காஷ்மீர் விவகாரம் : பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்தது ஐ.நா.

காஷ்மீர் விவகாரத்தில் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐ.நா. நிராகரித்துள்ளது.

இந்திய எல்லையில் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்திய பாகிஸ்தான் ராணுவத்தின் நடவடிக்கைக்கு பதிலடி கொடுத்த இந்திய ராணுவத்தின் தாக்குதலை தாங்க முடியாமல் பாகிஸ்தான் ஆடிப்போனது. பாகிஸ்தான் தரப்பில் பலத்த சேதம் ஏற்பட்டதைத் தொடர்ந்து வழக்கம் போல, சண்டையை துவக்கிய பாகிஸ்தானே, ஐ.நாவிடம் சமாதானத் தூது விடுத்தது.

இந்த நிலையில், இந்தியா – பாகிஸ்தான் இடையேயான பிரச்னையில் இரு தரப்பினரும் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக முடிவினை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ள ஐ.நா. இரு நாட்டு விவகாரத்தில் தலையிட முடியாது என்று பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை நிராகரித்துள்ளது.

TAGS: