இதர செலவுகளை மேலும் குறைத்துக் கொள்ள மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்துள்ளார்.
செலவுகளைக் கட்டுப்படுத்தி வளர்ச்சித் திட்டத்துக்கு அதிக நிதி செலவிட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
அதே சமயம், அதிக வரி வசூலிப்பதற்காக நியாயமற்ற வகையில் விலைகள் உயர்த்தப்படாது. மின்சாரம், எரிசக்தி, துஐறமுகம் உள்ளிட்ட துறைகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கவும், உள் கட்டமைப்பை மேம்படுத்தவும் கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
-http://www.dinamani.com