மதுவிலக்கை அமல்படுத்தினால் கள்ளச்சாராயம் அதிகரிக்கும்! உயர் நீதிமன்றம் அதிரடி

madras_high_court_001மதுவிலக்கை அமல்படுத்தினால் மக்கள் கள்ளச்சாராயத்தை தேடுவார்கள் என்று உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

பா.ம.க.வின் சமூகநீதிக்கான வழக்கறிஞர் அமைப்பின் தலைவராக உள்ள கே.பாலு சென்னை உயர் நீதிமன்றத்தில் மது விற்பனை நேரத்தை ஐந்து மணி நேரமாக மாற்ற வேண்டும் என்று கோரியுள்ளார்.

அவரது மனுவில், தமிழகத்தில் மது தாராளமாக கிடைப்பதால் குற்றங்கள், விபத்துகள் அதிகரிக்கின்றன.

காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை மது விற்கப்படுகிறது. மாலை 5 மணி முதல் இரவு 10 மணி வரை மட்டுமே மது விற்பனை செய்ய உத்தரவிட வேண்டும்.

இதனால், குடிப்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக குறையும். மது விற்பனை விதிமுறைகளில் மாற்றம் கொண்டு வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி, எல்லா பிரச்னைகளையும் நீதிமன்றத்துக்கு கொண்டு வருகிறீர்கள்.

எல்லாவற்றுக்கும் நீதிமன்றத்தில் நிவாரணம் கிடைக்கும் என, நினைப்பது தவறு.

மதுவிலக்கை அமல்படுத்தினால், மக்கள் கள்ளச்சாராயத்தை தேடுவார்கள். அதைதான் நீங்கள் எதிர்பார்க்கிறீர்களா?

மதுக்கடைகளின் விற்பனை நேரத்தை, அரசுதான் ஒழுங்குபடுத்த வேண்டும்; அதை, நீதிமன்றம் கூற முடியாது.

பக்கத்து மாநிலங்களான புதுச்சேரி, கேரளாவில் எந்த கட்டுப்பாடும் இல்லை. புதுச்சேரியில், காலை 8 மணி முதல் இரவு 11 மணி வரை மதுக்கடைகள் திறந்திருப்பதாக கூறப்படுகிறது.

மதுக்கடைகளின் நேரத்தை அரசு குறைக்கலாம். பிரச்சனை குடிப்பவர்களிடம் தான் உள்ளது.

இரண்டு, மூன்று மணி நேரம் மட்டுமே திறக்கப்பட்டால் கடைகளில் கூட்டம் கூடிவிடும்.

மேலும், மதுவிலக்கு பற்றி பேசுபவர்களிடம் ஒருமித்த உணர்வு இல்லை. எனவே, அரசுதான் இந்த பிரச்னையை பரிசீலிக்க வேண்டும்.

சமூக, பொருளாதார ரீதியில் பின் தங்கியவர்கள்தான் குடியால் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர்.

மதுப்பழக்கத்தில் இருந்து இவர்களை விடுவித்து மறுவாழ்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

அதற்கான ஆலோசனைகளுடன் வந்தால் அதை பரிசீலிக்கலாம் என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.

-http://www.newindianews.com

TAGS: