இந்தச் சிக்கல் பல ஆண்டுகளாகத் தொடர்ந்து வருவதாகவும், இது தொடர்பாகத் தான் வழங்கிய ஆலோசனைகள் புறக்கணிக்கப்பட்டிருப்பதாகவும் சுல்தான் ஷராபுதீன் இத்ரிஸ் ஷா கூறுகிறார். கடந்த ஆண்டில் சிலாங்கூரில் வெள்ளத்தினால் ஏற்பட்ட இழப்புகள் ரிம 52.9 மில்லியனாக இருந்தன, இது 2024-ஆம் ஆண்டில் பதிவான ரிம 22.6 மில்லியனை விட…
ஜிஎஸ்டி இன்றி அரசாங்கக் கடன் ரிம1ட்ரில்லியனாக உயரும்
பக்கத்தான் ஹரப்பான் வாக்குறுதி கொடுத்திருப்பதுபோல் ஆட்சிக்கு வந்ததும் டோல் கட்டணத்தையும் ஜிஎஸ்டி-யையும் எடுத்து விட்டால் தேசிய கடன் கிட்டத்தட்ட ரிம1ட்ரில்லியனாக அதிகரிக்கும என இன்று காலை பெர்லிஸில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்தார். ஜிஎஸ்டியையும் நெடுஞ்சாலை டோல் கட்டணத்தையும் எடுத்து விடுவதால் ஏற்படும் வருமான இழப்பை நடப்பு …
மகாதிர்: புத்ரா ஜெயாவை மீட்பதற்கு ஹரப்பானுக்கு ஒரு ‘மலாய் கட்சி’…
எதிர்க்கட்சி கூட்டணியின் பல்லின மக்கள் அணுகுமுறை கிராமப்புற மலாய் தொகுதிகளில் எடுபடவில்லை. அதன் விளைவாக பொதுத் தேர்தலில் கூடுதல் இருக்கைகளை பெற முடியவில்லை என்று பக்கத்தான் ஹரப்பான் மற்றும் பெர்சத்து தலைவரான மகாதிர் முகமட் கூறினார். கடந்த பொதுத் தேர்தலில் எதிரணி 52 விழுக்காடு வாக்குகளைப் பெற்றிருந்தும்…
பி.என். அரசாங்கத்தால், கோல்ட்பீல்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி ‘சிறியதாக்கப்பட்டது’
கோல்ட்பீல்ட்ஸ் தோட்டத் தமிழ்ப்பள்ளி மற்றும் ஈஜோக்கில், விவசாயிகளின் பிள்ளைகளுக்குத் தங்குமிடம் கட்டுமானப் பிரச்சனையில், சிலாங்கூர் அரசாங்கம் பொய்யான வாக்குறுதிகளை அளித்துள்ளது எனும் பி.புனிதனின் அறிக்கையை, சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வி கணபதிராவ் சாடினார். பள்ளிக்கூடத்திலிருக்கும் அனைத்துப் பிரச்சினைகளுக்கும் அடிப்படை காரணம், பி.என். அரசாங்கத்தின் அலட்சியப்போக்கே தவிர; மாநில…
“என்ன வேண்டுமானாலும் சொல்லுங்கள், நான் அவரைப் பிரதமராக அங்கீகரிக்கவில்லை”
பிரிபூமி பெர்சத்து மலேசிய கட்சியின் (பெர்சத்து) தலைவர், முஹிட்டின் யாசின், எதிர்க்கட்சியின் தேர்தல் அறிக்கை குறித்த பிரதமர் நஜிப் அப்துல் ரசாகின் விமர்சனத்தைப் பற்றி கவலை இல்லை என்று கூறியுள்ளார். நஜிப்பின் விமர்சனத்தை விட, அவர்களின் (ஹராப்பான்) வாக்குறுதிகளை மக்கள் ஏற்றுக்கொள்வதுதான் மிக முக்கியம் என்றார் அவர். "பல்வேறு…
உள்துறை அமைச்சு: அன்வார் ஜூன் 8 இல் விடுவிக்கப்படலாம், ஆனால்…
உள்துறை அமைச்சின்படி, எதிர்வரும் ஜூன் 8 இல், சுங்கைப் பூலோ சிறையிலடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் எதிரணித் தலைவர் விடுதலை பெற முடியும் அன்வாரின் தண்டனை மற்றும் அவரது நன்னடத்தைக்காக சிறைச்சாலைத் தண்டனையைக் குறைத்தல் ஆகியவற்றின் அடிப்படையில் அவர் விடுவிக்கப்படும் நாள் ஜூன் 10 என்று எழுத்து மூலம் நாடாளுமன்றத்திற்கு அளித்த…
ஐஜிபி மறுதலிப்பு மனப்பான்மையால் அவதியுறுகிறார்: கிட் சியாங் சாடல்
இன்ஸ்பெக்டர்- ஜெனரல் அப் போலீஸ் முகம்மட் பூஸி ஹருன், மலேசியாவில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் தொழில் அதிபர் ஜோ லோவுக்கும் 1எம்டிபிக்கும் தொடர்பிருப்பதாக காண்பிக்கவில்லை என்று கூறிக்கொண்டிருப்பது அவர் “மறுதலிப்பு மனப்பான்மை”யில் சிக்கித் தவிப்பதைக் காண்பிக்கிறது என்று லிம் கிட் சியாங் கூறினார். பொதுக் கணக்குக்குழு (பிஏசி) மற்றும் போலீஸ் …
முகைதின் விலக்கப்பட்டபோது ஷாரிர் எங்கு போனார்? ஜைட் வினவல்
முன்னாள் துணைப் பிரதமர் மூசா ஹித்தாம் பதவியிலிருந்து விலக்கப்பட்டதும் அவரின் உதவியாளராக இருந்த ஷாரிர் அப்துல் சமட் டாக்டர் மகாதிர் முகம்மட்டுக்கு எதிராகக் கொதித்தெழுந்ததை ஜைட் இப்ராகிம் நினைவுகூர்ந்தார். கொள்கைப் பிடிப்பாளர் என்று கருதப்படும் ஷாரிர், 1988-இல் ஓர் இடைத்தேர்தலில் சுயேச்சையாகப் போட்டியிட்டு வெற்றி பெற்றதை முன்னாள் சட்ட …
சிலாங்கூர் நீர் விநியோகத்தில் சதி என்பது ‘போலிச் செய்தி’. மாநிலத்துக்குத்…
எரிபொருள், பசுமைத் தொழில்நுட்பம்,, நீர்வள அமைச்சு சிலாங்கூர் நீர் விநியோகத்தில் கீழறுப்பு வேலைகள் நிகழ்ந்திருப்பதாகக் கூறும் செய்திகள் எல்லாம் ‘போலிச் செய்திகள்’ என்று வலியுறுத்துகிறது. நேற்று நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்ஸில் வெளிவந்த ஓர் அறிக்கையில் அது ஓர் “அசிங்கமான உத்தி” என்று குறிப்பிட்ட அமைச்சின் தலைமைச் செயலாளர் ஜைனி …
செய்திகள் : நாடாளுமன்றம் மார்ச் இறுதியில் கலைக்கப்படலாம்
பிரதமர் நஜிப் அப்துல் ரசாக், மார்ச் இறுதியில் அல்லது ஏப்ரல் தொடக்கத்தில் நாடாளுமன்றத்தைக் கலைக்கக்கூடும் என நியு ஸ்ரேய்ட்ஸ் டைம்சும் பெரித்தா ஹரியானும் கூறியுள்ளன. புதிய தேர்தல் தொகுதி எல்லைகள் மீதான தீர்மானம் மார்ச் 26க்கும் மார்ச் 29க்குமிடையில் மக்களவையில் தாக்கல் செய்யப்படலாம் என்று கூறப்படுவதை வைத்து அவ்வாறு …
எதிர்க்கட்சி ஆதரவாளர்கள், தலைமையாசிரியர் ஆக முடியாதா?
பக்காத்தான் ஹராப்பானை ஆதரிக்கும் அதேசமயம், பள்ளி தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற விரும்பும் ஆசிரியர்களை, கல்வி அமைச்சர் மஹ்ட்ஷீர் காலிட் குறைகூறினார். “ஒன்றிரண்டு பேர் பிரச்சனையில் உள்ளனர். ஹராப்பானை, பெர்சத்துவை ஆர்வத்துடன் ஆதரிக்கின்றனர். அவர்களின் (ஹராப்பான்) ஆடையை அணிந்து, அதன் கீழே எழுதுகின்றனர் (சமூக ஊடகங்களில்). "பின்னர்,…
மரியா சின் தேர்தலில் போட்டியிடுவதற்கு இருக்கை வழங்க பாஸ் தயார்
முன்னாள் பெர்சே தலைவர் மரியா சின் அப்துல்லா பொதுத் தேர்தலில் போட்டியிடுவதற்கு பாஸ் கட்சியின் தலைமையில் இயங்கும் காகாசான் செஜாதெராவின் கீழ் இருக்கை வழங்குவதற்கு தயாராக இருக்கிறது என்று பாஸ் மத்தியக் குழு உறுப்பினர் முகமட் சுஹாமி எம்போங் கூறுகிறார். பக்கத்தான் ஹரப்பான் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள்…
1எம்டிபி தொடர்பான போலி செய்திகளைப் பரப்பினால், அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்
தவறான செய்திகள், குறிப்பாக 1எம்டிபி தொடர்பான அவதூறு செய்திகள் வெளியிடுகின்ற தரப்பினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவுள்ளதாக தொலைத் தொடர்பு, பல்லூடக அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது, மலேசியத் தொலைத் தொடர்பு, பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) ஊடாக, தனது அமைச்சு இந்த விவகாரத்தைக் கண்காணித்து வருவதாக அதன் துணை அமைச்சர் ஜய்லானி…
கு நான்: தண்ணீர் பிரச்சனைக்கு ஹரப்பான் மற்றவர்கள் மீது பழி…
சிலாங்கூர் மாநிலத்தில் நிலவும் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனைக்கு மாநில மந்திரி பெசார் முகமட் அஸ்மின் அலி மத்திய அரசு, குறிப்பாக பிரதமர் நஜிப் ரசாக் பொறுப்பேற்க வேண்டும் என்று கூறியிருப்பதை கூட்டரசுப் பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோர் நிராகரித்தார். அவர்கள் மற்றவர்கள் மீது குற்றம்…
பினாங்கு பிகேஆர், அமனா நான்கு இருக்கைகளை பெர்சத்துவுக்கு விட்டுக்கொடுக்கின்றன
பினாங்கு ஹரப்பான் பங்காளிக் கட்சிகளுக்கிடையிலான இருக்கைகள் ஒதுக்கீடு குறித்து எதிர்க்கட்சிகளின் 10 ஆண்டு மாநில ஆட்சி கொண்டாட்ட நிகழ்ச்சியின் போது அறிவிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. இன்றிரவு நடக்கும் அந்நிகழ்ச்சியில் மாநில ஹரப்பான் தலைவர் லிம் குவான் எங் ஹரப்பான் இருக்கை ஒதுக்கீடுகள் குறித்த வதந்திகளுக்கு ஒரு முற்றுப்புள்ளி…
ரேலாவுக்கு ஒதுக்கீடு, படி அதிகரிப்பு, இன்னும் அதிகமாகத் தருவேன் என்கிறார்…
ரேலாவுக்கு (மக்கள் தொண்டர் படைப் பிரிவு) ரிம20 மில்லியன் கூடுதல் நிதி ஒதுக்கீட்டை இன்று பிரதமர் நஜிப் அறிவித்தார். இது இவ்வாண்டில் கொடுக்கப்பட்டு விட்ட ரிம100 மில்லியனுக்கு மேலாக கொடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு சீருடைக்காக ரிம80 மில்லியன் கொடுக்கப்பட்டது, இவ்வாண்டு ரிம100 மில்லியன் கொடுக்கப்பட்டது. அந்த ரிம180…
மசீச பண்டார் துன் ரசாக்கை அம்னோவுக்கு விட்டுக்கொடுக்குமா?
பண்டார் துன் ரசாக் கோலாலும்பூரின் தெற்கே உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதி. அங்கு 1999-இலிருந்து மசீசதான் போட்டியிட்டு வருகிறது. 2008-இலும் 2013-இலும் அங்கு அது தோல்வி கண்டது. இம்முறை அது அத்தொகுதியில் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளது. ஆனால், இம்முறை அம்னோவும் அத்தொகுதியைக் குறி வைத்துள்ளது. ஒரு …
ஆர்ஓஎஸ் அம்னோவுக்காக வேகமாக செயல்படுகிறது, ஹரப்பான் என்றால் இழுத்தடிக்கிறது: மகாதிர்…
அம்னோ அதன் கட்சி நெருக்கடிக்குத் தீர்வுகாண உதவுவதில் அதிவேகமாக செயல்படும் சங்கப் பதிவகம்(ஆர்ஓஎஸ்) எதிர்க்கட்சிகளைப் பதிவு செய்வதை மட்டும் இழுத்தடிக்கிறது என்று பக்கத்தான் ஹரப்பான் தலைவர் டாக்டர் மகாதிர் முகம்மட் சாடினார். ஆர்ஓஎஸ் பாரபட்சத்துடன் நடந்துகொள்வதற்கு இது தெள்ளத்தெளிவான எடுத்துக்காட்டு என்றவர் முகநூல் காணொளி ஒன்றில் குற்றஞ்சாட்டினார். “ஹரப்பான் …
இசி, ஆட்சேபனைகளைச் செவிமடுக்க மறுப்பது அரசமைப்பு மீறலாகும்
தேர்தல் ஆணையம் (இசி), தேர்தல் எல்லைகள் திருத்தி அமைத்த பிறகு அதற்கெதிரான ஆட்சேபனைகளைக் கேட்டு முடிக்காமல் இறுதி அறிக்கையைத் தயார் செய்தததன்வழி அரசமைப்பை மீறிவிட்டது. இவ்வாறு கூறிய பெர்சே இடைக்காலத் தலைவர் ஷாருல் முகம்மட் சாரி, சிலாங்கூரில் இரண்டாவது சுற்று விசாரணைகளில் இதுவரை 20விழுக்காடு ஆட்சேபனைகள் மட்டுமே செவிமடுக்கப்பட்டிருப்பதாகத் …
பெர்சத்து ஒரு மாதத்திற்குள் பதில் அளிக்க வேண்டும், இல்லையேல் பதிவு…
பெர்சத்து எழுப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் மற்றும் தேவையான ஆவணங்கள் ஆகியவற்றை 30 நாள்களுக்குள் தாக்கல் செய்ய வேண்டும், இல்லையேல் அக்கட்சியின் பதிவு இரத்து செய்யப்படும் என்று மன்றங்களின் பதிவாளர் (ரோஸ்) இன்று வெளியிட்ட ஓர் அறிக்கையில் கூறுகிறார். பெர்சத்து உறுப்பினர்களிடமிருந்து பெற்ற புகார்களைத் தொடர்ந்து கடந்த பெப்ரவரி…
குவான் எங்: ஹரப்பானும் பிரிம் கொடுக்க முடியும், பினாங்கைப் பின்பற்றுங்கள்
பக்கத்தான் ஹரப்பான் ஆட்சிக்கு வந்தால் பொருள், சேவை வரி(ஜிஎஸ்டி) இன்றி அதனால் 1மலேசியா மக்கள் உதவித் தொகை (பிரிம்) வழங்க முடியுமா என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. இதற்குப் பதிலளித்த பினாங்கு முதலமைச்சர் லிம் குவான் எங், ஜிஎஸ்டி இல்லாவிட்டாலும்கூட ஹரப்பானால் மக்களுக்குத் தொடர்ந்து உதவித் தொகை கொடுக்க முடியும் …
1எம்டிபி- தொடர்பு நிதிகளை மலேசியர்களுக்கே திருப்பிக் கொடுப்பீர்: சுவிட்சர்லாந்துக்கு என்ஜிஓ-கள்…
சுவிட்சர்லாந்தில் கோரிக்கையற்றுக் கிடக்கும் சுமார் ரிம400மில்லியனை மலேசியர்களுக்குத் திருப்பிக் கொடுப்பதா வேண்டாமா என்ற தீர்மானத்தின்மீது சுவீஸ் நாடாளுமன்றம் விவாதம் நடத்துவதற்கு முன்னதாக, மலேசிய என்ஜிஓ-கள் மலேசியர்களுக்கு ஆதரவாக வாக்களிக்குமாறு சுவீஸ் எம்பிகளைக் கேட்டுக்கொண்டுள்ளன. “பறிமுதல் செய்யப்பட்ட நிதிகளைப் பறிகொடுத்த மக்களிடமே திருப்பிக் கொடுத்தல்” என்ற தீர்மானம் அடுத்த வியாழக்கிழமை …
ரானாவில் மீண்டும் ஒரு நில நடுக்கம்
இன்று காலை மணி 8.09க்கு மீண்டும் ஒரு நில நடுக்கம் சாபாவை உலுக்கியது. ரிக்டர் கருவியில் 3.1 என்று பதிவான அந்த நில நில நடுக்கம் ரானாவுக்கு 16கிமீ தொலைவில் மையம் கொண்டிருந்ததாக வானியல் ஆய்வுத் துறை ஓர் அறிக்கையில் கூறியது. “நில நடுக்கத்தன் அதிர்வுகள் ரானாவில் உணரப்பட்டன”, …
டாக்டர் எம்: நஜிப் குறைந்தது 62 தவறுகள் செய்துள்ளார்
பிரதமர் நஜிப் ரசாக், 2009-ல் பதவி ஏற்றதிலிருந்து, குறைந்த பட்சம் 62 குற்றங்களைச் செய்துள்ளார் என்று பக்காத்தான் ஹராப்பான் தலைவர் துன் டாக்டர் மகாதிர் குற்றஞ்சாட்டினார். "நான் அவரது குற்றங்களைப் பட்டியலிட்டுள்ளேன். இன்றுவரை நஜிப் செய்த 60 தவறுகளை நான் கண்டறிந்துள்ளேன்," என்று நேற்று பக்காத்தான் ஹராப்பான் தேர்தல்…














