பஞ்சாப்பை சேர்ந்த விவசாயிகள் வறட்சிக்குப் பெயர் பெற்ற ராமநாதபுரம் மாவட்டத்தில் பழத்தோட்டங்கள் அமைத்து வளமான பூமியாக மாற்றி நல்ல விளைச்சலை கண்டுள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், கமுதி வட்டத்தில் உள்ள லாந்தை ஊராட்சியில், அமைந்துள்ளது பஞ்சாப் விவசாயிகளின் அகல் சேவா பழத்தோட்டம்.
மொத்தம் 300 ஏக்கர் நிலத்தில் அமைந்துள்ள இந்த பழத்தோட்டத்தில் பஞ்சாபை சேர்ந்த 20 பேர் கடந்த 5 ஆண்டுகளாக விவசாயம் செய்கின்றனர்.
மாம்பழம், பலாப்பழம், கொய்யா, நெல்லி, சப்போட்டா, தென்னை, முந்திரி, சீதா, மாதுளை, எலுமிச்சை, ஈச்சம்பழம், பப்பாளி என இப்பகுதியில் நன்கு வளரக்கூடிய வகைகளை தேர்ந்தெடுத்து வளர்த்து வருகின்றனர்.
இது தவிர தர்ப்பூசணி, வெள்ளரி எனப் பருவத்துக்கேற்ற தோட்டப் பயிர்களையும் வளர்க்கிறோம் என்று 66 வயது சரப்ஜி சிங் தெரிவித்துள்ளார்.
60 வயதான தர்சன் சிங் என்பவர் கூறுகையில், 5 ஆண்டுகளுக்கு முன்பு இந்த இடத்துக்கு நானும், நண்பர் மன்மோகன் சிங்கும் வந்தோம்.
அப்போது இந்த இடம் முழுவதும் கருவேலம் மரங்களாக இருந்தது. அவற்றை ஜே.சி.பி. இயந்திரம் மூலம் சுத்தம் செய்யவே 3 மாத காலம் ஆனது.
ஆரம்பத்தில் உள்ளூர் கிராம மக்கள், கருவேல மரங்களை அகற்றி விட்டு என்ன செய்யப் போகிறீர்கள் என்று கேலி செய்தனர்.
பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக மரங்கள் வளர தொடங்கியதுடன், போன வருடம் மாம்பழம் 6 டன், கொய்யா 3 டன், பப்பாளி, பலாப்பழம், முந்திரி ஆகியவை 5 டன் என்று உற்பத்தி செய்தோம்.
பின்பு உள்ளூர் கிராம மக்கள் தங்களோட நிலங்களில் உளுந்து, மிளகாய், கடலைன்னு நம்பிக்கையுடன் விவசாயம் செய்ய தொடங்கினர் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பஞ்சாபில் ஒரு ஏக்கர் விவசாய நிலம் குறைந்தது ரூ. 20 லட்சத்தில் இருந்து தொடங்கும். ஆனால் இங்கே அதே விலையில் 100 ஏக்கர் நிலம் வாங்க முடியும்.
பழத்தோட்டத்துக்கு தேவையான தண்ணீரை கிணறுகள் அமைத்து, அதில் இருந்து சொட்டுநீர் பாசன முறைகளை பயன்படுத்துகிறோம்.
மண்ணில் வறட்சி என்று எதுவும் கிடையாது. பாலைவனமாகவே இருந்தாலும் அங்கேயும் சில தாவரங்களும், மரங்களும் வளரும் என்றும் வறட்சி நம் மனதில்தான் இருக்கக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.
-http://www.newindianews.com



























உயர்ந்த எண்ணம் அதுவே வெற்றிக்கு வித்தாகி இருக்கிறது.
தமிழ் நாட்டில் பலரும் விவசாயத்தை விட்டு எதோ எதோ துறைகளில் சம்பாதிக்க நினைக்கின்றனர். அதனை கேவலமாகவும் நினைக்கின்றனர்.
பஞ்சாபியர்களின் இந்த முயற்சி சோம்பேறி தமிழ் நாட்டானுக்கு ஒரு பாடம்.விவசாய நிபுணர்கள் தமிழ் நாட்டில் பஞ்சம் போல் தெரிகிறது.விவசாயத்தை கூட அன்னியன் வந்து கத்துக்கொடுக்க வேண்டிய சூழ்நிலை தமிழ் நாட்டானுக்கு ஏற்பட்டுவிட்டது,தமிழ் நாட்டை ஆள்வதற்கு தமிழனுக்கு தகுதியில்லை என்பது போல.
இக்கரை மாட்டுக்கு அக்கரைப் பச்சை!. ஏம்பா தமிழர்கள் உழைத்து வளர்த்த மாமரத்து மாம்பழத்தை நீங்கள் சாப்பிட்டதில்லையா?. வானம் பார்த்த பூமியாக வாழும் தொண்டை மண்டலத்து மக்களின் உடல் உழைப்பை நீங்கள் பாத்ததில்லையே. அங்கே விளையும் மாம்பழத்தை நீங்கள் பார்த்ததில்லை. அங்கே விளையும் நெற்பயிர், கம்பு, கேள்விறகு போன்ற தானியங்களை நீங்கள் பார்த்ததில்லை. 100 டிகிரி பேரென்ஹிட்டுக்கு மேல் அடிக்கும் வெயிலில் கோவணத்தைக் கட்டிக் கொண்டு வயலிலும், கொல்லையிலும் வேலை செய்த, செய்யும் தமிழனை பார்த்ததில்லை. ஆனால் சோம்பேறித் தமிழ் நாட்டான் என்று மட்டும் சொல்லத் தெரியுது!. நாலு வங்காளி படம் போட்டு மாங்காய் மரத்தை பின்னே காட்டியுடன் உழவர் தமிழன், சோம்பேறித் தமிழனாக மாறி எவ்வளவு கேவலமாகி விட்டான் பாருங்கள்!. இது உண்மைத் தமிழரை உணர்ந்து எழுதாத கருத்து போன்று உள்ளது.
Theni ஐயா கூறுவதை நான் முற்றிலும் ஆதரிக்கிறேன். அடுத்தவன் புகழை பாடும் தமிழர்கள் அநேகர் உண்டு. இது அங்கு மட்டும் இல்லை இங்கேயும் தான். தமிழனல்லாத ஒருவன் ஓரிரு வார்த்தை தமிழில் பேசிவிட்டால் அவர்களை எப்படிஎப்படியோ புகழ்வான். ஒரு தலைமை இடத்திற்கு ஒரு தமிழனும் தமிழனல்லாத ஒருவனும் போட்டிபோட்டால், பெரும்பாலும் அங்குள்ள தமிழர்கள் தமிழனை ஆதரிக்கமாட்டார்கள். இது எனது அனுபவமும்கூட . ஒருவன் முன்னேற முயல்கின்றானா அவனுக்கு துணை நிற்ப்போம். மற்றவர்களை புகழ்வது தவறில்லை. அதே வேளையில் நம்மிடையே உள்ள திறமைகளையும் அங்கீகரிக்க மறுக்க கூடாது. இந்த பஞ்சாபியரிடமிருந்து தமிழக விவசாயிகள் கற்றுக்கொள்ள வேண்டியதை கற்று அவர்களும் வெற்றிக்கானலாமே. ஒரு கர்நாட்டகா மாகனத்திளிருந்து வந்த ஒருவரிடம் . அம்மாகன அரசு, ஏன் தமிழ் நாட்டுக்கு தண்ணீர் வருவதை தடுக்கின்றனர் என்று வாதிட்டேன். அதற்க்கு அவர் கூறிய பதில் என்னை திடுக்கிட வைத்தது. அவர் கூரியது தமிழ் நாடு ஆரம்பத்திலிருந்தே மழையை நம்பியே இருந்ததாக கூறினார். மழைநீரை சேமிக்கும் ஆறு, குளங்கள், ஏரிகள் யாவும் தூர் எடுத்து ஆழப்படுதாமல், ஏறக்குறைய தூர்ந்துபோகும் அளவுக்கு இருப்பதாகவும், அதனால் சுலபமான முறையில் தண்ணீர் பெறவேண்டும் என்ற முயற்சியும்தான் இந்த போராட்டத்திற்கு காரணம் என்று கூறினார். இது எந்த அளவுக்கு உண்மை என்று எனக்கு தெரியாது. பழைய வரலாற்று கதைகளில் மன்னன் தனது மந்திரியை பார்த்து ‘வானம் மும்மாரி பொழிந்ததா?” என்று நாடு நலனை பற்றி கேட்கும்பொழுது வினவுவார். இந்த பின்னணியில் பார்த்தால் மேற்கூறியது ஓரளவுக்கு உண்மையென்று ஏற்றுக்கொள்ளவேண்டும். ஆற்றில் நீர் ஓடுகிறதா என்று கேட்டதில்லை. மேலும் இஸ்ரேலர்கள் பாலைவனத்திலும் ஆரஞ்சு மற்றும் வேறு பழங்களும் பயிர் செய்து வெளிநாட்டிற்கும் அந்நிய செலவாணியை ஈட்டுவதற்கு ஏற்றுமதியும் செய்கின்றனர். அதுபோல பல தமிழ்நாட்டவரும் பண்ணை வியாபாரம் செய்வதையும் நாம் காணலாம். ஆக நல்ல கருத்துகள் எங்கிருந்து வந்தாலும் அதனை கற்று வாழ்வோம். தமிழர்கள் மற்றவர்களுக்கு எவ்வளவோ கற்றுகொடுத்திருக்கிறோம், அதுபோல் மற்றவர்களிடமிருந்து நாம் எதையாவது கற்றுக்கொள்ளவேண்டும் என்றால் அதையும் கற்று நாமும் பயனடைவோம். இறைவன் நம் எல்லோரையும் ஆசீர்வதிப்பாராக.