நாட்டில்ஏழைகளின் எண்ணிக்கை குறைவு: மத்திய அரசு

Tamil_News_large_911687புதுடில்லி: நாட்டில் எடுக்கப்பட்ட தேசிய மாதிரி ஆய்வில் ஏழைகளின் எண்ணிக்கை 40 கோடியிலிருந்து 27 கோடியாக குறைந்துள்ளது எனமத்திய் அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து மத்திய அரசின் திட்டத்துறை இணை அமைச்சர் ராஜிவ் சு்க்லா தெரிவித்துள்ளதாவது: கடந்த 2011-12-ம் ஆண்டில் நாடு மழுவதும் தேசிய மாதிரி ஆய்வு நடத்தப்பட்டது. வீடுகளில் நுகர்வுக்காக செலவிடப்படும் தொகையின்அடிப்படையில் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வின் முடிவில் கடந்த 2004-05-ம்ஆண்டில் இருந்த ஏழைகளின்எண்ணிக்கையான 40 கோடியிலிருந்து 2011-12-ல் 27 கோடியாக குறைந்துள்ளது.நாட்டிலேயே உ.பி.,மாநிலத்தில் தான் அதிக அளவிலான சுமார்5.98 கோடி அளவிற்கு ஏழை மக்கள் உள்ளனர். இரண்டாம் இடத்தில் பீகார் மாநிலம் உள்ளது. இங்கு 3.58 கோடி பேர் ஏழைகளாக உள்ளனர். ம.பி.,யில் 2.34 கோடி, மகாராஷ்டிரத்தி்ல 1.97 கோடி, மே.வங்கத்தி்ல 1.84 கோடி பேர்கள் ஏழைகளாக உள்ளனர்.
கிராமப்புறங்களை பொறுத்தவரையில் 2 தனி நபர் நுகர்வு447 என்றும் நகர்புறங்களில் 579 ரூபாயாகவும் இருந்தது. அவை 2011-12-ம் ஆண்டில் முறையே 816 ஆகவும், நகர்புறங்களில் ஆயிரம் ரூபாயாகவும் அதிகரித்துள்ளது என ராஜிவ்சுக்லா தெரிவி்த்துள்ளார்.

TAGS: