கூடங்குளம் அணு உலையில் விபத்து ஆறு தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதி – வைகோ

vaikoகூடங்குளத்தில் அமைக்கப்பட்டு உள்ள அணுமின்விசை நிலையத்தின் முதலாவது அணுஉலையில் மே 14 ஆம் தேதி பராமரிப்புப் பணியை தொடங்கியபோதுஇ விபத்து ஏற்பட்டுள்ளது.

அங்குள்ள ‘டர்பைன்’ பகுதியில் வெப்ப நீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் வால்வு திறக்கப்பட்டபோதுஇ இந்தப் பணியில் ஈடுபட்டு இருந்த ராஜன்இ பால்ராஜ்இ செந்தில்குமார்இ ராஜேÞஇ வினுஇ மகேஷ் ஆகிய ஆறு தொழிலாளர்கள் மீது வெப்ப நீர் கொட்டியதால்இ அவர்கள் கடுமையான காயங்களால் பாதிக்கப்பட்டுஇ நாகர்கோவில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பான முறையில் அமைக்கப்பட்டு உள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்தது. கூடங்குளத்தில் என்ன நடக்கிறது என்பது வெளிஉலகிற்குத் தெரிவது இல்லை.

கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள அணு உலைகள் ஒன்று மற்றும் இரண்டில் பயன்படுத்தப்பட்டு உள்ள உதிரிப்பாகங்கள் தரம் குறைந்தவை என்று ரஷ்ய ஊடகங்கள் வாயிலாக அம்பலம் ஆயின. ஜியோ-போடோல்Þக் (ணுஐழு-pழனழடளம) உள்ளிட்ட நிறுவனங்கள் கூடங்குளம் அணுஉலைகளுக்கு அளித்துள்ள உதிரி பாகங்கள் சோதனைக் கட்டத்திலேயே குறைபாடுகள் கொண்டவையாக இருந்தன என்ற அச்சம் எழுந்தது.

அந்நிறுவனத்தின் கொள்முதல் இயக்குநர் செர்கெய் ஷூடோவ் என்பவரை ரஷ்ய அரசு கைது செய்துஇ விசாரணை நடத்தியதை நார்வே நாட்டில் இயங்கும் சர்வதேச சுற்றுச் சூழல் தன்னார்வ அமைப்பான பெல்லோனா பவுண்டேஷன் 2012 பிப்ரவரியில் வெளிப்படுத்தியது.

ஆனால்இ இந்திய அணுசக்தித் துறை மற்றும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியம்இ அணுஉலை பாதுகாப்பு குறித்த ஐயப்பாடுகளை அலட்சியப்படுத்திவிட்டுஇ அணு மின் உற்பத்தியைத் தொடங்குவதிலேயே குறியாக இருந்தன. கூடங்குளம் அணுஉலையை இயக்குவதன் மூலம் தமிழக மக்களின் உயிரை மத்திய அரசு பணயம் வைத்து இருக்கிறது.

ஜெயலலிதா அரசு தமிழக மக்களை ஏமாற்றி நாடகம் ஆடியது. கூடங்குளம் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது ஆகும்.
ஜப்பான் போன்ற முன்னேறிய நாடுகூட புகுஷிமா அணுஉலை விபத்தைத்  தடுக்க முடியவில்லை. வேறு பல நாடுகளில் விபத்து ஏற்பட்டுள்ள அணுஉலைகளில் இருந்து வெளிப்படும் கதிர்வீச்சு அபாயங்களை எதிர்கொள்ள முடியாமல் தடுமாறிக் கொண்டு இருக்கின்றார்கள்.

எனவேஇ கூடங்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள அணுஉலைகளை முற்றாக அகற்ற வேண்டும். மூன்று மற்றும் நான்காவது அணு உலைகளை அமைக்கும் முயற்சிகளைக் கைவிட வேண்டும்.

‘தாயகம்’ வைகோ
சென்னை – 8 பொதுச் செயலாளர்இ
15.05.2014 மறுமலர்ச்சி தி.மு.க

TAGS: