ஹரித்துவார்: உலகப் பொதுமறையாம் திருக்குறள் தந்த பெரும் புலவர் திருவள்ளுவர்.. நாம்தான் இப்படி மெச்சிக் கொண்டிருக்கிறோம். ஆனால் நமது வட இந்திய சகோதரர்கள் இந்த புலவரை தூக்கி தூரப் போட்டு விட்டார்கள்….
ஒரு பூங்காவில்! புல் தரையோடு தரையாக வீழ்ந்து கிடக்கிறது வள்ளுவம். இத்தனைக்கும் யாரும் எங்கள் பெரும் புலவனுக்கு சிலை வையுங்கள் என்று சொல்லவில்லை. இவர்களாகவே சிலை செய்தார்கள். இவர்களாகவே நிறுவப் போகிறோம் என்றார்கள், இவர்களாகவே எடுத்துச் சென்றார்கள்.. இன்று வள்ளுவர் புல்லில் வீழ்ந்து கிடக்கிறார்..
அதைப் பற்றிக் கவலை்படத்தான் ஒருவரும் இல்லை. இதை விட திருவள்ளுவரை யாரும் கேவலப்படுத்த முடியாது. அகில உலகத்திலும் வள்ளுவத்திற்கும், அதை மொழிந்த வள்ளுவருக்கும் மதிப்பு உள்ள நிலையில் நமது நாட்டின் ஒரு பகுதியில் அந்த வள்ளுவரை ஜாதி அடிப்படையில் பிரித்துப் பார்த்து தூரப் போட்டுள்ள கொடுமையை என்னவென்று சொல்வது?
கங்கை ஆற்றின் கரையில் ஹரித்துவாரில், வள்ளுவர் சிலையை நிறுவப் போகிறேன் என்று கூறினார் பாஜக எம்.பி தருண் விஜய். சிலையும் செய்து அதை ஹரித்துவாருக்கும் கொண்டு சென்றனர். ஆனால் அங்குள்ள சாதுக்குள் கும்பலாக திரண்டு வந்து திருவள்ளுவரின் சிலையை இங்கு நிறுவக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவிக்கவே, திறப்பு விழாவில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது.
இதையடுத்து சங்கராச்சாரியார் செளக் என்ற இடத்தில் சிலையை வைக்கலாம் என்று உத்தரகாண்ட் முதல்வர் ஹரீஷ் ராவத் அனுமதி அளித்தார். ஆனால் அங்கு வைக்கவும் சாதுக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
காரணம், திருவள்ளுவர் தலித் என்பதால். ஆனால் அதை பகிரங்கமாக கூறாமல், திருவள்ளுவருக்கும், ஹரித்துவாருக்கும் என்ன சம்பந்தம் என்று கேள்வி கேட்டனர் இந்த சாதுக்கள். இதனால் சிலையை தூக்கி தற்போது ஹரித்துவாரில் உள்ள ஒரு பூங்காவில் பாலிதீன் கவரைச் சுற்றி தரையில் போட்டுள்ளனர். பரிதாபமாக வீழ்ந்து கிடக்கிறது வள்ளுவம்.
தமிழ் என்ற வார்த்தையைக் கூட தனது திருக்குறளில் ஒரு இடத்தில் கூட பயன்படுத்தாதவர் வள்ளுவர். எந்த மதத்திற்கும், எந்த இனத்திற்கும், எந்த மொழிக்கும் உரித்தானவராக தன்னைக் காட்டிக் கொள்ளாமல் பொது மறையாக வாழ்ந்தவர் வள்ளுவர். அவருக்கு வட இந்தியா கொடுத்துள்ள பெருமை புல் தரைதான்! இதை விட யாரும் திருவள்ளுவரை கேவலப்படுத்த முடியாது!
‘கீழ் சாதியில் பிறந்தவர்’ என கூறி ..திருவள்ளுவர் சிலையை கங்கை கரையில் வைக்க.. சங்கரமடத்தினர் மறுத்துவிட்ட நிலையில், தருண் விஜய் மற்றும் ஆர்எஸ்எஸ் கும்பலால் ஆர்ப்பாட்டமாக எடுத்து செல்லப்பட்ட திருவள்ளுவர் சிலை சாக்குத்துணியில் கட்டப்பட்டு மூலையில் ஓரமாக வீசப்பட்டு குப்பையில் கிடைக்கிறது.
தமிழகத்தின் .தலைமை புலவனுக்கு கங்கை கரையில் இடமில்லை ..ஆனால் பாட்டிலில் அடைத்து 15 ரூபாய்க்கு விற்கும் பிணநாற்றம் அடிக்கும் கங்கை நீரை தமிழன் வெட்கமில்லாமல் வாங்கி குடிக்க வேண்டுமாம்
திருவள்ளுவர் தலித் என்று சொன்னாரா? ஏண்டா நீங்களவா சொல்லறீங்க ??முட்டாள் பையங்கே
உலக நாகரிகத்தின் உச்சியைத் தொட்டுள்ள சிங்கப்பூர்வாசிகள்
திருவள்ளுவரை கொண்டாடும் விதமும்….
அநாகரிகத்தின் அடியில் ஓடும் கழிசடைகளான இந்திய காட்டுமிராண்டிகள்…
திருவள்ளுவரை நடத்தும் விதமும் …
https://www.facebook.com/photo.php?fbid=143943792702245&set=a.104649403298351.1073741828.100012598743199&type=3&theater
மானங்கெட்ட தமிழர்கள் வடநாட்டான் விவேகானந்தனுக்கு குமரியிலும் மற்றும் பல இடங்களிலும் சிலை வைப்பார்கள்.தங்கள் பள்ளைகளுக்கும் காந்தி, விவேகானந்தன்,நேரு,சுபாஷ் போன்ற வடநாட்டவர்களின் பெயர்களை சூட்டி பெருமை கொள்வார்கள்.ஆனால. தமிழையும் தமிழனையும் அந்த வடநாட்டு நாய்கள் மதிக்க மாட்டார்கள்.
நன்றி இல்லாத இந்தியனை விட உலகமே புகழும் வள்ளுவன் புகழ் குறைந்து விட போவதில்லை. இதில் என்ன குறைப்பாடு அய்யனின் சிலையை வைப்பதற்கு முன் மத்திய அமைச்சர் தருண் விஜய் முறையாக எங்கே வைப்பது என்பெதல்லாம் முடிவு செய்த பின்பு அனுமதியும் பெற்று கொண்டு சென்று இருக்க வேண்டும்.அதை விடுத்து எவனோ எதிர்த்தான் என்பதாக சொல்லி பூங்காவில் கிடத்தி விட்டு வருவது ஒரு அமைச்சனுக்கு அழகல்ல . இது வள்ளுவ பெருமகனாருக்கு நேர்ந்த அவமானம் அல்ல அமைச்சர் தருணுக்கு நேர்ந்த பெருத்த அவமானம்தான் .
தமிழன். சங்கரமட சூத்திர மகன்களிடம் கேட்கவேண்டும் …
தமிழகத்தில் தமிழன் தனித்துவமாக இருந்தால் இந்தமாதிரி அசிங்கம் எல்லாம் ஏன்? இவனுங்கதான் முன்னாள் கவர்ச்சி நடிகைக்கும் தந்தள்ளுவண்டியில் நடமாடும் பிணம்போன்று வாழ்ந்தாலும் கொள்ளையடிக்க துடிக்கும் வடுகனுக்கும் ஓட்டுப்போட்டு தலைவராகும் மடையர்கள் இருக்கும்வரை நாமும் அசிங்கப்படணும் …
திருவள்ளுவரின் பெயர் திருவள்ளுவர் அல்ல. மாறாக அது அவரின் குல பெயர் என்று வாதிடுகின்றனர். சொல்வது யார் என்றால் 10 முனைவர் மாணவர்களுக்கு தமிழுக்காக PhD தந்த பேராசிரியர் முனைவர் கு.ஞானசம்பந்தம். விருமாண்டி படத்தில் நடித்தாரே, அவர்தான் இவர்.
நம்மவர்களுக்கு மானம் ஈனம் சூடு சொரணை கிடையாது. நம்மவர்கள் இவ்வளவு மானங்கெட்ட ஜென்மங்களா?
சரியாகச் சொன்னீர் seerian
தலைப்பே சரியில்லையே !! வான்புகழ் வள்ளுவர், முப்பாலில் உலகை அடக்கிய முதுபெரும் ஞானி. அனுமானங்களுக்கு எட்டாத விண்ணைப் போன்றவர், ஆராய்ச்சிகளுக்கும், கற்பனைகளுக்கும் அப்பாற்பட்டவர். உலகப் பொதுமறையாம் “கடுகைத் துளைத்தேழ் கடலைப் புகட்டி குறுகத்தரித்த” அருமைத் திருக்குறளில், தமிழ், சாதி, மதம், தற்புகழ்ச்சி, தன் வரலாறு, தன் தோற்றச்சிறப்பு என குறுகிய மனப்பான்மையோடு எதையுமே விட்டுச்செல்லாதவர். அந்தப் பெருந்தகைக்கு முதுமைத் தோற்றம் கற்பித்து, தாடி மீசை வரைந்து, ஞானியின் அமைப்பில் உருவம் சமைத்து, கையிலே ஏட்டையும், எழுத்தாணியையும் திணித்து தற்கால மனிதர்கள் படைத்துக்கொன்ட உருவமே திருவள்ளுவர் என்று பெயரில் காட்சிபடுத்தப்பட்டிருக்கிறது. நாமாக உருவாக்கிய உருவத்தை வள்ளுவர் என்று ஓவியமாக்கி, சிற்பமாக்கி திருக்குறள் எனும் காவியம் படைத்த அந்தப் பேரறிவாளனை பெருமைபடுத்துவதாய் நினைத்து நம்மை எதிர்க்கவும், அவமானப்படுத்தவும் நினைப்பவர்கள் இதுபோன்ற சிறுமை செயல்களில் ஈடுபட நாமே வழிவகுத்துத் தருகிறோம். திருக்குறளில் எங்காவது ஓரிடத்தில் எனக்கு சிலை வையுங்கள், வழிபாடு செய்யுங்கள் என திருவள்ளுவர் கூறியுள்ளாரா ? அவர் இதுபொன்ற மலிவு விளம்பரங்களை நிச்சயம் விரும்பமாட்டார் என்பதுதான் நிதர்சனம். அவரைப் போற்றும் அவர் வழி நடக்கும்/நடக்க முயற்சிக்கும் நாமும் இதுபோன்ற எதிர்மறை செய்திகளை தூசெனக்கருதி தூக்கி எறியாமல், மேலும் மேலும் அதைப்பற்றிப் பேசி இதுபோன்ற துக்ஷ்டர்களை ஊக்குவிக்கும் செயலை நாமறியாமலேயே நாம் செய்து வருகிறோம், இந்நிலை மாற வேண்டும். நாம் நமது வாழ்வுக்கு பயனளிக்கும் நல்ல நேர்மறை விடயங்களில் அதிக கவனமும் ஈடுபாடும் செலுத்தி அதை ஊக்குவித்து, நமது வாழ்வனுபவங்களாக்கி நன்மைகளை நமது வாழ்வில் வரவேற்கக் கற்கவேண்டும், எல்லோரும் நலம் வாழ நல்வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன், நலமுடன். நன்றி
இதுப்போன்ற அவலங்கள் ஆந்திரா சார்ந்த பெரிய நடிகருக்கு ஏற்பட்டிருந்தால்
தமிழ்நாடு தீப்பற்றிக்கொண்டு எரிந்திருக்கும்.