இந்​தி​யாவை வெறும் ​சந்​தை​யா​கக் கரு​தக்​கூ​டாது: நரேந்​திர மோடி

narendra_modiAஇந்​தி​யாவை வெறும் சந்​தை​யா​கக் கரு​தக்​கூ​டாது என்று பாஜ​க​வின் பிர​த​மர் வேட்​பா​ளர் நரேந்​திர மோடி வலி​யு​றுத்​தி​யுள்​ளார்.​

அமெ​ரிக்​கத் தலை​ந​கர் வாஷிங்​ட​னில்,​​ உலக அள​வில் வளர்ந்து வரும் சந்​தை​கள் தொடர்​பான கருத்​த​ரங்கு திங்​கள்​கி​ழமை நடை​பெற்​றது.​ இதில் பங்​கேற்​ற​வர்​க​ளு​டன் குஜ​ராத் முதல்​வ​ரும் பாஜ​க​வின் பிர​த​மர் வேட்​பா​ள​ரு​மான நரேந்​திர மோடி,​​ ஆம​தா​பா​தில் இருந்து விடியோ கான்​ஃ​ப​ரன்ஸ் முறை​யில் பேசி​ய​தா​வது:​

இந்​தியா போன்ற வள​ரும் நாடு​களை வெறும் சந்​தை​க​ளா​கப் பார்ப்​பது தவ​றா​கும்.​ அவை வெறும் சந்​தை​கள் மட்​டும்​தானா?​ அவை உரு​வாகி வரும் வளர்ச்சி மையங்​க​ளா​கும்.​ இந்த நாடு​க​ளில் ஏரா​ள​மான மனித வளம் உள்​ளது.​ எதைச் செய்​தா​லும் மக்​கள் தாங்​கிக் கொள்​வார்​கள் என்று இந்​திய ஆட்​சி​யா​ளர்​கள் கரு​தக் கூடாது.​ ​

இந்​தி​யா​வில் மக்​கள் இனி​யும் ஏமா​றத் தயா​ரில்லை என்ற நிலைக்கு வந்​துள்​ளார்​கள்.​ ஜன​நா​ய​கத்​தில் சில குறை​பா​டு​கள் உள்​ளன.​ ஆனால் இந்​தியா போல் பல்​வேறு இனம்,​​ மதம்,​​ மொழி போன்​ற​வற்​றைக் ​ கொண்ட நாட்​டுக்கு ஜன​நா​ய​கம்​தான் சிறந்த ஆட்சி முறை​யா​கும் என்​றார் மோடி.

TAGS: