பிரபல சின்னத்திரை இயக்குனர் தற்கொலை- காரணம் என்ன?

பிரபல சின்னத்திரை இயக்குனர் தற்கொலை- காரணம் என்ன? - Cineulagam

சின்னத்திரையில் திரைப்படங்கள், நிகழ்ச்சிகளை விட அதிகமாக ரசிக்கப்படுவது சீரியல்களே.

சீரியல்களை பார்க்கும் பல குடும்பங்கள் இருப்பது போல இந்த சீரியல்களை நம்பி, அதில் பணியாற்றும் சில குடும்பங்களும் வாழ்கின்றனர்.

சமீபகாலமாக சின்னத்திரையில் நேரடி சீரியல்களை விட பிற மொழியில் இருந்து தமிழுக்கு வரும் சீரியல்கள் அதிகரித்துள்ளதால் இங்குள்ள இயக்குனர்களுக்கு வாய்ப்புகள் குறைந்துள்ளது.

அந்த வகையில் உறவுகள், அரசி, காயத்ரி, செல்வி போன்ற பல வெற்றி நெடுந்தொடர்களை இயக்கிய சின்னத்திரை இயக்குனர் பாலாஜி யாதவ் வாய்ப்புகள் இல்லாமல் கடன் தொல்லையில் சிக்கி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

-http://www.cineulagam.com