டான்சர்கள் மீது பரிதாபம் காட்டிய சமந்தா!

samanthaலிங்குசாமி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் படம் ‘அஞ்சான்’. இந்தப்படத்தில் அழகாக தாடி வளர்த்து ‘நந்தா’ படத்தில் இருந்ததைப்போல ஆளே மாறியிருக்கிறார் சூர்யா.

இதில் சூர்யாவுக்கு ஜோடி சமந்தா. இருவரும் ஜோடி சேரும் முதல் படம் இது. இப்படத்தின் படப்பிடிப்பு மும்பையில் துவங்கி இப்போது பரபரப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்திற்கான பாடல் காட்சி ஒன்று மகாராஷ்ட்ரா மாநிலம் புனே-யிலிருந்து 98 கிலோமீட்டர் தொலைவிலுள்ள பஞ்ச்கனி என்ற இடத்தில் படமாக்கப்பட்டது. மிகவும் ஹாட்டான அந்த இடத்தில் சமந்தா ’எனர்ஜெட்டிக்’ ஆன டான்ஸ் ஒன்றை ஆடியிருக்கிறார்.

இது குறித்து அவர் ட்விட்டரில் கூறியிருப்பதாவது, “அஞ்சான்’ படத்திற்காக கடினமான, வேகமான டான்ஸ் பாடல் ஒன்றை படமாக்கினோம். பின்னால், ஆடும் டான்சர்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். குடைகள் கிடையாது, ஜுஸ் கிடையாது, கேரவன் கிடையாது. இருந்தாலும் அதிகமான சூட்டில்…அவங்கள்லாம் கலக்கறாங்க,” என குறிப்பிட்டுள்ளார்.

‘அஞ்சான்’ திரைப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகி வருகிறது. லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸும் யுடிவி நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தில் வித்யுத் ஜம்வால், மனோஜ் பாஜ்பாய், தலிப் தாஹில், பிரமானந்தம் உள்பட முன்னணி நட்சத்திரங்கள் பங்கேற்று நடிக்கிறார்கள். படத்தை ஆகஸ்ட் 15, 2014ல் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது.