நாயை வைத்து சத்யராஜ் தயாரிக்கும் புதிய படம்

sathyarajநடிகர் சத்யராஜ் நடிப்பதோடு மட்டுமின்றி தயாரிப்பாளராகவும் மாறியுள்ளார். இவர் சொந்தமாக நாதாம்பாள் பிலிம் பேக்டரி என்ற தயாரிப்பு நிறுவனம் தொடங்கி, தன்னுடைய மகன் சிபிராஜ் நடிப்பில் பிரபு சாலமன் இயக்கிய ‘லீ’ என்ற படத்தை தயாரித்தார். அப்படம் இவருக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தேடித் தரவில்லை.

இந்நிலையில், தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் மேலும் ஒரு படத்தை தயாரிக்கவிருக்கிறார். அப்படத்திற்கு ‘நாய்கள் ஜாக்கிரதை’ என்று பெயரிட்டிருக்கின்றனர். இப்படத்திலும் தன்னுடைய மகன் சிபிராஜையே நாயகனாக்கியுள்ளார். மேலும், இப்படத்தில் நாய் ஒன்று முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறதாம்.

இப்படத்தை சக்தி சௌந்தர் ராஜன் இயக்குகிறார். இவர், பிரசன்னா, சிபிராஜ் நடிப்பில் வெளிவந்த ‘நாணயம்’ படத்தை இயக்கியவர். தரண்குமார் இசையமைக்கிறார். நிஷார் ஒளிப்பதிவை கவனிக்கிறார். விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பை தொடங்கவுள்ளனர்.