செக் மோசடி வழக்கில் நடிகை ஜீவிதாவுக்கு பிடிவாரண்டு

jeevithaதெலுங்கு நடிகர் டாக்டர் ராஜசேகரனின் மனைவி நடிகை ஜீவிதா, பரந்தாமரெட்டி என்பவரிடம் ரூ.34 லட்சம் கடனாக வாங்கினார். 3 மாதங்களில் திருப்பிக்கொடுப்பதாக கூறிய ஜீவிதா, பணத்தை கொடுக்கவில்லை.

அவர் ஏற்கனவே கொடுத்த ‘செக்’கை பரந்தாமரெட்டி வங்கியில் போட்டபோது, அது பணம் இல்லாமல் திரும்பிவிட்டது. இதனால் பரந்தாமரெட்டி ஜூபிலி ல்ஸ் போலீசில் புகார் செய்தார். கோர்ட்டு 2 முறை நோட்டீசு அனுப்பியும் ஜீவிதா கோர்ட்டில் ஆஜராகவில்லை.

இதனால் ஜீவிதாவுக்கு நேற்று ஐதராபாத் கோர்ட்டு, ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்தது. நடிகை ஜீவிதாவை கைது செய்து கோர்ட்டில் ஆஜர்படுத்துமாறு ஜூபிலி ல்ஸ் போலீசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.