ரசிகர்கள் கிண்டல்: படப்பிடிப்பு தளத்திலிருந்து ஓட்டமெடுத்த சூர்யா!

சூர்யா-லிங்குசாமி கூட்டணியில் உருவான அஞ்சான் கடந்த 15ம்தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகி ஓடிக்கொண்டிருக்கிறது.

சூர்யாவுடன் சமந்தா, வித்யூத் ஜம்வால், சூரி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ’அஞ்சான்’ படம் இன்று வரை ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களையே சந்தித்து வருகிறது. இதனால் சூர்யா மட்டுமின்றி படத்தின் இயக்குனர் லிங்குசாமியும் மிகுந்த மன வருத்தத்தில் இருந்து வருகிறார். இந்நிலையில் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றினார் போல் ரசிகர்கள் சிலர் செய்த சேட்டையால் சூர்யா மேலும் அப்செட் ஆகியுள்ளார்.

வெங்கட்பிரபு இயக்கத்தில் மாஸ் படத்தின் படப்பிடிப்பு அண்மையில் சென்னையில் உள்ள கீழ்ப்பாக்கம் ஈகா தியேட்டர் அருகே நடைபெற்றதாம். இந்தப் படப்பிடிப்பில் சூர்யா சம்மந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட்டு வந்ததாம். அப்போது படப்பிடிப்பை ஓரமாக நின்று வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த ரசிகர்கள் சிலர் சூர்யாவையும் அஞ்சான் படத்தையும் பற்றி கிண்டலடிக்கும் விதமாக கமென்ட் அடித்தார்களாம்.

இதனால் கடுப்படைந்த சூர்யா ரசிகர்களிடம் கோபமுடன் பேசியுள்ளார். ஆனால் சூர்யாவின் கோபத்தை துளிகூட சட்டைப்பண்ணாத ரசிகர்கள் மீண்டும், மீண்டும் கிண்டலிட்டு அவரை அதிக கோபத்துக்கு ஆளாக்கியுள்ளனர். பின்னர் படக்குழுவினர் வேறுவழியின்றி இந்த விஷயத்தை காவல்துறையினர் வரைக்கும் கொண்டுசென்றுள்ளனர். உடனே ஸ்பாட்டுக்கு வந்த காவல்துறையினர் அங்கிருந்து ரசிகர்களை விரட்டியுள்ளனர். இதனால் ஆத்திரமுற்ற சூர்யா, அஞ்சான் ப்ரமோஷன் நிகழ்ச்சிக்கு செல்வதாக கூறிவிட்டு படப்பிடிப்பு தளத்தைவிட்டு சிட்டாக பறந்துவிட்டாராம்.