பாண்டிராஜ் படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாய் பணமோசடி!

pandiraj_004தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாய் தன்னுடைய அலுவலகத்திலிருந்து பேசுவது போல சிலர் பேசி பண மோசடி செய்கின்றனர் என இயக்குனர் பாண்டிராஜ் பொலிசில் புகார் கொடுத்துள்ளார்.

பசங்க, மெரினா, கேடி பில்லா கில்லாடி ரங்கா போன்ற வெற்றிப்படங்களை இயக்கியவர் பாண்டிராஜ்.

இந்நிலையில் இவரது அவலுகத்தின் பெயரில் பணமோசடி நடப்பதாக புகார் மனு ஒன்றினை பாண்டிராஜ் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தனது படத்தில் நடிக்க வாய்ப்பு தருவதாய் கூறி தனது அலுவலகத்திலிருந்து பேசுவது போல சிலர் பேசி பண மோசடி செய்கின்றனர் என்றும், அவற்றை நம்பி ஏமாற வேண்டாம் எனவும் கூறியுள்ளார்.

அதுவும் குழந்தைகளுக்கு நடிக்க வாய்ப்பு தருவதாகவும், அதற்குமுன்பு நடிகர் சங்கத்தில் உறுப்பினராக சேர்த்துவிடுவதற்க்கு சுமார் 50 ஆயிரம் வரை கேட்டு ஏமாற்றுகிறார்கள்.

மேலும் என் பெயருக்கும், என்னுடைய பசங்க புரடக்ஷன்ஸ் நிறுவனத்திற்கும் கலங்கம் ஏற்படுத்தும் வகையில் இதை செய்து வருகின்றனர். அதனால் யாரும் ஏமாற்றபட்டுவிடக்கூடாது என்கிற நல்லெண்ணத்தில் இதை தங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக விருகம்பாக்க காவல் நிலையத்தில் பாண்டிராஜ் புகார் கொடுத்துள்ளார்.