சினிமா மோகத்தால் விபச்சாரத்தில் சிக்கிய துணை நடிகைகள்: அதிர்ச்சி தகவல்

prostute_girl_001சினிமா மோகத்தால் இணையதளம் மூலம் பாலியல் தொழிலில் சிக்கிய துணை நடிகைகளை பொலிசார் மீட்டுள்ளனர்.

சமீப காலமாக சினிமாவில் கதாநாயகி வேடம் தருவதாக வரும் இணையதள விளம்பரங்கள் மூலம் அழகான இளம்பெண்கள் பலர் வலுக்கட்டாயமாக பாலியல் தொழிலில் தள்ளப்படும் பரிதாபம் சென்னையில் வேகமாக பரவி வருகிறது.

அந்தவகையில், சினிமா ஆசையில் பாலியல் தொழிலில் தள்ளப்பட்ட நான்கு துணை நடிகைகளைப் பொலிசார் மீட்டுள்ளனர்.

சென்னை ஆலந்தூர், ஜி.எஸ்.டி. சாலையில் உள்ள பிரபல மசாஜ் சென்டரில் பாலியல் தொழில் நடப்பதாக விபசார தடுப்பு பொலிசாருக்கு புகார் வந்ததையடுத்து, குறிப்பிட்ட மசாஜ் சென்டரில் சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்க கமிஷனர் ஜார்ஜ் உத்தரவிட்டார்.

அதனைத் தொடர்ந்து கூடுதல் கமிஷனர் நல்லசிவம், துணை கமிஷனர் ஜெயக்குமார், உதவி கமிஷனர் கணபதி ஆகியோர் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் கோபிநாத் தலைமையிலான விபசார தடுப்பு போலீசார் குறிப்பிட்ட மசாஜ் சென்டரில், அதிரடி சோதனை நடத்தினார்கள்.

அப்போது, அண்ட்ஜ மசாஜ் செண்டரில் பாலியல் தொழில் செய்து வந்த நான்கு இளம்பெண்களை பொலிசார் மீட்டனர். பொலிசாரால் மீட்கப்பட்ட அந்த நான்கு இளம்பெண்களும் ஏற்கனவே சினிமாவில் சிறிய வேடங்களில் நடித்துள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இணையதள விளம்பரத்தை பார்த்து, சினிமா கதாநாயகி ஆசையில், வீட்டை விட்டு ஓடிவந்து, புரோக்கர்களிடம் மாட்டிக்கொண்டதும் பின்னர் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டதும் தெரியவந்துள்ளது.

இவர்களை பாலியல் தொழிலில் தள்ளியதாக, சென்னை கே.கே.நகரைச் சேர்ந்த திரிவேணி (40) என்ற பெண் புரோக்கர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் 3 முறை குண்டர் சட்டத்தில் சிறைக்கு போய் வந்த, பிரபல விபச்சார தாதா பாண்டியன் (40) என்பவரும் கைதாகியுள்ளார்.