டீ கடை மூலம் ஆதரவு திரட்டும் பாஜக: கலக்கத்தில் காங்கிரஸ்

modi_tea_001நாடு முழுவதும் ஆயிரம் இடங்களில் டீ கடை நடத்தி ஆதரவு திரட்ட திட்டம் பாரதீய ஜனதா கட்சி முடிவுசெய்துள்ளது.

வரும் தேர்தலில் மோடியை ஆதரிக்க கேட்டு, 300 நகரங்களில், ஆயிரம் இடங்களில பல கட்டமாக டீ விற்கும் கடை துவக்கி இதன் மூலம் மக்களிடம் பா.ஜ., அரசுக்கு வர வேண்டிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் பிரசாரம் செய்யவிருப்பதாக பா.ஜ., எதிர்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ் இன்று அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சுஷ்மா சுவராஜ் கூறுகையில், சாய் பி சார்ச்சா என்ற டீ விற்கும் வியாபாரம் நடத்தப்படும். இதன் மூலம் மோடிக்கு ஆதரவு திரட்ட முடிவு செய்துள்ளோம்.

10 முதல் 15 ரவுண்ட்டுகளாக நடத்தப்படும். இதற்கென ஆயிரம் இடங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. முதல் கட்ட பிரசாரத்தை பா.ஜ. பிரதமர் வேட்பாளர் நரேந்திரமோடி வரும் பிப்ரவரி 12ம் திகதி துவக்கி வைக்கவுள்ளார்.

மேலும் இந்த பிரசாரம் தொடர்பாக மக்கள் தங்களின் கருத்துக்களை போன் மற்றும் சமூக வலைதளம் மூலம் கட்சியின் தலைமைக்கு அனுப்பி வைக்கலாம். இந்த பிரசாரத்தின் மூலம் சுமார் 2 கோடி பேரை சந்திக்க வாய்ப்பு ஏற்படும் என்றும் இந்த பிரசாரம் பா.ஜ., வுக்கு பெரும் செல்வாக்கை தரும் எனவும் தெரிவித்துள்ளார்.

TAGS: