கிருஷ்ணகிரி: கர்நாடக – தமிழக எல்லையில் பதற்றம் நிலுவுகிறது. இதனால் கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் துணை ராணுவப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். தமிழக-கர்நாடக எல்லையான ஜுஜுவாடி, அத்திப்பள்ளியில் கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
தமிழகத்திற்கு கூடுதல் தண்ணீர் கொடுக்க உச்சநீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்து இருந்ததை முன்னிட்டு, பெங்களூரு, மைசூரு, மாண்டியா ஆகிய இடங்களில் பயங்கர வன்முறை வெடித்தது. தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டு, பஸ்களுக்கு தீவைத்து எரிக்கப்பட்டது. தமிழக லாரிகளைத் தேடி தேடி கன்னட அமைப்பினர் நேற்று தீ வைத்து எரித்தனர். இதனால் கர்நாடகாவில் நேற்று சிக்கி கொண்ட தமிழக லாரிகளின் டிரைவர்களும், லாரி உரிமையாளர்களும் அச்சத்தில் உறைந்தனர். இந்த வன்முறைக்கு இடையே போலீசார் ஆங்காங்கே நின்று தமிழக வாகன ஓட்டிகளிடம் தமிழக பதிவெண் பிளேட்டை நீக்குமாறு கேட்டுக் கொண்டதால் பல வாகனங்கள் தப்பியதாக தகவல் வெளியாகியுள்ளது.
மத்திய அரசு 10 கம்பெனிகள் கொண்ட கலவர தடுப்பு சிறப்பு பிரிவை சேர்ந்த துணை ராணுவ படையை கர்நாடக மாநிலத்துக்கு உடனடியாக நேற்று அனுப்பியது. ஒரு கம்பெனியில் 100 பேர் என ஆயிரம் பேர் கர்நாடகாவில் கலவரத்தை ஒடுக்கும் பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
மேலும் 5 முதல் 10 கம்பெனி எல்லை பாதுகாப்பு படையினர், இந்திய-திபெத் எல்லை பாதுகாப்பு படை போலீசார் தயாராக இருப்பதாகவும், கர்நாடகா, தமிழக அரசு கேட்டுக்கொண்டால் அந்த படைகளை அனுப்ப தயாராக உள்ளதாகவும் உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தமிழக வாகனங்களுக்கும், உடைமைக்கும், உயிருக்கும் எந்த இடையூறும் ஏற்படக் கூடாது என்பதில் நாங்கள் அக்கறையுடன் செயல்பட்டு வருகிறோம் என்று கூடுதல் போலீஸ் கமிஷனர் ஆர். ஹிதேந்திரா தெரிவித்துள்ளார்.
இந்த எச்சரிக்கையை அடுத்து வாகன ஓட்டுனர்கள் தங்களது வாகங்களின் நம்பர் பிளேட் மீது பெயின்ட் அடித்து மறைத்தனர். உயிரை கையில் பிடித்துக்கொண்டு கர்நாடக எல்லையைக் கடந்ததாக தமிழக லாரி டிரைவர்கள் கண்ணீருடன் தெரிவித்தனர்.
தமிழக-கர்நாடக எல்லையான ஜுஜுவாடி, அத்திப்பள்ளியில் கிருஷ்ணகிரி ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். எல்லையில் நிலவும் சூழல் குறித்து ஆட்சியர் கதிரவன், மாவட்ட எஸ்.பி. ஆய்வு மேற்கொண்டார்.
இதனிடையே இன்றும் பதற்றம் நீடிக்கிறது. கர்நாடக – தமிழக எல்லையில் பதற்றம் நிலுவுகிறது. இதனால் கர்நாடக – தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
கலவரம் செய்பவன் கன்னடன் என்று பொதுவாக சொல்லாதீர்கள். கன்னடர்கள் நல்லவர்கள் தான். கன்னடர்கள் மத்தியில் தமிழர் வழிமரபு அபப்டியே கலந்து இருக்கிறது. கன்னடர்கள் தங்களது குல தெய்வங்கள் தமிழ்நாட்டில் தான் இருக்கிறது என்பதை நான்கு உணர்ந்தவர்கள். அதனால்தான் அவர்கள் அடிக்கடி தமிழ்நாட்டு கோவில்களுக்கு வந்து போகிறார்கள். வடநாட்டு பக்கம் போவதைக் காட்டிலும் தமிழக தெய்வங்களே தம்மை காப்பதாக அவர்கள் உணருகிறார்கள். வடநாட்டு கலாச்சாரத்தை விட தென்னாட்டு கலாச்சாரமே தங்கள் மனதுக்கு நெருக்கமாக இருப்பதை அவர்கள் புரிந்து வைத்தது இருக்கிறார்கள்.
உண்மையான விஷயம் என்னவென்றால், எப்படி தாய் தமிழகத்தில் தமிழர்கள் மத்தியில் வடுக தெலுங்கை கலந்து மறைந்து வாழ்கிறானோ அப்படியே கர்நாடகாவிலும் கன்னடர்கள் மத்தியில் கலந்து வாழ்கிறான். இங்கே தமிழரை ஏமாற்றி ஆட்சி அதிகாரத்தை சுவைப்பது போல அங்கே கன்னடர்களை ஏமாற்றி ஆட்சி அதிகாரங்கள், கல்வி வேலை வாய்ப்புகளை சுவைத்து வருகிறார்கள் வடுக கன்னடர்கள். அங்கே வடுகர்களான ராவ், ரெட்டிகளிடம் தான் ஆட்சி அதிகாரம் இருக்கிறதே தவிர , உண்மை கன்னடர்களிடம் இல்லை. இந்த உண்மை கன்னடர்களுக்கு தெரியாமல் இருக்க வேண்டுமென்பதற்காகத்தான், கன்னடர் உருவில் மறைந்து வாழும் தெலுங்கன், அவர்களுக்கு இனவெறி ஊட்டி, சகோதர தமிழர்களை எதிரிகளாக காட்டி இருவருக்குமிடையில் மோதலை உண்டாக்கி அதில் அதிகார குளிர் காய்ந்து வருகிறான்.
எப்படி இலங்கையில் சிங்களவன் உருவில் மறைந்து, சிங்களவருக்கு, அவர்தம் சகோதர தமிழருக்கும் இடையில் மோதலை உருவாக்கை ஆண்டு கொண்டு இருக்கிறானோ அப்படி. இனவாதம் பேசும் உண்மை கன்னடர்கள் தங்கள் கையில் ஆட்சி அதிகாரம் இல்லை என்கிற உண்மையை இதுவரையில் உணரவே இல்லை. அப்படி உணரும் போது, நான்கு மாநிலங்களும் ஒரே குடையில் இணையும். திராவிடமும், ஆரியமும், இந்திய நிலப்பரப்பை விட்டு தொலையும். தொலைந்த ‘மதராசபட்டினம்’ மீளும்
எது எப்படி இருந்தாலும் மத்திய அரசு இராணுவத்தை அனுப்பி மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க வேண்டியது அவர்களின் கடமையல்லவா…
பறை உம்மை திருத்த முடியாது. எதை எழுதினாலும் இனவெறியானாகவே பறை சாற்றுகிறீர் .
மன்னரே! இனவெறியனாக இல்லாததாலேயே தமிழன் பல இடங்களில் அடி வாங்குகிறான். மற்றவர்கள் எல்லாம் இனவெறியராக இருக்கும் போது தமிழன் மட்டும் ஏன் வெறியனாக இருக்கக் கூடாது?
கலவரம் செய்பவன் கன்னடன் என்று பொதுவாக சொல்லாதீர்கள். கன்னடர்கள் நல்லவர்கள் தான்… ஹி ஹீ ஹீ
மலையாளிகள் அடிபட்டு இருந்தால் இந்த நேரம் ஒவ்வொரு மலையாளிக்கும் ராணுவ பாதுகாப்பு வழங்க பட்டு இருக்கும் …அவர்கள் சக்தி டெல்லியில் உச்சம் ….அனால் இந்த ஈன தகர தமிழா நாட்டு அரசியல் வியாதிகள் ..நடமாடும் பிணம் எல்லாம் டெல்லி அடிமைகள் ..எங்கே தமிழன் சீமான் ஒளிந்து விட்டாரா ?அல்லது இவர் வீட்டிலும் கன்னடம் பேசப்படுகின்றதா ?