தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர்!- நல்லகண்ணு

nallakannu12ஈழத் தமிழர் விவகாரத்தில், தமிழர்களை விட ராஜபக்சவுக்குத்தான் பாஜக தலைவர்கள் விசுவாசமாக உள்ளனர் என்று மூத்த கம்யூனிஸ்ட் தலைவர் நல்லகண்ணு கூறியுள்ளார்.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு செய்தியாளர்களிடம் பேசுகையில்,

இலங்கை தமிழர் விவகாரத்தில் பாஜக அரசு, ஐநா தீர்மானத்திற்கு எதிராக செயல்பட்டு வருகிறது.

அக்கட்சியின் முக்கிய தலைவர்களில் ஒருவரான சுப்பிரமணியண் சுவாமி மற்றும் சிலர் இலங்கை அதிபர் ராஜபக்சவுடன் சேர்ந்து கொண்டு தமிழர்களுக்கு துரோகம் செய்து வருகின்றனர்.

பாஜக தலைவர்கள் தமிழர்களை விட ராஜபக்சவுக்குதான் விசுவாசமாக உள்ளனர்.

இலங்கை தமிழர்கள் விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் கொள்கையை தான் பாஜக பி்ன்பற்றுகிறது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை பொறுத்தவரை இலங்கை தமிழர்கள் சுய கௌரவத்துடன் வாழ தொடர்ந்து குரல் கொடுக்கும். என்றார் நல்லகண்ணு.

TAGS: