இந்தச் சிக்கல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாகத் தான் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறுகிறார். கடந்த ஆண்டில் சிலாங்கூரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் ரிம 52.9 மில்லியனாக இருந்தன, இது 2024-ஆம் ஆண்டில் பதிவான ரிம 22.6 மில்லியனை விட…
நான் இன்னும் அம்னோ உறுப்பினர்தான், நீக்கப்படவில்லை, ரயிஸ் கூறுகிறார்
முன்னாள் தகவல் துறை அமைச்சர் ரயிஸ் யாத்திம் 1எம்டிபி விவகாரத்தை கடுமையாகக் குறைகூறி வருகிறார். ஆனாலும், அவர் எல்லாவகையிலும் அம்னோக்காரராகவே இருந்து வருகிறார். ஆகவே, வரும் பொதுத் தேர்தலில் பிஎன்னிலிருக்கும் மலாய்க் கட்சியாகிய அம்னோவுக்கு பரப்புரை செய்வார். "நான் ஓர் அம்னோக்காரர். நான் இன்னும் நீக்கப்படவில்லை. நான்…
சின் தோங் ஆயர் ஈத்தாமில் வெற்றி பெற்றால், ஹரப்பான் புத்ரா…
ஜோகூர் டிஏபி தலைவர் லியு சின் தொங், ஜோகூரில் உள்ள ஆயர் ஈத்தாம் நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றாரானால் பக்கத்தான் ஹரப்பான் புத்ரா ஜெயாவில் வெற்றிபெறுவது உறுதி என்கிறார் டிஏபி தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். “அவர் வென்றால் புத்ரா ஜெயாவில் பக்கத்தான் வெல்லும்.. ஆயர் ஈத்தாம் …
செகாமாட் இராணுவ வாக்காளர்களுக்கு எதிரான மனு நீதிமன்றத்தில் தள்ளுபடி
வாக்காளர் பட்டியலில் 949 இராணுவ வாக்காளர்களையும் அவர்களின் துணைகளையும் சேர்த்துக்கொண்டது செல்லாது என்று அறிவிக்கக் கோரி டிஏபியையும் அமனாவையும் சேர்ந்த 48 வாக்காளர்கள் செய்துகொண்ட மனுவை கோலாலும்பூர் உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. 949 இராணுவ வாக்காளர்களின் பெயர்களும் அரசிதழில் தேர்தல் ஆணைய(இசி)த்தால் வெளியிடப்பட்டு விட்டன என்பதால் இனி …
உங்கள் கருத்து: செய்த தவறுகளை ஒப்புக்கொள்ளும் மகாதிரைப் பாராட்ட வேண்டும்
உங்களுக்கு வாக்களிப்பதும் அன்வாருக்கு வாக்களிப்பதும் ஒன்றாகுமா? - ஒருவகையில் ஒன்றுதான் என்கிறார் மகாதிர் விஜிபி: முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதிர் முகம்மட் முன்பு அன்வார் இப்ராகிமுக்கு எதிராக நடவடிக்கை எடுத்ததற்கு “வருத்தப்படுவதாக”க் கூறியுள்ளார். அந்த வகையில் சமரசம் செய்துகொண்டு “அலிபாபாவையும் அவரின் 40 திருடர்களையும்” ஒழித்துக்கட்ட வேண்டிய நேரம் …
ஹரப்பான் ஒரே சின்னத்தில் போட்டிபோடுவது ஒரு கேள்விக்குறி
பக்கத்தான் ஹரப்பான் சின்னம் வாக்குச் சீட்டில் இடம்பெறும் வாய்ப்பு குறைந்து கொண்டே வருகிறது. அதனால் அக்கூட்டணி ஏதாவது ஒரு கட்சியின் சின்னத்திலேயே பங்காளிக் கட்சிகள் அனைத்தும் போட்டியிடலாமா என்று ஆலோசிக்கத் தொடங்கியுள்ளது. அது குறித்து கடந்த செவ்வாய்க்கிழமை தலைமை மன்றத்தில் விவாதிக்கப்பட்டதாகவும் அதன் தொடர்பில் கட்சிகள் புதன்கிழமை நடைபெறும் …
நஜிப்பின் முன்னாள் உதவியாளர் புதிதாக ஒன்றைக் கூறுகிறார், தேர்தல் ஆகஸ்ட்…
14வது பொதுத் தேர்தல் ஏப்ரல் நடுப்பகுதிக்கும் மே நடுப்பகுதிக்குமிடையில் நடக்கலாம் என்று பலரும் ஆருடம் கூறிக்கொண்டிருக்கும் வேளையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் முன்னாள் உதவியாளர் புதிதாக ஒன்றைக் கூறுகிறார். தி எட்ஜ் பினான்சியல் டெய்லியில் பத்தி எழுதிய ஓ ஈ சன், ஆண்டின் நடுப்பகுதியில் பல விழாக்கள் …
மரினா மகாதீர் : நாங்கள் இருவரும் ஒத்த சிந்தனைக்கு வந்துவிட்டோம்
மகாதிரின் 22 ஆண்டுகாலப் பிரதமர் பதவி உட்பட பல விசயங்களில், இதற்கு முன்னர் தங்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தபோதும், தற்போது தானும் தன் அப்பாவும் ஒத்த சிந்தனைக்கு வந்துவிட்டதாக, மகாதிரின் மூத்த மகள் மரினா மகாதிர் கூறியுள்ளார். முன்னாள் துணைப் பிரதமர் அன்வார் இப்ராஹிம் உடனான ஒத்துழைப்பு, ஊழலை…
குடியுரிமையற்ற குழந்தைகளுக்கு உதவ, நீண்ட கால திட்டம் தேவை, சுவாராம்…
மனித உரிமைகள் சார்ந்த அரசுசாரா அமைப்பான, மலேசிய மக்கள் குரல் (சுவாராம்), குடியுரிமை இல்லாத குழந்தைகள் பிரச்சனையைக் களைய, ஒரு நிலையான கொள்கையைப் பின்பற்ற வேண்டுமென புத்ராஜெயாவைக் கேட்டுக்கொண்டது. குடியுரிமை இல்லாத குழந்தைகளின் பதிவுகளைத் துரிதப்படுத்த, அரசு சாரா நிறுவனங்களுடன் (என்.ஜி.ஓ.) இணைந்து பணியாற்றும்படி, தேசியப் பதிவு இலாகாவைக்…
பினாங்கு சுரங்கப்பாதை: மலிவு விளம்பரம் தேடிக்கொள்ள முனைகிறார் வேள்பாரி
பினாங்கு சுரங்கப்பாதை விவகாரத்தைப் பயன்படுத்திக்கொண்டு மலிவான விளம்பரம் தேடிக்கொள்ளும் முயற்சிகளை மஇகா பொருளாளர் எஸ்.வேள்பாரி நிறுத்திக்கொள்ள வேண்டும் என பி.இராமசாமி வலியுறுத்தினார். அவ்விவகாரம் தொடர்பில் எம்ஏசிசி தடுத்து வைத்துள்ள சந்தேக நபர் ஒருவருடன் புகைப்படம் எடுத்துக்கொண்டிருப்பது குறித்து பினாங்கு முதல்வர் லிம் குவான் எங் விளக்கமளிக்க வேண்டும் என்று …
பாஸ் துணைத் தலைவர்: எதிரிகளின் தோல்விக்காக வேண்டிக்கொள்வவதில் ஆச்சரியப்பட எதுவுமில்லை
பாஸ் துணைத் தலைவர் துவான் இப்ராகிம் துவான் மான் கடந்த சனிக்கிழமை நடந்த சிலாங்கூர் பாஸ் கட்சிக் கூட்டத்தில் “தீய பக்கத்தானின்” அழிவுக்காக பிரார்த்தனை நடத்தியது தவறில்லை என்று தற்காத்துப் பேசினார். விமர்சகர்கள் அதைத் திரித்துக் கூறித் தவறு என்று காண்பிக்க முயன்றிருக்கிறார்கள் என்று துவான் இப்ராகிம் கூறிக்கொண்டார்.…
ஹாடி: பிஎன்னை எதிர்க்க வெளிநாட்டு உதவியை நாடும் கோழைகள் எதிரணியினர்
பாஸ் தலைவர் அப்துல் ஹாடி ஆவாங், பிஎன்னை எதிர்ப்பதில் வெளிநாட்டவர் உதவியை நாடும் எதிர்க்கட்சிகளைக் கோழைகள் என்று சாடினார். எந்தப் பெயரையும் அவர் கூறவில்லை என்றாலும் பக்கத்தான் ஹரப்பானைத்தான் அவர் குறிப்பிடுகிறார் என்பது வெள்ளிடைமலை. “பெருமைக்காகக் கூறவில்லை, நாங்கள் வெற்றி பெற்றால், மாற்றங்களைக் கொண்டு வருவோம், வெற்றி பெறாவிட்டால் …
சிஎம்: முன்னொரு காலத்தில் சீனா மலாக்காவைப் பாதுகாக்கவில்லையா, இப்போது மட்டும்…
சீனா, மலாக்காவில் நிறைய முதலீடுகளைச் செய்து அம்மாநிலத்தைத் தனது காலனியாக்கிக்கொள்ள முயலுகிறது என்று கூறப்படுவதை மறுதலிக்கிறார் மலாக்கா முதலமைச்சர் இட்ரிஸ் ஹருன். காலனியாக்குவது அதன் நோக்கம் என்றால் நீண்ட காலத்துக்கு முன்பே அதைச் செய்திருக்கும் என்றாரவர். “சீனாவின் முதலீட்டாளர்கள் மலாக்காவைக் காலனியாக்கிக் கொள்ள விரும்புவதாகக் கூறுவோரிடம் சொல்லுங்கள், மலாக்காவைக் …
ஆயர் ஹீத்தாமில் டிஎபியின் சின் தோங் போட்டியிடுகிறார்
எதிர்பார்த்தவாறு ஜோகூர் ஆயர் ஹீத்தாம் நாடாளுமன்ற தொகுதியில் டிஎபியின் ஜோகூர் மாநில தலைவர் லியு சின் தோங் 14 ஆவது பொதுத் தேர்தலில் போட்டியிடுகிறார். அத்தொகுதியில் மசீசவின் சார்பில் அதன் துணைத் தலைவர் வீ கா சியோங் களமிறங்கிறார். ஆயர் ஹீத்தாம் ஹரப்பான் தேர்தல் மையத்தில் டிஎபியின்…
லெம்பா பந்தாய் வாக்காளர்களின் முகவரி மாற்ற விண்ணப்பப் படிவங்கள் இசி-இடம்…
தங்களுக்குத் தெரியாமலேயே தங்களின் வாக்களிக்கும் முகவரிகள் மாற்றப்பட்டிருப்பதாகக் கூறிக்கொள்ளும் நான்கு வாக்காளர்களும் , முகவரி மாற்றத்துக்காக விண்ணப்பம் செய்துகொண்ட விண்ணப்பப் படிவங்கள் தேர்தல் ஆணைய (இசி)த்திடம் உள்ளனவாம் இதை உறுதிப்படுத்திய இசி தலைவர் முகம்மட் ஹாஷிம் அப்துல்லா, வாக்காளர் பற்றிய தகவல்களில் மாற்றம் செய்வதற்கு போராங் ஏ பாரங்களைப் …
ஆசியான் உச்சநிலை மாநாட்டில், பெர்சே ஆதரவாளர்கள் நஜிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
இன்று சிட்னியில், ஆசியான் – ஆஸ்திரேலியா சிறப்பு உச்சநிலை மாநாட்டில் கலந்துகொண்ட நஜிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், பெர்சே ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிட்னி, பெர்சே இயக்கத்தின் செயலாளர் ஜேசன் கோ, மஞ்சள் நிற டீ-சட்டை அணிந்து, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆசியான் முழுவதையும் சார்ந்த பல்வேறு மனித உரிமை…
டாக்டர் எம் : இசா சட்டத்தைப் பயன்படுத்தியதில் நஜிப்பும் பொறுப்பாளி
1987-ல் ‘ஓப்பராசி லாலாங்’ நடவடிக்கையின் போது, உள்நாட்டு பாதுகாப்பு சட்டத்தின் (இசா) கீழ், நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டதற்கு அரசாங்கத்தின் ஓர் உறுப்பினர் என்ற வகையில், நஜிப்புக்கும் பொறுப்புண்டு என்று டாக்டர் மகாதிர் கூறுகிறார். "இது ஓர் அரசாங்கத்தின் பொறுப்பு, நான் தவறு செய்ததாக அவர் நினைத்திருந்தால், என்னை விமர்சிக்கவோ…
ஜோ லோ-வை ஆதரிப்பது துரோகம், அம்னோ மூத்தத் தலைவர் சொல்கிறார்
1எம்டிபி-உடன் தொடர்புடைய, தொழிலதிபர் ஜோ லோ-வை ஆதரிப்பது நாட்டையும் அம்னோவையும் காட்டிக் கொடுப்பதற்கு ஈடானது என்று, அக்கட்சியின் மூத்தத் தலைவர் கூறியதாக சினார் ஹரியான் செய்தி வெளியிட்டுள்ளது. அம்னோ மூத்த உறுப்பினர்கள் இயக்கத்தின் செயலாளர் முஸ்தாபா யாக்கோப், இந்த ஊழல் பற்றி நன்கு அறிந்த கட்சி தலைவர்கள், அதில்…
சைட் சாடிக் மூவாரை முகைதினுக்கு விட்டுக் கொடுக்கத் தயார்
பெர்சத்து இளைஞர் தலைவர் சைட் சாடிக் சைட் அப்துல் ரஹ்மான், மூவார்மீது கண் வைத்திருந்தாலும் கட்சித் தலைவர் முகைதின் யாசின் அங்குப் போட்டியிட விரும்பினால் அத்தொகுதியை விட்டுக் கொடுக்கத் தயாராக இருக்கிறார். “முகைதின் பாகோவில் போட்டியிட்டாலும் மூவாரில் போட்டியிட்டாலும் அவரை 100விழுக்காடு ஆதரித்து வெற்றி பெற வைப்பேன்”, என்று …
அமெரிக்க டாலருக்கு எதிராக, ரிங்கிட்டின் மதிப்பு அதிகரிக்கும்
அமெரிக்க டாலரின் மதிப்பு பலவீனமடைவதைத் தொடர்ந்து, அடுத்த வாரம் ரிங்கிட்டுக்கான தேவை அதிகரிக்கும். இது அமெரிக்க டாலருக்கு எதிராக, 3.88-3.92 க்கு இடையே வர்த்தகம் செய்யப்படலாம் என வணிகர் ஒருவர் கூறியுள்ளார். தேசியப் பாதுகாப்பு ஆலோசகர், எச்ஆர் மெக்மாஸ்டருக்கு பதிலாக வேறொருவரை நியமித்தல் மற்றும் வெளியுறவுத்துறை செயலாளர் ரெக்ஸ்…
தி எக்கோனோமிஸ்டுக்கு ஆத்திரப்பட்டு கடிதங்கள் எழுதுவது மட்டும் போதாது –…
தி எக்கோனோமிஸ்ட் பத்திரிகை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்மீது சுமத்திய குற்றச்சாட்டுகளுக்கு புத்ரா ஜெயா பட்டும்படாமலும் பதிலளித்திருப்பது மலேசியாவிடம் எதிர்வாதம் செய்ய போதுமான சரக்கில்லை என்பதைக் காண்பிப்பதாய் சட்ட வல்லுனர் அப்துல் அசீஸ் பாரி கூறினார். தி எக்கோனோமிஸ்டுக்குக் கடிதம் எழுத யுகே-க்கான மலேசியாவின் உயர் ஆணையரைப் பணிப்பதைவிட …
புத்ரா ஜெயாவால் புறக்கணிக்கப்பட்ட சுஹாகாம் ஐநாவின் உதவியை நாடுகிறது
மலேசிய மனித உரிமை ஆணையம் (சுஹாகாம்) ஐநா மனித உரிமை மன்றத்தின் காலாந்தர கண்ணோட்ட(யுபிஆர்)த்துக்கு அனுப்பும் அறிக்கையில் மற்றவற்றோடு மலேசிய அரசாங்கம் மீதான முறையீடுகளும் இடம்பெற்றிருக்கும். முறையீடுகளில் தலையாயது, சுஹாகாம் 1999-இல் அமைக்கப்பட்டதிலிருந்து அதன் ஆண்டறிக்கை நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்பட்டதில்லை என்பதுதான். அத்துடன் ஆண்டு ஒதுக்கீடான ரிம10மில்லியன் தன் செலவுக்குப் …
ஆஸ்திரேலியப் பிரதமருடனானப் படத்தை நஜிப் வெளியிட்டார்
நேற்று, முன்னாள் பிரதமர் மகாதிர் முகமட் எச்சரிக்கை விடுத்ததை அடுத்து, பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், ஆஸ்திரேலியப் பிரதமர் மால்க்கம் டர்ன்பல்-உடன் எடுத்துக்கொண்ட படத்தை வெளியிட்டார். நேற்று, மகாதிர் ‘ஏபிசி நியூஸ்’ நேர்காணலில், நஜிப் ஆஸ்திரேலியப் பிரதமருடன் புகைப்படம் எடுத்துக்கொள்ள முயற்சி செய்வார் எனக் கூறியிருந்தார். இதனையடுத்து, நேற்று…
பாக்கத்தான் ஹராப்பான் தேர்தல் அறிக்கைக்கு இந்தியத் தலைவர்கள் வரவேற்பு
14-3-2018 இல், கோலாலம்பூர் செந்துல் கறி உணவகத்தில் பாக்கத்தான் ஹராப்பான் இந்தியத் தலைவர்கள் பாக்கத்தான் ஹராப்பானின் இந்தியர்களுக்கான சிறப்பு கொள்கை அறிக்கையை விவரித்தனர்.. அதில் கெஅடிலான், ஜ.செ.க ஆகியவற்றின் இந்திய நாடாளுமன்ற, சட்ட மன்ற உறுப்பினர்களும் ஹிண்ட்ராப்பை பிரதிநிதித்து அதன் தலைவர் வேதமூர்த்தியும், மீராவை பிரதிநிதித்து .ராஜரத்தினமும்…












