து வடிவில் வழங்கிய பதிலில் கூறினார். ஜாஹிட் பெரும் சொத்துக்குச் …
வான் அசிசாவும் நூருல் இஸ்ஸாவும் அன்வாருக்காக அவர்களின் தொகுதிகளைக் காலி…
பெர்மாத்தாங் பாவ் எம்பி நூருல் இஸ்ஸா அன்வார் தன் தந்தை அன்வார் இப்ராகிமுக்காக தன்னுடைய தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. “பெர்மாத்தாங் பாவ் என்றென்றும் என் பாசத்துக்குரிய தொகுதி. “என் தவணைக் காலம் முடியும்வரை இதை விடப்போவதில்லை”, என நாடாளுமன்ற வளாகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறினார். முன்னதாக, …
கேவியெஸ் மனைவி உள்பட ஆறு அரச தந்திரிகளின் பதவி முடிவுக்குக்…
அரசியல் நியமனங்களான அரச தந்திரிகள் அறுவரின் சேவை முடிவுக்குக் கொண்டுவரப்பட்டிருப்பதாக வெளியுறவு அமைச்சர் சைபுடின் அப்துல்லா கூறினார். ஸஹ்ரின் முகம்மட் ஹஷிம்( இந்தோனேசிய தூதர்), பெர்னார்ட் கிலோக் டொம்போக்( வத்திகன் தூதர்), பிளாஞ்சே ஓ’லியரி(பின்லாந்து தூதர்), குலாம் ஜெலானி கனிஸாம் (புருணைக்கான உயர் ஆணையர்), அடிலின் லியோங் (தைவானில் மலேசிய …
அஸ்மின்: சிங்கப்பூருடன் எச்எஸ்ஆர்மீதான பேச்சுகள் இம்மாதம்
கோலாலும்பூர்- சிங்கப்பூர் அதிவேக இரயில் (எச்எஸ்ஆர்) திட்டம் மீதான இருதரப்புப் பேச்சு இம்மாதம் நடைபெறலாம் என்று பொருளாதார அமைச்சர் முகம்மட் அஸ்மின் அலி இன்று கூறினார். “நேற்று (உள்துறை அமைச்சர்) முகைதின் யாசினைப் பார்ப்பதற்காக அங்கு சென்றிருந்தேன். அப்போது சிங்கப்பூர் உயர் அதிகாரிகள் சிலரைச் சந்தித்து எச்எஸ்ஆர் பற்றிப் …
பிகேஆர் தலைவராக அன்வார் போட்டியின்றி தேர்வு பெற்றார்
இன்று மாலை மணி 5.00 அளவில் பிகேஆர் கட்சியின் தேர்தலுக்கான வேட்பாளர் நியமனங்கள் முடிவுற்றதைத் தொடர்ந்து, பிகேஆரின் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் தலைவராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார். துணைத் தலைவருக்கான போட்டியில் தற்போதைய துணைத் தலைவர் அஸ்மின் அலியும் ரபிஸி ரமலியும் நேரடியாக மோதுகின்றனர். சிலாங்கூர் மந்திரி பெசார்…
அன்வார் பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்
பிகேஆர் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கான வேட்பாளர் பாரத்தை பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம் பெட்டாலிங் ஜெயாவிலுள்ள கட்சியின் தேர்தல் குழுவிற்கு இன்று காலை மணி 11.15 க்கு அனுப்பியுள்ளார். டாக்டர் வான் அசிஸா வான் இஸ்மாயில் அன்வாரை கட்சியின் தலைவர் பதவிக்கு முன்மொழிய, கட்சியின் வியூக…
சிலாங்கூர் எம்பி பிகேஆர் உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறாரா?
எதிர்வரும் பிகேஆர் கட்சித் தேர்தலில் சிலாங்கூர் மந்திரி பெசார் அமிருடின் ஷாரி உதவித் தலைவர் பதவிக்கு போட்டியிடுவதற்கு வேட்பாளர் நியமனப் பத்திரத்தை தாக்கல் செய்வார் என்று வட்டாரத் தகவல் கூறுகிறது. தொடர்பு கொண்ட போது ஒரு பிகேஆர் வட்டாரம், அமிருடின் ஒரு மந்திரி பெசார், அவர் இப்பதவிக்கு…
இகுவானிமிட்டி உல்லாசப் படகு பறிமுதல்: ஜோவின் வழக்குரைஞர் மகாதிரை சாடுகிறார்
இந்தோனேசியா 1எம்டிபி தொடர்புடைய உல்லாசப் படகு இகுவானிமிட்டியை மலேசியாவிடம் ஒப்படைக்கும் திட்டம் பற்றி வணிகர் ஜோ லோவின் வழக்குரைஞர் பிரதமர் மகாதிரை சாட்டியுள்ளார். ஜேம்ஸ் எப் ஹேகெர்டி என்ற அந்த வழக்குரைஞர் விடுத்துள்ள ஓர் அறிக்கையில் அந்தப் படகை இன்னொரு இடத்திற்கு மாற்றுவது இந்தோனேசியா மற்றும் யுஎஸ்…
சுங்கை காண்டிஸ் இடைத் தேர்தல்: பிகேஆர் வெற்றி பெற்றது
அதிகாரப்பூர்வமான அறிவிப்பின்படி, சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இடைத் தேர்தலில் பிகேஆர் வெற்றி பெற்றது. 5,842 வாக்குகள் பெரும்பான்மையில் பிகேஆர் அத்தொகுதியைத் தக்கவைத்துக் கொண்டது. வெற்றி பெற்ற பிகேஆர் வேட்பாளர் முகமட் ஸவாவி அஹமட் முகினி 15,427 வாக்குகளைப் பெற்றார். அவருக்கு அடுத்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாம் 9,585…
அதிகாரப்பூர்வமற்றது: பிகேஆர் சுங்கை காண்டிஸ் இருக்கையை தற்காத்துக் கொண்டது
அதிகாரப்பூர்வமற்ற முடிவுகளின்படி, பிகேஆர் சுங்கை காண்டிஸ் சட்டமன்ற இருக்கையைத் தக்கவைத்துக் கொண்டது. அதன் வேட்பாளர் முகமட் ஸவாவை மக்னி வெற்றிக்கான ஆகக் குறைந்த நிலையை அடைந்து பிஎன் வேட்பாளர் லோக்மான் அடாமைவிட முன்னிலையில் இருக்கிறார். இந்த இடைத் தேர்தலில் 51 விழுக்காட்டிற்கும் குறைவான வாக்காளர்கள் தங்களுடைய வாக்குகளைச்…
























