அதிரடியாக களமிறங்க இருக்கிறார் மன்சூரலிகான்!

மன்சூரலிகான் தற்போது ”அதிரடி” என்ற பெயரிலேயே ஒரு படத்தை தயாரித்து, நடித்து வருகிறார்.

கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள், இசை, தயாரிப்பு எல்லாமே அவர்தான். ஆனால் இயக்கம் மட்டும் பாலு ஆனந்த். இதில் மன்சூரலிகானுக்கு ஜோடியாக பெங்காலி நடிகை மவுமிதா சவுத்ரி நடிக்கிறார். இவர்கள் தவிர  மௌமிதா சௌத்ரி (வெஸ்ட் பெங்கால்), சஹானா, பூவிஷா, கவ்யா, காயத்ரி, ராதாரவி, செந்தில், சங்கர், கிங்காங், நெல்லை சிவா, போண்டாமணி, சுப்புராஜ், மஞ்சபை சேகர், நடேசன் என நிறைய நடிகைகள் லிஸ்ட்டும் இருக்கிறது. செந்தில் படகோட்டியாக கலக்கியிருக்கிறார்.

மறைந்து கொண்டிருக்கின்ற சிலம்பம், களறி, வாள்வீச்சு, மான்கொம்பு போன்ற சண்டை பயிற்சிகளை இளைஞர்களுக்கு இலவசமாக கற்றுகொடுக்கும் பயில்வானாக கதாநாயகன் மன்சூர். காலையில் இளைஞர்களுக்கு பயிற்சியும், மாலையில் சமூக சேவை செய்யும் கதாநாயகன் மதுபானக்கடைகளில் சென்று குடிபழக்கம் மற்றும் போதை பொருகள் கேடு விளைவிக்கும் என கூறி அவர்கள் காலில் விழுந்து தடுக்கிறார். நிஜமான பயில்வானை தேடி படமெடுக்கும். ஒரு தயாரிப்பாளர் இவனுடைய அதிரடி நடவடிக்கை பிடித்துபோக பயில்வானை படத்தின் கதாநாயகனாக ஆக்குகிறார்.

பயில்வானுக்கு மறைமுக எதிரிகளால் தொல்லை கொடுக்கப்படுகிறது. தயாரிப்பாளரை ஏமாற்றி உடன் இருந்தவர்கள் பணத்தை விரயம் செய்கின்றனர். இதையெல்லாம் முறியடித்து படத்தை வெற்றிகரமாக முடித்து கொடுத்தாரா பயில்வான்? எதிரிகளின் சூழ்ச்சி வெல்லப்பட்டதா? எனப்தை நகைச்சுவையுடன் கலந்த அதிரடி திரைப்படம். இப்படத்தில் மொத்தம் 6 பாடல்கள் இடம் பெறுகிறது. மூன்று அதிரடி சண்டைக்காட்சிகளும், பரபரப்பான 2 சேஸிங் காட்சிகளும் இப்படத்தை அதிர வைக்கின்றன. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை அதனை சுற்றுபுறங்களில், மீனவ குப்பங்கள், கடற்கரை ஒரம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடத்தப்பட்டது. சுரேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.