காங்கிரஸ், பாஜக வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றமில்லை: திருமாவளவன்

Thiruma1997ம் ஆண்டில் போலீசார் தொடர்ந்த வழக்கில் கடலூரில் நீதிமன்றத்தில் திருமாவளாவன் இன்று ஆஜர் ஆனார். புதுக்கடை கூட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக பேசியதாக திருமாவளவன் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

நீதிமன்றத்திற்கு வெளியே அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  ‘’பொய் வழக்குகளால் நீதிமன்றம் நேரம் விணடிக்கப்படுகிறது’’என்று தெரிவித்தார். அவர் மேலும்,   ‘’காங்கிரஸ், பாஜக வெளியுறவுக்கொள்கைகளில் மாற்றமில்லை.

ராஜபக்சேவை அழைக்க வேண்டும் என்பதற்காகவே பிற தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப் பட்டுள்ளது.   தமிழர் நலனுக்காக மோடி பதவியேற்பு விழாவிற்கு ராஜபக்சேவை அழைத்தி ருக்க வேண்டியதில்லை.  ராஜபக்சேவை தனியாக அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி இருக்கலாம்.

TAGS: