பிரபாகரன் இன்றும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்!

leader32திடீர் பதட்டத்தைக் கிளப்பியது அந்த கைது விவகாரம். கடந்த 21-ம் தேதி பனிரெண்டு மணியளவில் ராமநாதபுரம் எஸ்.பி.யான மயில்வாகனன் தலைமையிலான ஒரு போலீஸ் படை உச்சிபுளி என்கிற கடற்கரையோர ஊரின் பஸ் நிலையத்தில் மூன்றுபேரை பிடித்ததாக அறிவித்தது.

அவர்கள் யார் என போலீசார் 22-ம் தேதி அறிவித்தனர். அந்த அறிவிப்பைக் கேட்டு இந்தியா, இலங்கை மற்றும் ஐரோப்பிய நாடுகள் என உலகமே அதிர்ந்து போனது.

கைதான மூன்று பேரில் முதலாமவர் பெயர் கிருஷ்ணகுமார், யாழ்ப்பாணம் பகுதியை சேர்ந்த இவருக்கு 39 வயதாகிறது. இரண்டாவது நபர் ராஜேந்திரன், இவர் ராமேசுவரம் அருகே உள்ள தில்லை நாச்சியம்மன் கிராமத்தைச் சேர்ந்தவர். மூன்றாவது நபர் சசிகுமார், உச்சிபுளி அருகே உள்ள நாதாச்சி என்கிற பகுதியில் வசிக்கும் கார் டிரைவர்.

சசிகுமார் ஓட்டி வந்த டிராவல்ஸ் காரில் வந்த ராஜேந்திரன், கிருஷ்ண குமார் ஆகியோர் போலீ சாரால் கைது செய்யப்பட்ட னர். அவர்கள் வந்த கார் பறிமுதல் செய்யப்பட்டது என்கிற தகவலை அறிந்த லோக்கல் பத்திரிகையாளர்கள் மற்றும் வழக்கறிஞர்கள் உச்சிபுளி காவல் நிலையத்தை நோக்கி ஓடினார்கள். அங்கி ருந்த காவலர்கள் ராமநாத புரம் எஸ்.பி. அலுவலகத்தில் மூவரையும் தங்க வைத் திருப்பதாக பதில் கூறினார் கள். எஸ்.பி. அலுவலகத் திற்குச் சென்று கேட்டபோது, அவர்களை தீவிரவாத நடவடிக்கைகளை தடுக்கும் க்யூ பிரிவு அலுவலகத்தில் வைத்திருப்பதாக கூறினார்கள். எங்கும் இந்த மூவரையும் காணாததால் பரபரப்பு கூடிக் கொண்டிருந்தது.

22-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட காவல் தலைவர் அலுவலகத்திலிருந்து ஒரு செய்தியை கசியவிட்டார்கள்.

“”கைது செய்யப்பட்ட மூவர் சென்ற காரில் ஒரு பெரிய பார்சல் இருந்தது. அந்த பார்சலில் 300 கிராம் சயனைட் என்கிற உயிர்க்கொல்லி விஷம் இருந்தது. அது தவிர 75 கண்ணாடி குப்பிகளில் அந்த உயிர்க்கொல்லி மருந்து அடைக்கப்பட்டிருந்தது. அத்துடன் உலகத்தில் எந்த மூலையில் இருந்தாலும் யாரையும் தொடர்பு கொள்ளக்கூடிய சாட்டிலைட் தொலைபேசிகள், மற்றும் சாதாரண செல்போன்கள் இருந்தன. ஆயிரக்கணக்கில் இந்திய, இலங்கை ரூபாய்களை வைத்திருந்தார்கள்.

அதைப்பற்றி நாங்கள் விசாரித்தபோது… கிருஷ்ணகுமார், “நான் விடுதலைப்புலி தலைவர் பிரபாகரனின் உதவியாளராக விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 1990-ம் ஆண்டு முதல் பணியாற்றினேன். நான்தான் அவரது டிரைவர். 2000-ம் ஆண்டு தமிழகத்திற்கு வந்த நான் அடிக்கடி இலங்கைக்கு சென்று வருவேன். கடைசியாக இலங்கையில் நடந்த இறுதி யுத்தத்தின் போது திருச்சிக்கு வந்த நான், அகதி என பதிவு செய்யாமல் திருச்சி கே.கே.நகரில் தங்கியிருந்தேன். என்னை இலங்கைக்கு கள்ளத்தோணியில் கொண்டு சென்று விடுவதாக கஞ்சா கடத்தல் தொழிலில் ஈடுபடும் ராஜேந்திரன் சொன்னார். அதனால்தான் நான் வந்தேன்.

இப்பொழுது இலங்கையில் நல்ல சூழல் ஏற்பட்டுள்ளது. அதனால் என்னை எனது நண்பர்கள் அழைத்தார்கள். அதற்காக நான் செல்ல முயற்சித்தேன். போகும் வழியில் இலங்கை கடற்படையிடம் சிக்கிக்கொண்டால் உயிர் துறப்பதற்காக நான் சயனைடு விஷத்தை வைத்தி ருந்தேன் என வாக்குமூலம் கொடுத்தார்’ என போலீஸ் கசியவிட்ட இந்தத் தகவல் பரபரப்பை ஏற்படுத்தியது.

புலிகள் இயக்கம் மறுபடியும் உருவாகிறதா? யார் இந்த கிருஷ்ணகுமார்? என டெல்லியிலிருந்து மத்திய உளவுத்துறை அதிகாரிகளும், சென்னையிலிருந்து காவல்துறை உயரதிகாரிகளும் ராமநாத புரத்தை நோக்கி ஓடினார்கள்.

“”உனக்கு பிரபாகரனைத் தெரியுமா? அவர் இப்போது எங்கே இருக்காருன்னு சொல்லு. மறுபடியும் புலிகள் இயக்கம் உருவாகிறதா?” என ஏகப்பட்ட கேள்விகளை கிருஷ்ணகுமாரிடம் கேட்டார்கள். அனைத்திற்கும் மவுனத்தையே பதிலாகத் தந்த கிருஷ்ணகுமாரின் பாஸ்போர்ட்டை ஆராய்ந்த போது, வெளிநாடு சென்றுவந்தது தெரியவர… “அந்த நாட்டில் யாரைப் பார்க்கப் போனே?’ என கேட்டதற்கும் கிருஷ்ணகுமாரிடம் பதிலில்லை. இலங்கையில் நடந்த இறுதி      யுத்தத்தை பற்றிக் கேட்டபோது, தாரை தாரையாக கண்ணீர் மட்டும் வந்தது எனச் சொல்லும் போலீசார், கிருஷ்ணகுமாரின் செல்போன் தொடர்புகள் மூலம் அவரது நண்பர் ஒருவரை தேடிவருகிறார்கள்.

நீண்ட விசாரணைக்குப் பிறகு, கிருஷ்ண குமாரை திருச்சியில் அவர் தங்கியிருந்த நண்பர் வீட்டிற்கு கூட்டிச் சென்று சோதனையிட்டு சென்னை புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள் என்கிறார்கள் போலீசார்.

இதுபற்றி ராமநாத புரம் எஸ்.பி.மயில் வாகனனிடம், “”சயனைடு குப்பி களுடன் கிருஷ்ணகுமார் என்கிற இலங்கை நபர் கைது செய்யப்பட்டார் என காவல்துறையைச் சேர்ந்த வர்கள் அதிகாரப்பூர்வமற்ற முறையில் சொல்கிறீர்கள். அதை ஏன் ஒரு அறிக்கை யாக தரவில்லை. கிருஷ்ணகுமாரின் போட்டோ வையும் அதிகாரப்பூர்வமற்ற முறையில் வெளியிடும் போலீசார் அவர் வைத்திருந்ததாக சொல்லப்படும் சயனைடு குப்பிகள் படத்தை ஏன் வெளியிட வில்லை?” எனக் கேட்டோம்.

“”இதைப்பற்றி நான் ஒன்றும் சொல்ல முடியாது” என்று முடித்துக்கொண்டார்.

“”தமிழகத்திற்கு ராகுல்காந்தி வருகையை யொட்டி தமிழக போலீசார் மிகவும் எச்ச ரிக்கையுடன் செயல்படுகிறார்கள் என்பதைக் காட்டுவதற்காக நடத்தப்பட்ட நாடகம் இது. வேண்டுமென்றே பீதியைக் கிளப்புகிறார்களோ  என போலீசார் இந்த கைது விஷயத்தில் காட்டும் மௌனம் உணர்த்துகிறது” என்கிறார் ராமநாதபுரத்தைச் சேர்ந்த வழக்கறிஞர் திருநாவுக்கரசு.

பிரபாகரன் இன்னமும் பலருக்கு சிம்ம சொப்பனமாகவே இருக்கிறார்.

கருணாவின் ஆதரவாளரா இவர்?- கியூ பிராஞ்ச் பொலிஸார் விசாரணை!

இந்தியா இராமநாதபுரத்தில் பொலிஸிடம் சிக்கிய இலங்கைத் தமிழரான கிருஷ்ணகுமார் என்பவர் உண்மையில் யார்? விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக செயற்பட்டவர் என்று சொல்லப்படுவது உண்மையா?

இந்தியா இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி பகுதியில் கடந்த 20-ம் தேதி பொலிஸார் வாகனச் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது சசிகுமார், ராஜேந்திரன் மற்றும் ஒருவர் கைது செய்யப்பட்டடனர். சசிகுமார், ராஜேந்திரன் ஆகிய இருவரும் உச்சிப்புளி பகுதியைச் சேர்ந்தவர்கள் என்பதும் மற்றொரு நபரின் பெயர் கே.கிருஷ்ணகுமார் என்பதும் அவர், விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் உதவியாளராக இருந்தவர் என்று சந்தேகிக்கப்படுகிறது.

 

கிருஷ்ணகுமாரைப் பற்றி திருச்சியில் அவர் தங்கியிருந்த கே.கே.நகர், ரெங்கா முதல் தெருவில் விசாரிக்கையில்….

அவர் பெயர் காந்தன் என்றுதான் எங்களுக்குத் தெரியும். அவருடைய மனைவி, மக்கள் லண்டனில் இருப்பதாக சொல்வார். அவருடன் வயதான ஒரு தாத்தாவும் தங்கி இருந்தார்.

ஆரம்பத்தில் காந்தன் யாரிடமும் அவ்வளவாக பேசமாட்டார். கொஞ்சநாள் கழித்து ஆட்டோ ஒன்று வாங்கி ஸ்கூல் சவாரி ஓட்டினார்.

கூடவே, கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துக்கொண்டு வெளிநாடுகளில் இருந்துவரும் சுற்றுலாப் பயணிகளை அழைத்துக்கொண்டு ஊர் சுற்றிக்காட்டும் வேலை பார்த்தார் என்றனர் ஏரியாவாசிகள்.

இராமநாதபுரத்தில் கிருஷ்ணகு​மாரிடம் விசாரணை நடத்திய பொலிஸாரிடம் பேசினோம்.

யாழ்ப்பாணத்தை அடுத்துள்ள அளவெட்டி பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணகுமார். 39 வயதாகும் இவர், 15 வயதில் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் தன்னை இணைத்துக்கொண்டு பல்வேறு தாக்குதல்களில் முக்கியப் பங்குவகித்தவர்.

தளபதி கிட்டு மரணத்துக்குப் பிறகு, பிரபாகரனுக்கு உதவியாளராக கிருஷ்ணகுமார் இருந்துள்ளார். கடந்த 2009-ம் ஆண்டு இலங்கையில் இறுதிக்கட்ட போர் முடிந்த பிறகு திருச்சியில் வந்து தங்கிவிட்டார்.

விசாரணையின்போது, தான் ஒரு விடுதலைப்புலி என்பதைத் தவிர வேறு எதையும் அவர் சொல்லவில்லை. உண்மையில் இவர் பிரபாகரனின் உதவியாளராக இருந்து பின்பு, கருணாவுடன் பிரிந்து சென்றிருக்க வேண்டும்.

காரணம், இறுதிக்கட்ட போருக்குப் பின் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து சரணடைந்த வீரர்களைக்கூட இலங்கை ராணுவம் விட்டுவைக்கவில்லை.

விடுதலைப்புலிகளைத் தேடித்தேடி அழித்தார்கள். ஆனால், கிருஷ்ணகுமார் உரிய ஆவணங்களுடன் விமானம் மூலம் இந்தியா வந்துள்ளார் என்றால், அவர் நிச்சயம் கருணாவின் ஆதரவாளராக இருந்திருக்க வேண்டும்.

போர் உச்சத்தில் இருந்தபோது திருச்சி வழியாகத்தான் பலரும் தப்பிச்சென்றதாக ஒரு பேச்சும் உண்டு. ஏனெனில், திருச்சி விமானநிலையம் அப்போது முறைப்படுத்தப்படவில்லை.

அதனால் ஈஸியாக விடுதலைப்புலிகள் தமிழகத்தில் ஊடுருவியதாக அப்போது குற்றச்சாட்டுகள் எழுந்தன. கிருஷ்ணகுமார், யார் யாரை எல்லாம் சந்தித்தார் என விசாரித்து வருகிறோம். அவருக்கு உத்தரவிட்ட நபர் யார் என்பதையும் விரைவில் கண்டுபிடிப்போம் என்றார்கள்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரில் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டு 6 ஆண்டுகள் முடிந்ததுவிட்டன. நீண்ட போராட்டங்களுக்குப் பிறகு இப்போதுதான் ராஜபக்‌ச மீதான போர்க்குற்றம் குறித்த விசாரணை அறிக்கை ஐ.நா மனித உரிமை குழுவால் தாக்கல் செய்ய இருக்கிறது.

இந்த நிலையில், அடுத்த மாதம் நடக்க உள்ள இலங்கை நாடாளுமன்றத் தேர்தலில், இதுவரை எதிரும்புதிருமாக இருந்துவந்த ராஜபக்‌ஷேவும் சிறீசேனவும் இணைந்து போட்டியிடுகிறார்கள்.

இதனால் சிறீசேன அரசின் மீதான நம்பிக்கை எங்களுக்குக் குறைந்து வருகிறது. இந்தச் சூழலில்தான் விடுதலைப்புலிகள் மீண்டும் உயிர்பெற்று வருவது போன்ற தோற்றத்தை இந்திய, இலங்கை அரசுகள் உருவாக்குகின்றன. இந்த நிலையில், கிருஷ்ணகுமார் கைதுசெய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை அளிக்கிறது.

கிருஷ்ணகுமார் ஆரம்பத்தில் பிரபாகரன் உதவியாளராக இருந்தது உண்மைதான். ஆனால், போருக்குப் பிறகு, தமிழகம் வந்து முகாமில் எந்தவித சம்பவத்திலும் ஈடுபடாமல், வெளியில் இருந்துகொண்டு உழைத்து வாழ்ந்துவந்துள்ளார். அவர், சயனைடு வைத்திருந்ததாக சொல்வது சந்தேகத்தை வரவழைக்கிறது.

விடுதலைப்புலிகள் மீதான தடை இந்தியாவில் நீடிக்க வேண்டும் என திட்டமிட்டு மத்திய, மாநில அரசுகள் கூட்டாக சதி செய்கின்றன. இந்தச் செயல்பாடுகள் ராஜபக்‌ஷே தன்னை காப்பாற்றிக்கொள்ள கூறும் வாதத்துக்கு வலுச்சேர்ப்பதாக உள்ளது என்று குற்றம்சாட்டினர் ஈழத்தமிழர்கள்.

-http://www.tamilwin.com
TAGS: