நிலநடுக்கத்தை பொருட்படுத்தாத விஜய்

vijay14சமீபத்தில் ‘ஜில்லா’ படத்தின் பாடல் காட்சிகளை படமாக்குவதற்காக படக்குழு ஜப்பான் சென்றிருந்தது. அந்த சமயத்தில் ஜப்பானில் நிலநடுக்கம் ஏற்பட்டது.

இது குறித்து அறிந்ததும் பதறிப்போன தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்ரி, படக்குழுவினரை உடனே நாடு திரும்புமாறு கேட்டுக்கொண்டாராம். ஆனால் இதற்கு படக்குழுவினர் மறுத்துவிட்டனராம். காரணம், அப்போது அங்கே இருந்த க்ளைமேட் வருடத்துக்கு ஒருமுறைதான் வரும்.

தவிர, அதுதான் பாடலுக்குத் தேவையான கலர்ஃபுல் கேன்வாஸ் என்பதால் ‘சுனாமியே வந்தாலும் பரவாயில்லை’ என்று வேலையை முடித்துவிட்டுத்தான் திரும்பி இருக்கிறார்கள். தற்போது படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு நடந்து வருகிறது. ஜில்லா படம் பொங்கலை முன்னிட்டு ஜனவரி 10ம் தேதி திரைக்கு வருமென எதிர்பார்க்கப்படுகிறது.

ஆர்.பி. சௌத்ரி தயாரிப்பில் நேசன் இயக்கத்தில் விஜய், காஜல் அகர்வால், மோகன்லால், பூர்ணிமா பாக்யராஜ் நடித்து வரும் படம் ஜில்லா.