சினிமாக்காரர்களால் தான் எல்லாம் கெட்டுச்சு- போராட்டக்குழு அதிருப்தி

save jallikattuஜல்லிக்கட்டு போராட்டம் எப்படியோ வெற்றிக்கரமாக முடிந்தது. ஆனால், கடைசி நாளான நேற்று எப்படி ஒரு வன்முறை வெடித்தது என்று அனைவருக்கும் தெரிந்தது.

இந்நிலையில் இந்த போராத்தில் ஈடுப்பட்ட சில இளைஞர்கள் ‘நாங்கள் இந்த போராட்டத்தில் எந்த ஒரு அரசியல்வாதி, சினிமாக்காரர்கள் என யாரையும் சேர்க்கக்கூடாது என்று தான் நினைத்தோம்.

ஆனால், லாரன்ஸ் எப்படியோ எங்களை சமதானப்படுத்தி உள்ளே வந்தார், பிறகு அவரே ஏதோ தலைமை ஏற்றது போல் நடந்துக்கொண்டார்.

இந்த ஆர்.ஜே.பாலாஜி, சிம்பு போன்றோர்களும் அப்படித்தான், எதையோ பேசி கைத்தட்டல் வாங்கினார்கள், அவர்களை உள்ளே விடாமல் இருந்தால், இந்த பிரச்சனையே வந்திருக்காது’ என்பது போல் கூறியுள்ளார்களாம்.

-http://www.cineulagam.com