‘ஒரு எடுபிடியா என்னைப் பதவி விலகச் சொல்வது’- ரயிஸ் ஆவேசம்

ரயிஸ்  யாத்திம்    பிரதமர்   சொன்னால்   அமைச்சர்   நிலையிலான    அரசாங்கச்  சிறப்பு   ஆலோசகர்  பதவியைவிட்டு  விலகத்  தயார்   ஆனால்   “ஒரு   எடுபிடி”   சொல்லி  விலக   மாட்டார். “ஜாசா  அதிகாரி  துன்  பைசுல்  அரசாங்க    ஆலோசகர்  பதவியிலிருந்து   விலகச்  சொல்கிறார்.  ஜோ  லோ-வை   விசாரிக்க   வேண்டும்   என்றேன்   அல்லவா,   அதற்காக........பிரதமர்  சொல்லட்டும் …

ஜிஇ14 : முஹிட்டின் மூவாரில் போட்டியிடுவார் என்று ஊகிக்கப்படுகிறது

எதிர்வரும் 14-வது பொதுத் தேர்தலில், ஆளுங்கட்சியைத் தூக்கியெறியும் நோக்கத்துடன், பாரிசான் நேசனல் கோட்டையாக விளங்கும் சில இடங்களில், பக்காத்தான் ஹராப்பான் தனது முக்கியத் தலைவர்களைக் களமிறக்கவுள்ளதாக ஊகங்கள் வலுக்கின்றன. இதில் குறிப்பிடத்தக்கவர் பெர்சத்து தலைவர், முஹிட்டின் யாசின், தனது நாடாளுமன்ற தொகுதியான பாகோவைவிட்டு, இம்முறை மூவாரில் களமிறங்குவார் என்று…

டாக்டர் எம்: எனக்கு வாக்களிப்பது, அன்வாருக்கு வாக்களிப்பதைப் போன்றது

துன் டாக்டர் மகாதீரும் அன்வார் இப்ராஹிமும், நாட்டு அரசியலில் அதிகம் தொடர்புடைய இரண்டு நபர்களாவர், அதேசமயம் இந்தத் தொடர்பில் அடிக்கடி மாற்றங்களும் ஏற்படுவதுண்டு 1980-களில், குருவாகவும் சீடராகவும் இருந்த இவர்களது உறவு, 1998-ல் இறுக்கமான எதிரிகளானது. ஆனால், தற்போது பாரிசானை எதிர்க்க, எதிரணியில் மீண்டும் இருவரும் இணைந்துள்ளனர். ‘ஏபிசி…

நஜிப் : எந்த நாடும் முதியவரைப் பிரதமராகத் தேர்ந்தெடுப்பதில்லை

டாக்டர் மகாதிர் முகமது, பிரதம வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை, பிரதமர் நஜிப் மீண்டும் சர்ச்சையாக்கினார். உலகில் எந்த நாடும், பக்காத்தான் ஹராப்பான் செய்ததைப் போல, 93 வயதான ஒருவரை அரசாங்கத்தின் தலைவராக நியமிக்காது என நஜிப் கூறினார். "ஒரு முதியவரை அரசாங்கத் தலைவராக எந்த நாடும் தேர்வு செய்யுமா? இல்லை.…

நஜிப்பிடம் இருந்து விலகி இருங்கள், ஆஸ்திரேலியப் பிரதமருக்கு மகாதீர் ஆலோசனை

இவ்வார இறுதியில் ஆசியான்-ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்கம் டர்ன்பல், பிரதமர் நஜிப் ரசாக்கைச் சந்திக்காமல், அவரிடமிருந்து விலகி இருக்க வேண்டுமென டாக்டர் மகாதீர் கூறினார். ஆஸ்திரேலியாவின் ‘ஏபிசி நியூஸ்’ நேர்காணலில், நஜிப் சர்வதேச தலைவர்களுடன் சேர்ந்து படங்கள் எடுத்துகொண்டு, தனது தரத்தை உயர்த்தி காட்ட…

ஆயர் ஹீத்தாம் ஹரப்பான் வேட்பாளரை மகாதிர் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார்

  ஜோகூர், ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதிக்கான ஹரப்பான் கூட்டணியின் வேட்பாளரை அக்கூட்டணியின் தலைவர் மகாதிர் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை அறிவிப்பார். மசீச துணைத் தலைவர் வீ கா சியோங்ஙின் கோட்டையான அத்தொகுதியில் டிஎபி அதன் 52 ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்டத்தின் போது அந்த அறிவிப்பு செய்யப்படும் என்று…

நஜிப் பிஎன்பி பணியாளர்கள் ஒவ்வொருவருக்கும் ரிம2,000 கொடுக்கிறார்

  14 ஆவது பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், பிரதமர் நஜிப் பெர்மோடலான் நேசனல் பெர்ஹாட் (பிஎன்பி) பணியாளர்களுக்கு ஒரு-முறை மட்டும் ரொக்கப் பணம் கொடுப்பதாக இன்று அறிவித்தார். இன்று கோலாலம்பூரில் நடைபெற்ற பிஎன்பியின் 40 ஆம் ஆண்டு நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நஜிப்,…

உள்ளூரில் மட்டும்தான் வழக்கு தொடுக்கும் துணிச்சலா? நஜிப்புக்கு எம்பி கேள்வி

பிரதமர்   நஜிப்    அப்துல்   ரசாக்   உள்ளூரில்   தம்மை   விமர்சிக்கும்  விமர்சகர்களையும்   ஊடகங்களையும்    எதிர்த்து   வழக்கு   தொடுக்கத்    தயங்குவதில்லை    ஆனால்,  வெளிநாடுகள்   என்று   வரும்போது  அந்தத்  துணிச்சலைக்   காண  முடியவில்லையே. இன்று   மக்களவையில்   அரச  உரைமீதான   விவாதத்தில்   கலந்துகொண்டபோது  இவ்வாறு   கூறிய   தியோ  நை   ச்சிங்(டிஏபி- கூலாய்),  ஒருவேளை  வெளிநாட்டு …

அமனாவில் சேர்ந்தார் மாபுஸ்

பொக்கோக்   சேனா   எம்பி,  மாபுஸ்   ஒமார்   இன்று   பாஸிலிருந்து பிரிந்துவந்த  கட்சியான    அமனாவில்    சேர்வதாக     அறிவித்தார். 34ஆண்டுகளாக   பாஸ்   உறுப்பினராக    இருந்தவர்   மாபுஸ்.  ஒரு  நேரத்தில்   அக்கட்சியின்   உதவித்   தலைவராகவும்   இருந்தார். ஆனால்,  2015-இல்  பழமைவாதிகள்  அக்கட்சியைக்  கைப்பற்றியதை    அடுத்து    அவர்  ஓரங்கட்டப்பட்டார். புதிய   தலைமைத்துவம்   பாஸின்  மூத்த   …

டிஎபி உறுப்பினர்களுக்கு எதிரான பண்டிகாரின் மிரட்டல் “சட்டத்திற்கு முரணானது’

  மக்களவைத் தலைவர் பண்டிகார் அமின் மூலியா மூன்று டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரிடம் மன்னிப்பு கோர வேண்டும், இல்லையேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்று விடுத்துள்ள மிரட்டல் சட்டத்திற்கு முரணானது என்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர் கூறினார். அந்த மூன்று டிஎபி உறுப்பினர்களுக்கு பண்டிகார் அனுப்பியுள்ள கடிதம் குறித்து…

முதலில் 1எம்டிபிமீதான கேள்விகளுக்குப் பதில் , பிறகுதான் மன்னிப்பு: டிஏபி…

நாடாளுமன்றத்தை   அவமதித்ததற்காக  கடும்  நடவடிக்கை   எடுக்கப்படலாம்   என்று    எச்சரிக்கப்பட்டிருந்தாலும்   அதற்காக  டிஏபி   எம்பிகள்  மூவரும்   மன்னிப்பு   கேட்கத்   தயாராக  இல்லை. பத்து காஜா  எம்பி   வி.சிவகுமார்,  புருவாஸ்  எம்பி   ங்கே   கூ  ஹாம்,  தைப்பிங்  எம்பி    ங்கா   கொர்  மிங்    ஆகிய   மூவரும்        மன்னிப்பு   கேட்பதற்குமுன்      1எம்டிபிமீதான   தங்களின்  …

மார்ச் மாதம் நாடாளுமன்றம் கலைப்பு?

பிரதமர்   நஜிப்   அப்துல்   ரசாக்,   மார்ச்  இறுதியில்,    அரசாங்கம்   புதிய   தேர்தல்   எல்லைகள்மீதான  அறிக்கையைத்     தாக்கல்   செய்த   மறுவாரம்,  நாடாளுமன்றத்தைக்  கலைக்கக்கூடும்   என  த   ஸ்டார்   அறிவித்துள்ளது. “நாடாளுமன்றம்  கலைக்கப்படும்   தேதி   கிட்டத்தட்ட   நிச்சயமாகி  விட்டது.  மார்ச்  28,  29   அல்லது  30-இல்  கலைக்கப்படலாம்.  அதற்கான   அறிகுறிகள்   தெரிகின்றன”, …

சாலே: மகாதிர் இப்போது சொல்வதை அவர் ஆட்சியில் இருந்தபோது ஏன்…

 தொடர்பு,  பல்லூடக  அமைச்சர்   சாலே   சைட்  கெருவாக்,   எதிர்வரும்   பொதுத்   தேர்தலில்  பக்கத்தான்   ஹரப்பான்   வெற்றிபெற்று   ஆட்சி  அமைத்தால்   கூடுதல்   பத்திரிகைச்   சுதந்திரம்   வழங்கப்படும்    என்றும்  பேச்சுரிமையைக்  கட்டுப்படுத்தும்   சட்டங்கள்  நீக்கப்படும்    என்று   கூறும்    டாக்டர்   மகாதிர்  முகம்மட்டைச்   சாடினார். முன்னாள்  பிரதமர்  அவரது   ஆட்சிக்காலத்திலேயே    அவற்றைச்  செய்திருக்கலாமே …

ஜிஇ14 : ஜொகூரில் போட்டியிடவுள்ளதாக, இயோ கண்ணீருடன் அறிவிப்பு

டிஏபியைச் சேர்ந்த டாமான்சாரா உத்தாமா சட்டமன்ற உறுப்பினர், இயோ பீ, எதிர்வரும் பொதுத் தேர்தலில் ஜொகூரில் தான் போட்டியிடவுள்ளதாக அறிவித்தபோது, அவரால் கண்ணீரை அடக்க முடியவில்லை. சிகாம்மாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், தன்னால் தனது தொகுதி மக்களைப் பிரிந்து செல்ல முடியவில்லை என இயோ தன் வருத்தத்தைத் தெரிவித்தார். “ஜொகூரில்…

துணைப் பிரதமரின் ரெம்பாவ் நிகழ்ச்சிக்கு அழைக்கப்படவில்லை, மசீச கூறுகிறது

  நெகிரி செம்பிலான், ரெம்பாவில் நேற்று துணைப் பிரதமர் அஹமட் ஸாகிட் ஹமிடி பங்கேற்ற ஒரு நிகழ்ச்சியில் நெகிரி மசீச கலந்துகொள்ளவில்லை, ஏனென்றால் தங்களை யாரும் அழைக்கவில்லை என்று அது கூறிற்று. இது நிகழ்ச்சி ஏற்பாட்டாளரின் தவறாக இருக்கலாம் என்று மாநில மசீச தலைவர் லிம் சின் பூய்…

புத்ரா ஜெயாவைக் கைப்பற்றிய பின்னர் டிஎபி பிரதிநிதிகள் சொத்துக்களை அறிவிப்பார்கள்

  மத்திய அரசை அமைத்து அதன் அதிகாரிகளாக நியமிக்கப்பட்ட பின்னர் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவர்களுடைய சொத்துக்களை அறிவிப்பார்கள் என்று அக்கட்சியின் பிரச்சாரப் பிரிவின் தலைவர் டோனி புவா கூறினார். "மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாகவும், மந்திரிகளாகவும் நியமிக்கப்பட்ட பின்னர் நாங்கள் எங்களுடைய சொத்துக்களை அறிவிப்போம். இது டிஎபியின் நிலைப்பாடு…

நஸ்ரி: ரயிஸுக்கும் ரபிடாவுக்கும் அரசாங்கத்தின்மீது அதிருப்தி

முன்னாள்  அமைச்சர்கள்  ரயிஸ்   யாத்திமுக்கும்   ரபிடா   அசிசுக்கும்   பிரதமர்   நஜிப்  அப்துல்   ரசாக்   தலைமையிலான    இப்போதைய   அரசாங்கத்தின்மீது    வெறுப்பு,  அதுதான்  இப்படியெல்லாம்  பேசுகிறார்கள்   என்று  சுற்றுலா,  பண்பாடு   அமைச்சர்   நஸ்ரி   அப்துல்  அசீஸ்  நினைக்கிறார். அவ்விருவரும்,   ஆடம்பர  படகான   ஈக்குவேனிமிடியை  அமெரிக்க   புலனாய்வுத்துறையும்  இந்தோனேசிய    அதிகாரிகளும்    கைப்பற்றியதன்    தொடர்பில்  …

1எம்டிபி: சுவீஸ் அரசாங்கம் பறிமுதல் செய்த ரிம430 மில்லியன் மலேசியாவுக்குச்…

சுவீஸ்    அதிகாரிகள்  கைப்பற்றிய  CHF104 மில்லியன் (ரிம430மில்லியன்)   மீது  ஏன்  உரிமை  கொண்டாடவில்லை  என்பதற்கு  1எம்டிபி  விளக்கமளித்துள்ளது. சுவீஸ்    வங்கிகளுடன்      நிகழ்ந்த   சர்ச்சையின்    தொடர்பில்  சுவீஸ்   அரசாங்கம்   அப்பணத்தைப்  பறிமுதல்   செய்தது     என  1எம்டிபி  கூறிற்று. “பணம்   பறிமுதல்   செய்யப்பட்டதை   எதிர்த்து   சம்பந்தப்பட்ட   வங்கிகள்   மேல்முறையீடு   செய்திருப்பதாக   சுவீஸ்  …

‘இருப்பு இவ்வளவுதான்’- சொத்துமதிப்பு குறைவாக இருப்பது குறித்து சிப்பாங் எம்பி…

தம்  வங்கிக்  கணக்கில்  இருப்பது   வெறும்  ரிம900-தான்    என்று   அமனாவின்  சிப்பாங்  எம்பி  ஹனிபா   மைடின்   அறிவித்திருப்பதைக்  கண்டு   பலரும்   ‘இவ்வளவுதானா’   ஆச்சரியப்பட்டனர். “உண்மையைத்தான்  சொன்னேன்.  சொத்து   அறிவிப்பைச்   செய்தபோது   என்  மேபேங்க்  கணக்கில்   இருந்தது  ரிம900-தான்.  அதனால்  சொத்து  மதிப்பு  ரிம900   என்று   அறிவித்தேன். “ரிம2.6 பிலியன்  …

ஜிஇ14 – பி.எஸ்.எம். ஏன் அதிக இடங்களில் போட்டியிடுகிறது?

வரவிருக்கும் 14-வது பொதுத் தேர்தலில், ‘தேர்தல் வரைபடத்தில் ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொள்ள’ இன்னும் கூடுதலான தொகுதிகளில் போட்டியிட மலேசிய சோசலிசக் கட்சி (பி.எஸ்.எம்.)  திட்டமிட்டுள்ளது பக்காத்தான் ஹராப்பான் பேச்சுவார்த்தைக்கு வர மறுத்ததால், பி.எஸ்.எம். இந்த முடிவுக்கு நிர்பந்திக்கப்பட்டது என அக்கட்சியின் மத்திய செயலவை உறுப்பினரான டாக்டர் மைக்கேல் ஜெயக்குமார்…

‘தண்ணீர் பிரச்சனை 4 நாள்கள்தான், ஆனால் 1எம்டிபி கடன் பிரச்சனை…

சிலாங்கூர் மாநில நீர் பிரச்சினைகளை விமர்சித்த பிரதமருக்கு, அவரின் நாடாளுமன்ற தொகுதியான பெக்கான் வெள்ளப் பிரச்சனையைத் தொட்டுப் பேசி பதிலளித்தார் சிலாங்கூர் மந்திரி பெசார் அஸ்மின் அலி. "காஜாங் நகரில்" ஏற்பட்ட வெள்ளப் பிரச்சனையைச் சிலாங்கூர் அரசாங்கம் தீர்த்துவிட்டது, ஆனால் பெக்கானில் நிலவும் பிரச்சனை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கிறது…

த எக்கோனமிஸ்ட் மீது வழக்குத் தொடர பிரதமருக்கு இலவச சட்ட…

  பிரதமர் நஜிப்பை வார இதழான த எக்கோனமிஸ்ட் "திருடன்" என்று வர்ணித்திருந்ததற்காக அதன் மீது வழக்குத் தொடர பிரதமருக்கு இலவச சட்ட உதவி அளிக்க முன்வந்தார் டிஎபி நாடாளுமன்ற உறுப்பினர் இஙா கோர் மிங். அந்த வார இதழ் அதன் சமீபத்திய கட்டுரையில் பிரதமர் நஜிப் எதிர்வரும்…

நஜிப் ஏன் அனுபவமற்ற 92 வயதானவரால் வழிநடத்தப்படும் கட்சியைக் கண்டு…

  கொஞ்சம் உறுப்பினர்களைக் கொண்ட பெர்சத்து அனுபவமற்ற தலைவர்களால், அதில் 92 வயதான ஒருவரும் உட்பட, வழிநடத்தப்படுகிறது என்று பெர்சத்துவின் தலைவர் மகாதிர் முகமட் தமது கட்சியை ஏளனமாக வர்ணித்தார். ஆனாலும்கூட, இக்கட்சியைக் கண்டு பிரதமர் நஜிப் பயப்படுகிறார். அக்கட்சி அதன் பதிவு மனறங்கள் பதிவகத்தால் இரத்து செய்யப்படும்…