இந்தியாவில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் மூடநம்பிக்கைகளுக்கும் மந்திரவாதிகளுக்கும் எதிராக பிரச்சாரம் செய்துவந்த செயற்பாட்டாளர் ஒருவரை கொலை செய்தமை தொடர்பில் காவல்துறையினர் இரண்டு பேரைக் கைதுசெய்துள்ளனர்.
புனே நகரில், காலை-நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டு மூன்று மாதங்கள் கடந்துள்ள நிலையில், இவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்தியாவில், அற்புதங்களை நிகழ்த்துவதாக கூறிவரும் சாமியார்களையும் ஆன்மீக குருமாரையும் எதிர்த்து சில தசாப்தங்களாகவே தபோல்கர் பிரச்சாரங்களில் ஈடுபட்டுவந்துள்ளார்.
சில சமய சடங்குகளின் போது நடக்கும் மிருக பலிகளையும் அவர் எதிர்த்துவந்துள்ளார்.
அவரது கொலை, நாடு முழுவதிலும் மூடநம்பிக்கை- எதிர்ப்பாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் மேலும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -BBC


























அய்யா 1000 விவேக் வந்தாலும் மூடநம்பிக்கையில் முழ்கி கிடப்பவர்களை கரை சேர்ப்பது கஷ்டம்.
மூட நம்பிக்கைதான் சாமியார்கள் மந்திரவாதிகள் போன்றோரின் மூலதனம்.தமிழ்நாட்டில் பெரியார் மிக துணிச்சலாக கடவுள் எதிப்புக்கொள்கையை பரப்பினார்.சிந்திக்கும் திறன் கொண்ட தமிழர்கள் அவரது கொள்கையை முழுமையாக இல்லாவிட்டாலும் ஓரளவேனும் ஏற்றுக்கொண்டனர்.தொடக்கத்தில் எதிர்த்த பலர் பின்னாளில் அவரை பாரட்டியதுமுண்டு.தற்பொழுது இந்தியாவில் பல திருட்டு சாமியார்கள் முளைத்துக்கொண்டு மூலை முடுக்கெல்லாம் தாண்டவம் ஆடுகின்றனர்.இன்று செவ்வாய்க்கு ராகேட் அனுப்பும் அளவுக்கு அறிவு வளர்ச்சியடைந்துள்ள இந்தியாவில் படித்தவனும் பாமரனும் மூடநம்பிக்கைகளில் ஊரிக்கிடக்கின்றனர்.வடநாட்டில் பகுத்தறிவு கொள்கைகளை பரப்ப சீர்திருத்தவாதிகள் பயப்படுகின்றனர்.
மலேசியாவில் இந்துக்கள் மத்தியில் மூட நம்பிக்கை படுவேகத்தில் வளர்ந்து வருகிறது. மூட நம்பிக்கைளுக்கு எதிராக போராடிய மதிக போன்ற கட்சிகளைக் இப்போது காணமுடியவில்லை. அரசியல் கட்சிக்ள், பொது அமைப்புகள், தன்முனைப்பு பயிற்சியாளர்கள், ஆன்மிகவாதிகள்,, மகான்கள் என ஆயிரக்கணக்கானோர் நாட்டில் இருந்தும் காட்டுமிராண்டித் தனமான வழிபாடு, கோயிலில் நரபலி கொடுக்கும் கொடூரம் போன்றச் செயல்களை தடுக்க முடியவில்லை. நமது இனம் இந்நாட்டில் அழிவை நோக்கி போய் கொண்டிருக்கிறது என்பதற்கு இதுவே தக்க சான்று