தமிழக மீனவர்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு மீனவர்களுக்கு இடையிலான நான்காம் கட்ட பேச்சுவார்த்தைகள் உடனடியாக ஆரம்பிக்கப்பட வேண்டும் என்று வலியுறத்தப்பட்டுள்ளது.
தமிழக மற்றும் பாண்டிச்சேரி மீனவர்கள் சங்கத் தலைவர் என் ஜே போஸ் இதனைத் தெரிவித்துள்ளார்.
நீண்டகாலமாக இந்த பிரச்சினை காணப்படுகிறது.
இதில் இன்னும் தீர்வு காணப்படவில்லை.
அத்துடன் தொடர்ந்தும் தமிழக மீனவர்கள் சிறிலங்காவின் கடற்படையினரால் கைது செய்யப்படுகின்றனர்.
இது தொடர்பில் தமிழக மற்றும் சிறிலங்காவின் மீனவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
-http://www.pathivu.com

























தமிழக மீனவர்களின் பிரச்சனையை இன்னும் எவ்வளவு காலத்திற்கு இழுத்தடிப்பார்கள் மக்கள் வாழ்வாதாரத்தைப பற்றிஎல்லாம் அவர்களுக்கு கவலைஇல்லை கள்ள ஓட்டுப போட்டு இருக்கையைஎப்படி தக்க வைத்துக்கொள்வதுஎன்பதே அவர்கள் குறிக்கோள் இது போன்ற கோல் மால் செய்யும் அரசியல் வாதிகளை நம்பி ஓட்டுபோடும் செம்மெறிஆடுகளை என்னவென்று சொல்வது?