அவர் தொடர்ந்து அவமதிக்கின்றார்- கமல்ஹாசன் மீது போலிஸில் புகார்

kamalகமல்ஹாசன் பேசினாலே எப்போதும் பிரச்சனை தான் போல. அப்படித்தான் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் மனம் திறந்து பேசியிருந்தார்.

இதில் இவர் இந்து மக்களின் மனதை புண்படுத்தும்படி பேசிவிட்டார், மேலும், தொடர்ந்து இந்து மதத்தை பற்றி தவறாக பேசுகின்றார்.

இதனால், அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை கமிஷ்னர் அலுவலகத்தில் இந்து மக்கள் கட்சியினர் புகார் கொடுத்துள்ளனர்.

அதுமட்டுமின்றி விரைவில் கமல்ஹாசன் வீடு முன்பு போராட்டம் நடத்தவுள்ளதாகவும் கூறியுள்ளனர்.

கமல்ஹாசன் என் படத்தை தடை செய்தது ஆளுங்கட்சி தலைவர் தான் என கூறியது குறிப்பிடத்தக்கது.

-http://www.cineulagam.com