தமிழ் இலக்கணத்தில் மாற்றங்கள் கொண்டுவரப்படவேண்டும் என்று இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவருடைய வலைத்தளத்தில் எழுதியிருப்பதாவது:
தமிழ் இலக்கணத்தில் கீழ்க்கண்ட மாற்றங்களை கொண்டுவரலாம். இது என்னுடைய தனிப்பட்ட எண்ணம். கருத்துக்களை வரவேற்கிறேன்.
1. உயிரெழுத்துக்களை இந்த வரிசையில் மாற்றி அமைக்கலாம். – அ, ஆ, இ, ஈ, உ, ஊ, எ, ஏ, ஒ, ஓ, ஐ, ஔ, ஃ
குறில், நெடிலாக எழுத்துக்கள் சீராக மாறி வந்து கொண்டிருக்கும்போது, திடீரென இடையில் ஒற்றை நெடில் ‘ஐ’ வரவேண்டிய அவசியமென்ன?
2. வல்லின, மெல்லின, இடையின பிரிவுகளால் என்ன பயன்?
வல்லினம் – க, ச, ட, த, ப, ற மெல்லினம் – ய, ர, ல, வ, ழ, ள இடையினம் – ங, ஞ, ண, ந, ம, ன
இந்தப் பகுப்பினால் எந்தப் பயனும் இல்லை. வல்லின ‘ற’வை வன்மையாகவும், மெல்லின ‘ர’வை மென்மையாகவும் பயன்படுத்த வேண்டும் என்று பேச்சுக்கு சொல்லிக்கொள்ளலாமே ஒழிய, நாம் யாரும் (“யாரும்”) அதை நடைமுறையிலோ, இலக்கிய மேடைகளிலோ கூட பின்பற்றுவதில்லை; பின்பற்ற வேண்டிய அவசியமும் ஏற்படுவதில்லை. அவ்வளவு துல்லிய ஒலி பேதம் இந்தக் குறிப்பிட்ட எழுத்துகளுக்கு கிடையாது (ல, ள, ழ போன்று).
அதை பின்பற்றித்தான் ஆகவேண்டும் என்று சொல்பவர்கள், அப்படியானால் இந்த ‘ல, ள, ழ’ வை அதுபோன்று மூன்று பகுப்பாகப் பிரித்திருக்க வேண்டும் ஒலி அடிப்படையில். எந்த ‘ல’கரம், ‘ள’கரம், ‘ழ’கரம் என்று குறிப்பிட ஏதுவாக. அதே போல ‘ந’ மற்றும் ‘ன’.
யார் பகுத்தார்களோ தெரியாது, எல்லோரும் அதை அப்படியே ஏற்றுக்கொண்டிருக்கிறோம். என்னைப் பொறுத்த வரை இது பிழையான பகுப்பு. மெல்லினத்தில் இடம் பெறுகிற ‘வ’ ‘வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு’ என்று சொல்லும்போது எவ்வளவு கடுமையாக, வன்மையாக உச்சரிக்கப்பட வேண்டும். அது எப்படி மெல்லினமாகும்? அதேபோல – ‘ள’. ‘வெல்லம்’ என சொல்லும்போது மெல்லின ‘ல’ மென்மையாக இனிமையாக ஒலிக்கிறது. ஆனால் ‘வள்ளல்’ ‘கள்ளி’ என்ற சொற்களில் வருகிற ‘ள’ எப்படி மென்மையாக உச்சரிக்கப்பட முடியும்? எப்படி அது மெல்லினமாகும்?
இலக்கணத்தில் ஒரு தலைப்பாக மட்டுமே இந்தப் பகுப்பு பயன்படுகிறது. இதை அப்படியே விலக்கிவிட்டால் இழப்போ, மொழிக்கு எந்த பாதிப்போ கிடையாது. நன்மைகள்தான் உண்டு. இலக்கணத்தை சற்று எளிமைப்படுத்தியதாக இருக்கும். இலக்கணம் படிக்க பயந்து அலறுகிற இளைய சமுதாயத்திற்கு ஒரு சுமை குறைந்தது போலவும் இருக்கும்.
3. பெரியார் சொன்ன சில சீர்திருத்தங்களை மொழியில் ஏற்றுக்கொண்டிருக்கிறோம். ஏன் இதை மட்டும் மறுக்கிறோம்?
ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்ணூறு… பத்துக்களில் போய்க் கொண்டிருக்கிற எண்ணிக்கை திடீரென எப்படி நூறானது? இன்னும் நூறு அறிமுகம் ஆகவேயில்லையே. அதேபோல… ஐனூறு, அறுனூரு, எழுனூறு, எண்ணூரு, தொள்ளாயிரம்… ஆயிரத்தை எட்டுவதற்குள் ஆயிரம் எங்கிருந்து நூறுகளுக்குள் வந்தது?
அவர் சொன்ன திருத்தங்கள் –
ஐம்பது, அறுபது, எழுபது, எண்பது, தொண்பது, நூறு.
ஐனூறு, அறுனூரு, எழுனூறு, எண்ணூரு, தொண்ணூறு, ஆயிரம்.
-http://www.dinamani.com
தமிழ் வருட பிறப்பிற்க்கு இன்னும் விடை கிடைக்க வில்லை…..இதுல &*^&%#@^&*(….
நல்ல பதிவு. சிந்திப்போம் .
“நாம் யாரும் (“யாரும்”) அதை நடைமுறையிலோ, இலக்கிய மேடைகளிலோ கூட பின்பற்றுவதில்லை; பின்பற்ற வேண்டிய ‘அவசியமும்’ ஏற்படுவதில்லை.”
அம்மாவை “அம்மா” என்று கூப்பிடாமல் “மம்மி” என்று ஒரு பகுதி தமிழர் கூப்பிடுவதால் இனிமேல் தமிழ் அகராதியில் இருந்து “அம்மா” என்ற வார்த்தையை நீக்கி விடலாமா? காரணம் அந்த வார்த்தை இப்பொழுது நமக்கு அவசியம் இல்லையே. இப்படியே “அப்பா” என்ற வார்த்தையும் நமக்கு அவசியமில்லை என்பதால் “டாடி” என்ற வார்த்தையையே பயன்படுத்திக் கொள்ளலாம் அல்லவா. இதுதான் தமிழ் நாட்டில் இன்று தமிழ் “தங்லிஷாக” மாறிப் போனதர்க்குக் காரணம்.
“யார் பகுத்தார்களோ தெரியாது”
யார் பகுத்தார்களோ என்று தெரியவில்லையானால் அப்புறம் தமிழுக்குப் புதிய இலக்கணத்தை வகுக்க இவருக்கு என்ன அருகதை இருக்கு? தமிழ் மொழியியலையும் அதன் இலக்கணத்தையும் நன்கு கற்று அறியாமால் திண்ணைப் பேச்சாளர்கள் நம்மிடையே அதிகமாக வந்து விட்டதால் தமிழ் மொழியை அழிப்பதற்கு எப்படி வழி வகுக்கலாம் என்று புதிய கணக்குப் போடுகின்ராரோ இந்த “ஜேம்ஸ்” வசந்தன்.
“இலக்கணத்தில் ஒரு தலைப்பாக மட்டுமே இந்தப் பகுப்பு பயன்படுகிறது. இதை அப்படியே விலக்கிவிட்டால் இழப்போ, மொழிக்கு எந்த பாதிப்போ கிடையாது.”
இவன் தமிழை ஒழிக்கப் பிறந்தவனோ?
“இலக்கணம் படிக்க பயந்து அலறுகிற இளைய சமுதாயத்திற்கு ஒரு சுமை குறைந்தது போலவும் இருக்கும்”
எவ்வளவு பெரிய அறிவாளியப்பா இவன்? மூட்டைப் பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொளுத்து என்கிறார். வீடு அழிந்த பிறகு எதை வைத்துக் கொண்டு தமிழனாக வாழப் போகின்றார் இவர்? இவர் இசை அமைக்கும் தமிழ் மொழி பாடல்கள் எந்த இலட்சனமாக இருக்கும் என்பது வெள்ளிடை மலை.
ரோமன் எண்களில் ஒன்பதுக்கு “IX” என்று எழுதுவது ஏன்? பத்துக்கு உரிய எண்ணுடன் ஒன்றுக்குரிய எண்ணை இடது பக்கமாகப் போட்டு வைத்திருப்பது ஏன் என்று என்றாவது சிந்தித்தது உண்டா?. “ஒன்பது” என்ற எண்ணுக்கு ஒரு சிறப்புத் தன்மை உண்டு. அதனால்தான் அடுத்து வரப்போகும் பதின்ம எண்ணை முன்னே வைத்துச் சொன்னது. ஒன்பதின் தனிச் சிறப்பு அந்த எண்ணுடன் பிற எண்ணைக் கூட்டினால் கூட்டி வரும் தொகை பிற எண்ணின் தொகையையே கொடுக்கும் எ.கா. (9 + 6 = 15 -> 1+5 = 6) இப்படி அந்த ஒன்பதுக்கு உரிய அதிசயங்களை இன்னும் விவரித்துக் கூறலாம். முன்னோர்கள் நம்மை விட மிகச் சிறந்த அறிவாளிகள். நாம் அவர்கள் காட்டிய வழியை முறையாக பின்பற்றாததால் இன்று பல இழிவுகளுக்கு ஆளயிருக்கின்றோம். அதில் இந்த ஜேம்ஸ் வசந்தன் கருத்தும் அடங்கும். இப்படி ஆழ்ந்து சிந்திக்காத கருத்துக்களை ‘whatapp” – ல் பரவவிட்டு நல்ல நேரத்தையெல்லாம் வீணடித்துக் கொண்டிருகின்றார்கள் நம்மவர்கள்.