தமிழ் சினிமாவில் தரமான கலைஞர்களை உருவாக்கிய வாத்தியார்கள்

தமிழ் சினிமாவில் தரமான கலைஞர்களை உருவாக்கிய வாத்தியார்கள் - Cineulagam

குட்டு வாங்கினாலும் மோதிர கையால் வாங்க வேண்டும் என்பார்கள். அதுபோல் தமிழ் சினிமாவில் ரஜினி, கமல் போன்றோர் உச்சத்தில் இருக்கிறார்கள் என்றால் அதற்கு முக்கிய காரணம் இவர்களை உருவாக்கிய வாத்தியார்கள் தான் ஒரு காரணம். அவர்களை பற்றிய ஒரு தொகுப்பு.

கே.பாலசந்தர்

 

 

இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் நடிகர்கள் ரஜினி, கமல். இவர்களை தன் படங்களின் மூலம் செதுக்கிய ஆசான் கே.பி அவர்கள். அவர் இம்மண்ணுலகை விட்டு மறைந்தாலும், அவர் உருவாக்கிய ரஜினி, கமல், பிரகாஷ்ராஜ், விவேக், சரண், சமுத்திரக்கனி, வசந்த் போன்ற எண்ணற்ற கலைஞர்கள் அவர் புகழை தொடர்ந்து நிலை நாட்டி வருகின்றனர்.

பாராதிராஜா

 

இன்று தமிழக இளைஞர்கள் தலையில் தூக்கி வைத்து கொண்டாடிய பல கதாநாயகிகளை தமிழ் சினிமாவிற்கு அளித்தவர் இவர் தான். ராதிகா, ராதா, ரேவதி, ப்ரியாமணி வரை பல நடிகைகளை இவர் தான் அறிமுகப்படுத்தினார். ஏன் இன்று தென்னிந்திய சினிமாவை கலக்கும் காஜல் அகர்வால் கூட இவரின் பொம்மலாட்டம் படத்தில் தான் அறிமுகமானார்.

பாலுமகேந்திரா

 

பாலுமகேந்திரா பட்டறை மாணவர்கள் என்று தான் சொல்ல வேண்டும். நடிகர்கள், நடிகைகளை தாண்டி தமிழ் சினிமாவை தாங்கி பிடிக்கும் பல தரமான இயக்குனர் இவர் பட்டறையில் கூர் தீட்டப்பட்டவர்கள் தான். பாலா, வெற்றிமாறன்,ராம் என கூறி கொண்டே போகலாம். இவர்கள் மூவரும் தேசிய விருது பெற்ற கலைஞர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மணிரத்னம்

 

தமிழக பெண்களுக்கு மிகவும் பேவரட் இந்த இயக்குனர். ஏனெனில் அரவிந்த் சாமி, மாதவன் என இரண்டு கனவு நாயகன்களை அறிமுகப்படுத்தியவர். இதில் மாதவன் பாலிவுட் வரை சென்று புகழ் பெற்றாலும், அரவிந்த் சாமியால் சினிமாவில் நிலைக்க முடியவில்லை. இதனால், மணிரத்னம் கணக்கு தப்பானதோ என்று நினைக்கும் தருணத்தில், தனி ஒருவனாக வந்து கலக்கி விட்டார். இது மட்டுமின்றி தமிழனின் பெருமை உலக அளவில் நிலை நாட்டிய ரகுமானை சினிமாவின் அறிமுகப்படுத்தியது இவர் தான்.

SAC

 

தமிழ் சினிமாவின் பாக்ஸ் ஆபிஸ் கிங்குகளை உருவாக்கியவர் இவர். இன்று தமிழகமே கொண்டாடும் இளைய தளபதி விஜய்யின் தந்தை SAC. ஆரம்பத்தில் விஜய்யை எத்தனை பேர் கிண்டல் செய்தாலும் தன் மகனை கொஞ்சம் கொஞ்சமாக தயார் செய்து, இன்று வசூல் சக்கரவர்த்தியாக அமர்த்தியுள்ளார். அதேபோல் பாலிவுட்டே அசந்து பார்க்கும் இயக்குனர் ஷங்கர். இவரின் குரு யார் தெரியுமா? விஜய்யின் தந்தை SAC தான்.

-http://www.cineulagam.com