கிட்டத்தட்ட நான்கு வருட இடைவெளிக்கு பிறகு சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சென்ற வருடம் வெளிவந்த ‘கோச்சடையான்’, ‘லிங்கா’ ஆகிய படங்கள் பெரிய வெற்றி பெறவில்லை.
லிங்கா படம் அதிக விமர்சனங்களை சந்தித்தால், அடுத்த படத்தை தேர்வு செய்வதில் ரஜினி அதிக கவனம் செலுத்தி வருகிறார்.
அடுத்த படத்தை ஆஸ்கர் ரவிச்சந்திரன் தயாரிக்க உள்ளதாக வெகு நாட்களுக்கு முன்னரே தகவல் வந்தது, ஆனால் இந்த படத்தை இயக்க போவது யார் என்பதில் ஒரு பெரிய போட்டியே நடக்கிறது போல் தெரிகிறது.
ஷங்கர், ஏ.ஆர்.முருகதாஸ், ஹரி, பி.வாசு, மணிரத்னம், கே.எஸ்.ரவிக்குமார், கார்த்திக் சுப்பராஜ் ஆகிய 7 பேரும் கதையை ரஜினியிடமும் தயாரிப்பாளரிடமும் கூறியுள்ளனர். ஷங்கர் அல்லது முருகதாஸ் – இவர்களில் ஒருவர் தேர்வு செய்யப்படலாம் என்று நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
-http://www.cineulagam.com
ஆகக் கடைசியாக வந்த ஆறேழு ரஜினி படங்களில் அவரை எல்லாம் இழந்த ரஜினியாகவும் பிறகு திரும்பவும் எல்லாவற்றிலிருந்தும் மீண்டு வருவது போலவும் பார்த்து சலித்து விட்டது. தன் புகழ் பாடும் பாடல்களையும், காட்சிகளையும் பார்த்தும் சலித்து விட்டது. அடுத்து வரப்போவதும் இதே போன்ற படமாக இருந்தால் அது ரஜினி தன் ரசிகர்களுக்கு செய்யும் துரோகமாகத் தான் இருக்கும். அதை விட வேறு கொடுமை இருக்க முடியாது. அதை விடுத்து தனக்கு ஏற்றபடி கதை அமைக்காமல் கதைக்கும் கதாபாத்திரத்துக்கும் ஏற்ற மாதிரி தன்னை மாற்றிக்கொண்டு நடித்தால் எடுபடலாம்…இல்லாவிட்டால் ரஜினி என்ற பெயர் தமிழ் சினிமாவில் அம்பேல் ஆகிவிடும்.
US HOLLYWOOD படங்களில் சில வயதான ஹீரோக்கள் இன்னும் ஹீரோக்களாக நடிக்கிறார்கள் அந்த படங்களும் மாபெரும் வெற்றி அடிகிறது ,,இதுவெல்லாம் பார்க்க இனிக்கிறது ,ஆனால் ரஜினிக்கு மட்டும் வயதுக்கு அற்ற வேடமா ?? ரஜினி எப்பொழுதும் ஒரே பாணியில் ஸ்டைலாக நடித்தால் தான் படம் வெற்றி பெரும் இல்லை என்றால் பணம் போட்ட இயக்குனர்களுக்கு சங்குதான்