சிறையில் பெண்களுக்கு நடக்கும் கொடுமைகள்: உண்மையை வெளியிட்ட பெண் காவலருக்கு நேர்ந்த சோகம்

பழங்குடி பெண்கள் சிறையில் எந்தளவுக்கு சித்தரவதை செய்யபடுகிறார்கள் என்பதை சமூகவலைதளத்தில் எழுதிய துணை சிறை அதிகாரி பணியிடை நீக்கம் செய்யபட்டுள்ளார்.

இந்தியாவின் சட்டிஸ்கர் மாநிலத்தில் உள்ள சிறையில் துணை சிறை அதிகாரியாக பணி புரிபவர் வர்ஷா டோங்ரே.

மாவோயிஸ்ட் தீவிரவாதிகள் அதிகம் நடமாடும் அம்மாநிலத்தில், சந்தேகத்தின் பேரில் பழங்குடி பெண்களை காவல்துறை அதிகாரிகள் அடிக்கடி கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள்.

அங்கு அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகளை பற்றி வர்ஷா சமூக வலைதள பக்கத்தில் எழுதியுள்ளார்.

அதில், சிறையில் இருக்கும் பழங்குடி பெண்களின் மார்பகங்கள் மற்றும் மணிக்கட்டுகளில் மின்சார ஒயர் மூலம் பொலிசார் ஷாக் கொடுப்பார்கள் என கூறியுள்ளார்.

அவர்கள் படும் வேதனைகளை கண்டு நான் மிரண்டு போயிருக்கிறேன் என அவர் எழுதியுள்ளார்.

நமது அரசியலமைப்பு மற்றும் சட்ட அமைப்பில் இது போன்ற மனித நேயமற்ற சித்ரவதைகளுக்கு இடமில்லை.

பழங்குடினர், மாவேஸ்டுகள் ஒழிய வேண்டும் என்றே நினைக்கிறார்கள். அப்படி இருக்கையில், நாட்டின் பாதுகாப்பு படை அந்த பெண்களின் மீது பொய் வழக்கு போடுகிறது.

அவர்களின் வீடுகள் எரிக்கபடுவதோடு, பல பெண்கள் பாலியல் துன்பங்களுக்கும் ஆளாகிறார்கள் என வர்ஷா அதில் தெரிவித்துள்ளார்.

வர்ஷாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலானதை தொடர்ந்து அதை அவர் அழித்துள்ளார்.

ஆனாலும், அவரிடம் இது குறித்து விசாரணை நடத்தியுள்ள காவல் துறை நிர்வாகம், அவரின் பதிவு, நடத்தை மற்றும் பிற விதிமுறைகளை மீறுவதாக உள்ளது என கூறி அவரை பணியிடை நீக்கம் செய்துள்ளது.

வர்ஷா மீண்டும் எப்போது பணியில் சேர்த்து கொள்ளபடுவார் என்ற விவரம் தெரியவில்லை.

-lankasri.com

TAGS: