மோடி பிரதமரானால் ராஜபக்ச மீது விசாரணை கமிஷன்! வைகோ தகவல்

vaikoநரேந்திர மோடி பிரதமாராக பதவியேற்றால், இலங்கை படுகொலைக்கு காரணமான ராஜபக்ச மீது விசாரணை நடத்த கமிஷன் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறினார்.

சாத்தூரில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது பேசிய வைகோ, இலங்கை அதிபர் ராஜபக்சே செய்த குற்றங்களையும் வெளிப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார்.

மேலும், ஓட்டுக்கு பணம் கொடுத்து வாக்காளர்களை விலைக்கு வாங்க சில கட்சிகள் முயற்சிகள் மேற்கொண்டுவருவதாகவும், அந்த கட்சிகளுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்றும் வைகோ தெரிவித்தார்.

TAGS: