‘பீப் பாடல்’ எதிர்த்தவருக்கு அரிவாள் வெட்டு- அதிர்ச்சி தகவல்

பீப் சாங்கை எதிர்த்தவருக்கு அரிவாள் வெட்டு- அதிர்ச்சி தகவல் - Cineulagam

சிம்பு பாடிய பீப் சாங் பல பிரச்சனைகளை சந்தித்து வருகின்றது. இதன் உச்சக்கட்டமாக சமீபத்தில் மதுரையில் வெட்டுக்குத்து வரை சென்றுள்ளது.

கோவில் திருவிழாவில் இளைஞர்கள் சிலர் பீப் சாங்கை போட்டுள்ளனர். இதைக்கண்டித்து அங்கிருந்த நபர் ஒருவர் இந்த மாதிரி பாடல் எல்லாம் ஒலிப்பரப்பக்கூடாது என கண்டனம் தெரிவித்தார்.

பின் இது வாக்குவாதமாக மாறி, ஒரு கட்டத்தில் இளைஞர் ஒருவர் அந்த நபரை அரிவாளால் வெட்டியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை உண்டாக்கியுள்ளது.

பீப் பாடல் வழக்கில் சிம்புவிற்கு ஆதரவாக வந்த தீர்ப்பு

பீப் சாங் விவகாரத்தில் இன்று தீர்ப்பு வழங்குவதாக முன்பே தெரிவித்தனர். இதையடுத்து இன்று இந்த வழக்கு நீதிபதியிடம் சென்றது.

சிம்பு தனக்கு முன் ஜாமின் வழங்க வேண்டும் என்று தன் மனுவில் கூறியிருந்தார். தற்போது அவருக்கு சாதகமாகவே உயர் நீதிமன்றம் நிபந்தனை முன் ஜாமின் வழங்கியுள்ளது.

மேலும், இதை தொடர்ந்து பீப் சாங் குறித்த அனைத்து பிரச்சனைகளும் சுமுகமாக முடியும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

-http://www.cineulagam.com