நீங்க சொல்லி இந்த மக்கள் கூடவில்லை – ஹிப்ஹாப் ஆதி, சிவசேனாபதிக்கு பதில் தந்த கரு.பழனியப்பன்

palaniappanதமிழகத்தில் நடந்து வரும் ஜல்லிக்கட்டு போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. நேற்று மாலை முதல் ஹிப்ஹாப் ஆதி போராட்டம் திசைமாறியுள்ளது. தயவு செய்து போராட்டத்தை நிறுத்துங்கள் என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இயக்குனர் கரு. பழனியப்பன் ஹிப்ஹாப் ஆதிக்கு பதில் கூறியுள்ளார். “ஆதிக்கு ஒன்று புரியில்லை நீங்க சொல்லி இந்த கூட்டம் கூட வில்லை, அவர்கள் நோக்கம் நிறைவேறிவிட்டால் தானாகவே போராட்டத்தை நிறுத்துவார்கள்.

அது எப்படி முதலமைச்சரை காலையில் பார்த்தவுடன் மாலை எல்லாரும் ஒன்று போல் போராட்டத்தை கைவிடுங்கள் என்று கூறுகிறீர்கள் ஏன் என்று தெரியவில்லை. சிவசேனாதிபதி தான் கூறினார் காளைகள் விலங்கு பட்டியல் இருந்து தூக்கினால் தான் போராட்டம் கைவிடப்படும் என்றார் ஆனால் இப்போ மாற்றி பேசுகிறார்,

இளைஞர்களிடம் நம்பிக்கை இன்னும் வரல, அதான் இப்போ வரைக்கும் போராட்டத்தை கைவிடமுடியவில்லை. ஆகையால் யாரும் போராட்டத்தை நிறுத்த சொல்லாதீரகள் என்று கரு. பழனியப்பன் கூறியுள்ளார்.

-http://www.cineulagam.com