இது கதிர்வேலன் காதல் திரைப்படத்துக்கு வரி விலக்கு கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

ikkஇது கதிர்வேலன் காதல் என்ற திரைப்படத்துக்கு வரிவிலக்கு அளிக்கக் கோரிய மனுவுக்கு அரசிடமிருந்து விளக்கம் பெற்று தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது கதிர்வேலன் காதல் என்ற திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிப்பதற்கு வணிக வரித்துறை அதிகாரிகள் மறுப்பு தெரிவிக்கின்றனர். எனவே, எங்களது திரைப்படத்துக்கு வரி விலக்கு அளிப்பதற்கு வரித்துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவன அதிகாரி செண்பகமூர்த்தி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி வி.தனபாலன் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதி இந்த மனு தொடர்பாக அரசிடமிருந்து விளக்கம் கேட்டுத் தெரிவிக்குமாறு அரசு வழக்குரைஞருக்கு உத்தரவிட்டார். இதையடுóத்து பிப்ரவரி 7-ஆம் தேதிக்கு வழக்கு ஒத்தி வைக்கப்பட்டது.