பொலிஸ் அடிச்சா திருப்பி அடி.! இது என் கூற்றல்ல: நடிகர் கமல் எச்சரிக்கை

kamal_1329223f-350x261என் பெயரால் எழுப்பப்படும் வன்முறை அறிவுறைகளும், வாக்குறுதிகளும் உடனே நிறுத்த வேண்டும் என நடிகர் கமலஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், லைவ்டே தமிழ்நாடு எனும் தளத்தில் என் பெயரால் எழுப்பப்ப படும் வன்மறை அறிவுறைகளும் வாக்குறுதிகளும் அவர்கள் கற்பனையே, என் கூற்றல்ல.

போராடும் உத்வேகத்தில் எதையும் சொல்வது குற்றமாகும். எனக்கெதிரான குற்றம் மட்டுமல்ல, நாட்டுக்கும் இளைஞர்களுக்கும் எதிரானது. Liveday Tamil Nadu இக்குற்றம் செய்வதை உடனே நிறுத்தவேண்டும் என கூறியுள்ளார்.

மேலும் அவரது இயக்கத்தாருக்கு அறிவுரை ஒன்றையும் வழங்கியுள்ளார், அதாவது, யாரையும் மரியாதைக்குறைவாக பேசுவதை நம் இயக்கத்தார் செய்யாதிருக்க வேண்டும். நம்மைப்பற்றி எழுப்பப் படும் கேள்விகளுக்கும் அவதூறுகளுக்கும் பதில் தருவது நம் கடமை, பதிலடி கொடுப்பது வன்முறை என குறிப்பிட்டுள்ளார்.

-http://news.lankasri.com