ரூ.150 கோடியை தாண்டி வசூலில் ‘கத்தி’ திரைப்படம்!

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய், சமந்தா நடித்து தீபாவளியன்று வெளிவந்திருக்கும் படம் கத்தி.

விவசாயிகள் சந்தித்து வரும் முக்கிய பிரச்னைகளை அப்பட்டமாக சொல்லியிருப்பதோடு மட்டுமின்றி படத்தில் விஜய் எவ்வித பில்டப்பும் இன்றி இயல்பாகவே நடித்திருப்பார். இதனால் படத்திற்கு ரசிகர்கள் மத்தியிலும், விமர்சக ரீதியாகவும் பெரிய அளவில் வவேற்பு கிடைத்தது. 25 நாட்களை கடந்து படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்னொரு புறம் வசூல் வேட்டையும் நடத்தவும் தவறவில்லை. படம் வெளியான முதல் 12 நாட்களிலேயே ரூ 100 கோடி வசூலித்து சாதனை புரிந்தது. இதை படத்தின் இயக்குனர் முருகதாஸே தெரிவித்திருந்தார். சமீபத்தில் மேலும் 10 கோடி வசூலித்து 120 கோடியை தாண்டியதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அப்படத்தில் நடித்த நடிகர் சதீஸ் கத்தி வசூல் குறித்து இரண்டு தினங்களுக்கு முன் ஒரு டுவிட் செய்துள்ளார். இது விஜய் ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

அதில் ‘கத்தி ஓவர்சிஸ் அனைத்தும் சேர்த்து ரூ 160 கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ 200 கோடியை தொட வாழ்த்துக்கள்’ என டுவிட் செய்துள்ளார். கத்தி திரைப்படம் தான் இந்த வருடத்தில் ரூ 100 கோடியை தாண்டிய முதல் படம். இதற்கு முன்பு இதே முருகதாஸ்-விஜய் கூட்டணியில் வெளிவந்த துப்பாக்கி படமும் ரூ.100 கோடி வசூலித்து சாதனை படைத்தது குறிப்பிடத்தக்கது.