தாய் ஆனதில் மகிழ்ச்சி!: ஐஸ்வர்யா ராய் ஒப்புதல்

Aishwarya-Rai-2013-Photos-2தாய் ஆனதில், எனக்கு மிகுந்த மகிழ்ச்சி, என, முன்னாள், உலக அழகியும், பாலிவுட் பிரபல நடிகையுமான, ஐஸ்வர்யா ராய் தெரிவித்து உள்ளார்.

மும்பையில் நடந்த, குழந்தைகள் தொடர்பான மருத்துவ நிகழ்ச்சியில் பங்கேற்ற, ஐஸ்வர்யா ராய் பேசியதாவது: பெண்கள் அனைவருக்குமே, தாய் ஆவதில் மிகுந்த மகிழ்ச்சி ஏற்படும். அவ்வகையில், நான் தாய் ஆனதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். என் மகள் ஆராத்யா, கடவுள் எனக்கு அளித்த, மிகப் பெரிய பரிசு.

என் மகளின் எதிர்கால நலன் கருதி, அவளின் தொப்புள் கொடியை, ஸ்டெம் செல் வங்கிக்கு கொடுத்துள்ளேன். என் நண்பர்கள் ஏராளமானோர், டாக்டர்களாக உள்ளனர். அவர்களிடம், புதிய அறிவியல் மற்றும் மருத்துவம் சார்ந்த கண்டுபிடிப்புகள் பற்றி, உரையாடுவேன். ஸ்டெம் செல் வங்கி முறை, மக்களிடம் பிரபலமடைய வேண்டும். இதன் மூலம், ஏராளமான பிரச்னைகளுக்கு தீர்வு காண முடியும். இவ்வாறு, ஐஸ்வர்யா ராய் பேசினார்.