62 பேரின் உயிரை பறித்த ஜெயலலிதாவின் ஜெயில்: அதிர்ச்சி தகவல்

deadfor_jeyalaitha_001சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா தண்டனை பெற்றதால் தமிழகத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 62 ஆக உயர்ந்துள்ளது.

ஜெயலலிதா, சசிகலா, இளவரசி மற்றும் சுதாகரன் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் கடந்த வாரம் சனிக்கிழமை பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதன்படி, ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

ஜெயலலிதாவிற்கு எதிரான இத்தீர்ப்பை எதிர்த்து கடந்த ஒரு வாரமாக அதிமுகவினர் போராட்டாங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

அதிமுகவினருடன் இணைந்து மற்ற துறையினரும் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர்.

ஜெயலலிதா கைதால் அதிர்ச்சியடைந்த அதிமுக தொண்டர்கள் சிலர் மாரடைப்பால் உயிரிழந்தார்கள்.

மேலும், சிலர் ஜெயலலிதாவை உடனடியாக விடுதலை செய்யக் கோரி தற்கொலை செய்து கொண்டனர்.

இதில் பள்ளி மாணவிகளும் அடக்கம், இந்நிலையில், இவ்வாறு தமிழகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 62ஆக உயர்ந்துள்ளதாக அதிமுக வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

TAGS: