மதமாற்றத் தடைச் சட்டம் அவசியம்: ராஜ்நாத் சிங்

மதமாற்றத்தைத் தடுப்பதற்காக, மதமாற்றத் தடைச் சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

மத்தியப் பிரதேச மாநிலம், லக்னெளவுக்கு சனிக்கிழமை வருகை தந்த அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மதமாற்றத் தடைச் சட்டம் கொண்டு வருவது குறித்து, அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக சிந்திக்க வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக, பிரதமர் நரேந்திர மோடி விளக்கம் அளிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இதுகுறித்து, மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ள எந்த அமைச்சர் விளக்கம் அளித்தாலும், அது அரசுத் தரப்பு கருத்து என்பதை எதிர்க்கட்சியினர் புரிந்துகொள்ள வேண்டும் என்று ராஜ்நாத் சிங் கூறினார்.

முன்னதாக, சில அமைப்புகள் ஏற்பாடு செய்துள்ள மத மாற்ற நிகழ்ச்சிகள் குறித்து, நாடாளுமன்றத்தில் பிரதமர் விளக்கம் அளிக்க வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ஜோதிராதித்ய சிந்தியா கடந்த வாரம் வலியுறுத்தியிருந்தார்.

-http://www.dinamani.com

TAGS: